Cinema and the world of children - Article | சினிமாவும் சிறார் உலகமும்

சினிமாவும் சிறார் உலகமும் – சிந்துஜா

மனித நாகரிகம் தொடங்கிய காலம் தொட்டே நாம் வாழ்வியல் முறையில் பொழுதுபோக்கென்று பலவற்றை பின்பற்றி இருக்கிறார்கள். அவற்றுள் குகை ஓவியங்களும், ஆடல் பாடலுடனே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். பின் மொழி தோன்றியப்பின் ஓவியங்களுக்கு வடிவம் கொடுத்து எழுத்துக்களாக ஓலைகளில் பதித்து வரலாறாகவும் உருவம் பெற்றது. இதே போன்று ஆடலும் பாடலும் ஒன்றாக சங்கமித்து தெருக்கூத்து, மேடை நாடாகமாக இடம் பெற்றது. இப்படி காலம் தொட்டே வேலை நேரம் தவிர பிற நேரங்களில் நாம் பொழுதுபோக்காக கலையில் ஆர்வம் கொண்டுள்ளோம். தெருக்கூத்திலிருந்து நாடகம் , நாடகத்திலிருந்து சினிமா என உருமாற்றம் பெற்றது. இதற்கு நாம் வான்க , பிக்காசோ போன்றெரின் ஓவியங்கள் கூட சொல்லாம். ஆம், ஓவியம் உணர்வை கடந்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. அதை போன்றே ஷேக்ஸ்பியரின் இலக்கியங்கள் நாடகங்களாக வடிவம் பெற்றது. நாடகம் சினிமாவாக மாறியப் பின் நவீன உலகின் பொழுதுபோக்கு அங்கமாக இடம் பெற்றது இந்த”சினிமா”.

சினிமா என்றால் என்ன?

சினிமா அசையும் படங்களை அடுக்கடுக்காக திரையில் காண்பிக்கும் ஓர் காட்சி கலை. சினிமா, ஓலி, ஒளியுடன் படங்களை திரையிடல் என்பதே நவீன கலை உலகின் தொழில்நுட்ப கலை வளர்ச்சி. இந்த காட்சி கலையில் கற்பனை,நட்பு, காதல், குடும்பம்,சூழல் போன்ற காரணிகளை கதைகள் மூலம் கருத்துகள் கொண்டு, உணர்வுகளை வெளிப்படுத்தும் மிடியமாக செயல்படுகிறது சினிமா. இந்த “சினிமா” என்ற சொல் பெரும்பாலும் திரைப்படத் தயாரிப்பு மற்றும் திரைப்படத் துறை, அதன் விளைவாக உருவான கலை வடிவத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. சினிமா வெறும் பொழுதுபோக்கானதாக மட்டுமாக இல்லாமல் அவை நம் உள் உணர்வுகளை கடந்தும் ஓர் திறவுகோல். ஆம் தனிமனித வாழ்கை ,வாழ்வியல்,சமூகம்,சமூக மாற்றம், காலச்சூழல் இவற்றையெல்லாம் காட்சியாக கொண்டே செயல்படுகிறது. சொல்லப்போனால் சினிமா தனி மனித பொழுதுபோக்கை கடந்து ஓரு தெராப்பி.எப்படி இலக்கியங்கள், புத்தங்கள் நாம் வாழ்கையில் ஏதோ ஓரு தாக்கத்தை ஏற்படுத்தி செல்கிறது. இதன் முலம் எழும் உணர்வுகளையும், கதைகளும்,அறிவியல் கருத்துகளும் நமக்கு அடுத்தடுத்து சிந்திக்க வைக்கிறது. ஆனால் அவை நவீன நாகரிக உலகில் எப்போது சந்தை பொருளாக பார்க்க பட்டதோ அப்போதே அதன் அழகையும், உன்மை தன்மையும் குறைத்து கொண்டது. அந்த வணிக சந்தை எதை நினைக்கிறதே அதை தான் நாம் மூலையில் ஏற்றும். இவற்றையெல்லாம் கடந்து நல்ல படைப்புகளும், படைப்பாளார்களும் யதார்த்த சினிமா க்களும் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், அவை மிக மிக குறைவே. இந்திய சினிமாவில் குறிப்பாக குழந்தை சினிமா என்பது அரிதாக இருக்கிறது.

