மூன்றாவது முறையாக விண்வெளிக்கு சென்று இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் திட்டமிட்டபடி ஜூன் 26 திரும்பி வரவில்லை.. காரணங்கள் பல.. இந்தியாவின் பெருமைகளில் ஒன்றாக கருதப்படும் நமது வம்சாவழியில் தோன்றிய அமெரிக்காவின் விண்வெளி வீராங்கனை ஜூன் மாதம் ஐந்தாம் தேதி அன்று விண்வெளி ஆய்வு மையத்திற்கு விஜயம் மேற்கொண்டார். அவர் செல்லும்போதே அவருடைய விண்கலம் சரியாக இல்லை என்றும் ஹீலியம் வாயுவினுடைய கசிவு இருப்பதாகவும்.. தகவல்கள் வந்தன.. ஏற்கனவே இந்த காரணங்களுக்காக இரண்டு முறை பயணங்கள் ஒத்திவைக்கப்பட்டன.. நாசா விஞ்ஞானிகள் வில்லியம்சின் ராக்கெட்டில் ஓட்டை இருப்பது தெரிந்தும் கைவிட்டிருக்கிறார்கள் என்கிற செய்தி இப்போது வெளியாகி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
நாசா விஞ்ஞானி மற்றும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் அவருடைய சக விஞ்ஞானி புச் வில்மர் என்பவரோடு சமீபத்தில் அதாவது ஜூலை 5 அன்று ஸ்டார் லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர். இருப்பினும் இந்த பயணம் அவருக்கு நிம்மதியைக் கொடுக்கவில்லை இத்தனைக்கும் அவர் விண்வெளிக்கு செல்வது இது முதல் முறையல்ல. ஏற்கனவே அவரது ராக்கெட் வாயு கசிவு காரணமாக இருமுறை அவரது பயணம் தள்ளிவைக்கப்பட்டது.. இப்போது விண்வெளி ஆய்வு மையத்தில் ஸ்பேஸ்பாக் எனப்படும் எண்டரோபக்டர் புகன்டென்சிஸ் (Enterobacter bugandensis) எனும் வகை நுண்பூச்சிகள் விண்வெளி ஆய்வு கூடத்தில் சுனிதா வில்லியம்ஸ் உட்பட விண்வெளி வீரர்களை தாக்கி இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இதன்காரணமாக அவர்களது சுவாசமண்டலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் ஏனைய உடல் நல பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தற்போது நாசா தெரிவித்து உள்ளது.
சர்வதேச விண்வெளி நிறுவனம் இது போன்ற சிக்கல்களில் இருந்து தங்களை விடுவித்துக்கொண்டு விண்வெளி வீரர்கள் வில் மோர் மற்றும் சுனிதா இருவரும் தேவைப்பட்டால் விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியேறி வாய்ப்பிருந்தால் பூமிக்கு திரும்பட்டும் இன்று அறிவித்துள்ளது. ஆனால் உந்துவிசை அமைப்பு தரவை பகுப்பாய்வு செய்ய மிஷன் குழுக்களுக்கு தேவையான நேரத்தை அனுமதிக்கும் வகையில் அவர்கள் திட்டமிடப்பட்ட காலத்தையும் தாண்டி சுற்றுப்பாதையில் ஆபத்தான முறையில் தங்கியுள்ளனர். இதற்கு முன்பு விண்வெளிக்கு சென்றபொழுது தொடர்ச்சியாக 12 மாதங்கள் விண்வெளியில் தங்கி சாதனை படைத்தவர் சுனிதா வில்லியம்ஸ்.. அவர் இதற்கெல்லாம் அச்சப்படுவர் அல்ல. அவரது முதல் விண்வெளி பயணத்தின் போதே 29 மணிநேரம் மற்றும் 17 நிமிடங்கள் விண்வெளி களத்திற்கு வெளியே தனது நடைகளை மேற்கொண்டு சாதனை படைத்தவர்.
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் கழித்தது ஒரு பெண்ணின் அதிகபட்ச விண்வெளி நடைநேரம் அதாவது 50 மணி நேரம் ஆகும். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு எக்ஸ் பெடிஷன் 14 மற்றும் 15 ஆகியவற்றில் அவர் ஏற்கனவே உறுப்பினராக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.. சுனிதா வில்லியம்ஸ் 1965இல் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் பிறந்தவர்.. இவரது தந்தை தீபக் பாண்டியா குஜராத்தில் மெஹ்சானா மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி நரம்பியல் நிபுணர்.. இவருடைய தாயார் சிலரிபோனி பாண்டியா.. இவர் ஸ்லோவேனியா நாட்டை சேர்ந்தவர்.