சினிமாவும் குழந்தைகள் உலகமும்

குழந்தைகள் சினிமா என்பது குழந்தைகளை மையமாக கொண்டு எடுக்கும் படங்கள் என்ற பார்வை பரவலாக இருக்கிறது. ஆனால் உண்மையில் குழந்தைகள் சினிமா என்பது குழந்தைகளின் உலகை படம்பிடித்துக் காண்பிப்பதே தவிர குழந்தைகள் மட்டும் என்றல்ல. அதே போன்றே குழந்தை சினிமாவைர கட்டாயம் பெரியவர்களும் பார்க்க வேண்டும். அப்போது தான் ஓரு பரிமாற்றத்தின் வழி இரு வேறு உலகையும் புரிந்து கொள்ள முடியும்.

குழந்தைகளின் உலகில் உள்ள விருப்பு வெறுப்புகளை, கனவுகளை, கேள்விகளை, காட்சிப்படுத்தியிருக்க வேண்டும். குழந்தைகளின் பார்வையில் இந்த உலகம் எவ்வாறாக விரிகிறது என்பதை முதன்மைபடுத்தியிருக்க வேண்டும். குழந்தைகள் அவர்கள் வாழ்கையை எப்படி எதிர்கொள்கிறார்கள், எப்படி நடந்துக் கொள்கிறார்கள். பெரியவர்கள் ஏன் குழந்தைகளின் உலகை புரிந்துக்கொள்ள மறுக்கிறார்கள் போன்ற பதிலாக இருக்க வேண்டும். இந்த பெரியவர்களின் உலகை அவர்கள் புரிந்துகொள்ள எவ்வளவு மெனக்கீடு தேவைப்படுகிறதோ, அவற்றை புரியாதபட்சத்தில் ஏற்படும் ஏமாற்றம் எப்படி பாதிக்கின்றன என்பதையே உலகெங்கும் உள்ள குழந்தை திரைப்பட படைப்பாளர்கள் படமாக்கி வருகிறார்கள்.

இந்தியா போன்ற வளர் இளம் குழந்தைகள் கொண்ட நாடுகளில் கூட குழந்தைகள் படம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. அதே சமயத்தில் இங்கே இன்றைய தேவையும் இருக்கிறது. குழந்தைகள் உலகம் கதைகள், கற்பனையில் விரிவிரிகிறது. இம்மாதிரியான குழந்தை படங்கள் இருவேறு உலகைப் பரிதிப்பளிக்கிறது. அவற்றில் ஒன்று குழந்தைகளுக்கு அபரிதமான ஆற்றலும், அவர்களின் இயல்பை மறந்து பெரியவர்கள் போன்ற செயல்களை மிகைப்படுத்தப்பட்ட பேசுபவர்களையும் படமாக்குபவர்கள், மற்றொன்று வறுமையில் சுழலும் ஏழை குழந்தைகள், ஊரைவிட்டு ஓடி வந்தவர்கள், குழந்தை தொழிலாளர்கள், போட்டி பொறாமை நிறைந்த உலகை எதிர்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள்,காலத்தால் திருடர்கள் ஆக்கப்பட்டவர்களின். இப்படி இரு வேறு உலகை படமாக்கிறார்கள். இதில் முதலில் சொன்னது சினிமாவை கையில் வணிக சந்தை பொருளாக பார்த்து இயல்ப்பை மிகைப்படுத்தி லாபம் ஈட்டுகிறது.
இரண்டாம் வகை திரைப்படங்கள் இங்கே அரிதாகவே படம் எடுக்கப்படுகிறது.

இந்த முயற்சியானது பெரு வெள்ளத்தில் ஓரு துளி மட்டுமே. நமது குழந்தைகள் பார்த்து ரசிக்கும் படங்களில் தொன்னூறு சதவிதம் ஹாலிவுட் படங்களே அதிலும் குறிப்பாக பெரு நிறுவனமான டிஸ்னி, பிக்சர் போன்ற அனிமேஷன் நிறுவனங்களின்படங்களாகவே இருக்கிறது. நான் டிஸ்னிக்கும், பிக்சர்கும் எதிரி அல்ல. அது வகை மோனோப்போலி உலகை சித்தரிக்கின்றது என்பதே. ஆம், அமெரிக்க அனிமேஷங்கள் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவை மையப்படுத்திய படங்களை தயரிக்கின்றது. ஆனால் அது முழுக்க சந்தை பொருளாக்குகிறதோ என்ற ஐயம். இந்திய அளவில் அனிமேஷன் தயாரிப்பு என்பதெல்லாம் இன்னும் தொடக்க கட்டத்தில் தான் இருக்கிறது. ஆனால் இவற்றில் ஜப்பான், சீனா போன்ற நாடுகள் எல்லாம் தரமான குழந்தை அனிமேஷன் படங்களை தயாரிக்கிறது. இதில் ஜப்பானின் திரைப்பட தயாரிப்பாளார் அகிரா குரோசாவாவினுடையது குறிப்படத்தக்கது. கடந்த 5 தசாப்தங்களாக அவருடைய படங்கள் சினிமா வரலாற்றில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அமெரிக்க படங்களை காட்டிலும் ஜப்பானிய அனிமேஷன்கள் சிறப்பானது. ஆனால் அவற்றையெல்லாம்
நாம் குழந்தைகளுக்கு நாம் அறிமுகப்படுத்த கூட இல்லை. ஆனால் அதன் தேவை இருக்கிறது. நாம் நாட்டில் குழந்தை திரைப்படங்கள் திரையிடுவதற்கான திரை அரங்களோ , திரையிடல்களோ கூட இல்லை. தமிழ் மொழியை விட மற்ற மொழிகளில் குழந்தைகள் திரைப்படங்கள் கூடுதலாக இருக்கிறது. குறிப்பாக பெங்காலி, மராத்தி, மலையாள சினிமாவில் குழந்தைகள் படங்களை அதிகமாக இருக்கிறது. இந்த படங்களை கூட திரைப்பட விழாக்களில் மட்டுமே பார்க்க முடியும். அப்படியானால் நாம் எங்கு என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்ற கேள்விகளாக உதிருகிறதுபோலவும்.

குழந்தைகளின் உலகை பிரதானப் படுத்தி ஈரானிய சினிமா உலக அரங்கில்தனி இடம் பதித்த இருக்கிறது. இதில் மஜித் மஜிதியின் படங்களை சொல்லாமல் இருக்க முடியாது. ஈரானிய படங்களை போன்ற கொரிய படங்களும் குறிப்படத்தக்கது. சினிமாவின் மூலம் குழந்தைகளுக்கு பொழுதுபோக்குடன் அவர்களின் உலகை புரிந்து கொள்ள உதவும் ஓரு கருவியாக செயல்படுகிறது. குழந்தைகளின் உலகம் கற்பனையால் நிறைந்தவை. அதற்குள் விலங்குகள் பேசும், மரங்கள் பாட்டு பாடும், மேகக் கூட்டங்கள் ஆட்டமாடும் . ஆம், உண்மையில் இது தான் குழந்தைகள் உலகம்.

இந்தியாவில் சத்யஜித் ரேவின் கேமரா கண்கள் குழந்தைகளின் மனதை படம் பிடித்து காட்டுவதில் ஜாம்பவான்.இவரின் படங்கள் வெறும் பொழுதுபோக்கை மையமாக இல்லாமல் சமூக பிரச்சனைகள், குழந்தைகளின் உணர்திறனை மதிக்கும் ஓர் படைப்பாளர். குழந்தைகளைக் கவரும் வகையில், அற்புதமான கதை, இசை , நடனம் இவற்றை கையாள்வதில் கைதேர்ந்தவர். குழந்தைகளின் உலகை பார்க்கும் போது குழந்தைகள் வளரும் போது அவர்களோடு சேர்ந்து நாமும் வளரும் அனுபவத்தை பெறுவோம்.இப்படியான நல்ல பெங்காலி படங்களின் மூலம் சத்யஜித் ரேயின் (கூபி கானே பாகே பாய்னே, தி போஸ்ட்டு மேன்) கலை உலகில் உங்கள் குழந்தையின் ஆர்வத்தை வளர்க்கவும்.