எனவே சுனிதா வில்லியம்ஸ் இந்தியாவில் சுனி என்றும் ஸ்லோவேனியாவில் சோனிகா என்றும் செல்லப்பெயர் பெற்றவர்.. விண்வெளிக்கு முதல் முறை சென்ற பொழுது இந்திய வம்சாவழியையும் ஸ்லோவேனியாவின் வம்சாவழியையும் கொண்டாடும் வகையில் உணவுப்பொருட்களான சமோசாவையும்.. ஸ்லோவேனியாவின் சொத்து இறைச்சியையும் உடன் எடுத்துச்சென்றார்.. இந்தியாவின் தேசிய கொடியையும் ஸ்லோவேனியாவின் தேசிய கொடியையும் நெஞ்சில் குத்தி இருந்தார்.
ஃப்ளோரிடாவில் மேலாண்மை முதுகலை அறிவியல் பட்டம் பெற்ற பின் சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவின் கடற்படையில் விமானியாக அந்த ராணுவத்தோடு இணைந்தார். கடற்படை ஏவியேட்டர்ராக நியமிக்கப்பட்டார். 1998இல் ஜான்சன் வில் விண்வெளி மையத்தில் தன்னுடைய விண்வெளி வீரர் பயிற்சியை தொடங்கினார். அந்த ஆண்டில் விண்வெளி வீரர் திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது 30க்கும் மேற்பட்ட விமான வகைகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட விமான ஓட்டங்களை பதிவு செய்து விண்வெளி வீராங்கனை தேர்வில் முதலிடம் பிடித்தார். 2006ஆம் ஆண்டு டிசம்பர் 9 அன்று.. எக்ஸ்பெடிஷன் 14 குழுவில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டார். 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 அன்று விண்வெளியில் மராத்தான் ஓடிய முதல் நபர் எனும் சாதனையை சுனிதா வில்லியம்ஸ் அடைந்தார்..
இந்திய வம்சாவளி.. அதிககாரமான உணவுகளையும் கீரை போன்ற கூட்டு பொரியல் சமாச்சாரங்களையும் இவருக்காகவே நாசா தயாரித்து அனுப்புவது வழக்கம். சமீபத்தில் கூட மைக்கேல்லோபஸ் அலெக்ரியாவால் அமெரிக்கா ஒற்றைவின் பயண சாதனையை ஒரு பெண்ணின் நீண்ட ஒற்றை விண்வெளி பயணத்திற்கான சாதனையாக்கி ஒரு முழு வருடமும் விண்வெளியில் இருந்த பெருமையை சுனிதா வில்லியம்ஸ் பெற்றார் .. அவரைப் பற்றி நான் அறிந்து கொண்டதில் மிகவும் சுவாரசியமான இரண்டு விஷயம் உண்டு. அவர் ஃபெடரல் மார்ஷல் ஆன மைக்கேல் ஜேம்ஸ் வில்லியம்ஸ்ஐ மணந்தார். 20 ஆண்டுகளாக அற்புதமாக இருவரும் வாழ்ந்து வருகின்றனர்.. பதிலாக ஹெலிகாப்டர்களைதான் அவர்கள் பயன்படுத்துகின்றனர் என்பது முதல் சுவாரஸ்யமான விஷயம். இரண்டாவது மிக சுவாரசியமான விஷயம் சுனிதா வில்லியம்ஸ் அகமதாபாத்தில் மிக கொடுமையான நில அதிர்வுக்கு பின் குடும்பத்தை இழந்த ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பது.
சுனிதா வில்லியம்ஸ் குஜராத்தில் சபர்மதி ஆசிரமம் மற்றும் அவரது பூர்வீக கிராமமான ஜூலாசனுக்கு அடிக்கடி வந்து செல்கிறார்.. விண்வெளிக்கு மகாத்மா காந்தியின் சத்திய சோதனை புத்தகத்தை எடுத்துச்சென்றவர் அவர்.. 2007ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த பொழுது பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கை சந்தித்து கல்வியில் நிகழ்த்தப்பட வேண்டிய அறிவியல் தொடர்பான புரட்சிகர மாற்றங்களை முன்மொழிந்தவர் சுனிதா வில்லியம்ஸ்.
நாசா விண்வெளி ஆய்வியல் விருது, ஸ்லோவேனியாவின் கோல்டன் ஆர்டர் வருது, அமெரிக்காவின் கடற்படை பாராட்டு பதக்கம் என்று பெற்றிருந்தாலும், இந்தியாவின் பத்மபூஷன் விருதை பெரிதாக மதிப்பவர்.. தற்போதைய இக்கட்டான சூழலை எதிர்கொள்வதில் தைரியம் பொருந்தியவர் சுனிதா வில்லியம்ஸ்.. சர்வதேச விண்வெளி ஆய்வுமையத்திற்கு செல்லும் வீரர்கள் வீராங்கனைகள் யாருடைய உத்தரவுக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை. அவர்கள் நினைத்தால் உடனடியாக தங்களுடைய விண்கலன்களில் 6 மணிநேரம் பயணம் செய்து புவிக்கு திரும்பி விட முடியும்.. ஸ்டார் லைனர் என்னும் சுனிதா வில்லியம்ஸ் பயணித்த விண்கலத்தில் ஏற்பட்டிருக்கும் கோளாறுகளை அவரே சரி செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைக்கப்படுகின்றன.. தற்போது எலான் மஸ்கின் உடைய ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் குழு விண்வெளியில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸை மீட்டு புவிக்கு அழைத்துவர தங்களால் முடியும் என்று சவால் விட்டிருக்கிறார்கள்..
ஒருவேளை திரும்பிவரும் போது நாசாவின் போயிங் ஸ்டார் லைனர் சரியாக பயணிக்காத நிலை ஏற்பட்டால் விண்வெளியிலேயே சுனிதா வில்லியம்ஸ் காணாமல் போய் விடுகிற ஆபத்து இருக்கிறது என்பதை வல்லுநர்கள் எச்சரிக்கையாக தெரிவிக்கிறார்கள். மொத்தத்தில் இப்போது விண்வெளி ஆய்வுமையத்தில் பூச்சி பிரச்சனை.. விண்வெளியில் இருந்து புவிக்கு திரும்புகின்ற ராக்கெட்டில் கோளாறு…. ஆக சுனிதா வில்லியம்ஸ் இந்நிலை நம்மை நடுங்க வைக்கிறது .
அவர் திரும்பி வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாகவும் விரைவில் பத்திரமாக மீட்கப்படுவார் என்றும் நாசா நேற்று அறிவித்துள்ளது. இதையெல்லாம் மீறி தற்போதுதான் எடுத்திருக்கும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு ஒரு நிமிடத்திற்கு 17 படங்கள் என்று சுனிதா வில்லியம்ஸ் தொடர்ந்து புவிக்கு அனுப்பி வருகிறார்.. என்கிற செய்தி அவரது துணிச்சலை காட்டுகிறது. விரைவில் திரும்பி வாருங்கள் சுனிதா வில்லியம்ஸ்!நீங்கள் மிகவும் விரும்புவதாக சொல்லப்படும் கிரிக்கெட்டின் டி- 20 உலகக்கோப்பை சாம்பியன்ஷிப் இப்போது உங்கள் அமெரிக்காவிலேயே நடந்து வருகிறது.. இறுதி ஆட்டத்துக்கு முன் உங்களை எதிர்பார்க்கிறோம்.
எழுதியவர்:
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
ஸ்டார்லைனரால் இயலாதாதை ஸ்பேஸ் Xநிகழத்திக்காட்டும் என நம்பலாம். சினிதாவின் ஆயுள் கெட்டி
சார் இது மிகவும் துரதிருஷ்டமானது ஹீலியம் கழிவு முன்னே தெரிந்திருந்தும் நாசா சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு அனுப்பினார்கள் ஒரு மிகத் திறமையான விண்வெளி வீரர் அவர் பெண் வீரர்களில் மிகவும் தைரியமானவர் பூமியிலிருந்து விண்வெளிக்கு செல்வதை விட திரும்பி வருவது தான் மிகவும் கடினமானது விண்கலத்தை மிகவும் கட்டுக்கோப்பாக சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு கொண்டு வருவது என்பது மிக முக்கியமானது இந்த மாதிரி நுண்ணுயிர் அட்டாக் என்பது மிகவும் வருத்தத்திற்குரியது போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் பூமிக்கு வருவது என்பது ஆபத்தானது அதனால் இப்போது எல்லோருடைய வேண்டுதல் என்பது சுனிதா வில்லியம்சை மிக விரைவாக ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் பூமிக்கு ம கொண்டு வருவது என்பது ஆகும் சார் மிகவும் அருமையாக இந்த கட்டுரையை எழுதி உள்ளீர்கள் .
விண்வெளி முதல் எல்லாத் துறைகளிலும் தங்களின் ஆழமான அறிவுத்திறன் எல்லோரையும் சென்றடைந்து இருக்கிறது என்பது மிகவும் சந்தோசமான விஷயமாகும்
தங்களின் எழுதுதல் மேலும் தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்💐💐💐🙏🙏
மிகத் துல்லியமாக ஆய்வு செய்து கவனமாக எழுதியிருக்கிறார். பாராட்டுகள்.