இந்தியாவில் குழந்தை சினிமாவின் தேவையை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பல இடங்களில் பேசினார். அதை தொடர்ந்து இந்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் (Ministry of Information and Broadcasting) Children’s Film Society, India என்ற அமைப்பை 1955ம் ஆண்டு தொடங்கினார். இந்த அமைப்பின் மூலம் இதுவரை சுமார் 114 படங்கள், 45 அனிமேஷன், 9 பட்டப் ஷோ, 52 குறும்படங்கள் வெளிவந்துள்ளது. இந்திய மக்கள் தொகைக்கு இது மிக மிக குறைவே. இதனை தொடர்ந்து ஆண்டு தொரும் குழந்தைகள் திரைப்பட விழாவையும் ” Golden Elephant” என்ற பெயரில் குழந்தைகள்
தினத்தன்று கொண்டாடப்படுகிறது. இது மாதிரியான முயற்சிகள் பாராட்குரியவை.ஆனால் இவை பெருங்கடலில் ஓரு துளி மட்டுமே. கடந்த 2022 ஆண்டு சிஎஃப்எஸ் இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சி கழகத்துடன் (National Film Development Corporation, India) இணைக்கப்பட்டது.

குழந்தைகள் சினிமாவை இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் குழந்தை திரைப்பட விழாவை நாடு, மொழி கடந்து கொண்டாடி குழந்தைகளுக்கான பரந்த உலகை காட்ட வேண்டும் என்ற கோரிக்கை யை வைப்பதோடு எல்லா மாநிலங்களிலும் கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு திரையிடல், திரைப்பட தொழில்நுட்ப வகுப்பு எடுத்தால் கட்டாயம் நாமும் நல்ல படைப்பாளர்கள், நல்ல நல்ல குழந்தை அனிமேஷன் படங்களை எடுக்கலாம்.

இந்திய அளவில் நான் ரசித்த படங்களுக்குள் சில தமிழில் காக்கா முட்டை- Kakka Muttai 2)பெங்காலியில் கூபி கானே பாகே பாய்னே Goopy Gyne Bagha Byne, The Postman 3)ஹிந்தியில் தாரே ஜமீன் பர் –Taare Zameen Par 4) அஸ்ஸாமியில் வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் – Village Rockstars ,டோரா -tora 5) மலையாளத்தில் 101 சோடியங்கள் -101 Chodyangal 6) குஜராத்தி அனிமேஷன் படமான மன்பசாந் -Manpasand 7) தொலுகுவில் அமுல்யம் -Amulyam 8) மராத்தியில் கில்லா -Killa 9) கன்னடத்தில் கேர் ஆப் புட்ஃபாத்புட்ஃபாத்- Care of Footpath,10) கட்டூ -Gattu

உலக அளவில் குழந்தைகளுக்கான எனக்கு பிடித்த 10 படங்களை இங்கே பதிவிடுகிறேன்

1)Children of Heaven, 2)Where is my friend home? 3) The Red Baloon, 4) Lost in the desert 5) The Blue Umbrella 6) Jumping over puddles, 7) The Blackboard 8) The Little Prince 9) The Kid 10) When Marnie was there

தமிழில் கலைப்படங்கள் மிக குறைவாக இருப்பதால் தமிழக அரசு சிஎஃப்எஸ் யுடன் இணைந்து நல்ல குழந்தை படங்களை தயாரித்து இயக்குனர்களை ஊக்குவித்து, நிதிஉதவி அளித்து அதனை வெளியிடுவதற்கு திரை அரங்களையும் ஏற்படுத்தி தந்தால் இந்த நிலைமாறுவதற்கான வடிகாலாக அமையும். குழந்தைகள் உலகை மேம்படுத்த நல்ல புத்தகங்கள், திரைப் பள்ளிகள், திரைப்படங்கள், நாடகங்கள், திரை அரங்களையும் அமைத்து தந்தால் ஓர் சீர் பெற்ற சமூகத்தையும் மீது அக்கறை கொண்ட நல்ல மனிதர்களாக வளர உதவும் என்பதில் மாற்று கருத்தில்லை.

 

எழுதியவர் 

சிந்துஜா

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *