வாழ்த்துக்கள் முத்துப்பாண்டியன்.. நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளின் கனவை நிறைவேற்றிவிட்டீர்கள்..!
கர்நாடகாவில் சித்ரதுர்காவில் உள்ள இந்தியன் ஏரோநாட்டிகல் டெஸ்ட் ரேஞ்சில் ஜூன் 23 அன்று நிகழ்த்தப்பட்ட பிரம்மாண்ட சாதனையை உலகமே திரும்பி பார்க்கிறது.. புஷ்பக் ( Pushpak ) ஏவுகலம் புவியை நோக்கி திரும்பி வந்து தான் எங்கிருந்து புறப்பட்டோம்மா அதே இடத்திற்கு எந்த செய்கூலியும் சேதாரமும் இன்றி வந்து சேர்ந்ததை ஆச்சரியத்தோடு நாசா முதற்கொண்டு திரும்பிப் பார்க்கிறது..
இஸ்ரோவின் இந்த அற்புதமான திட்டத்தின் திட்ட இயக்குனர் தமிழகத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டியன்!. அற்புதமான அந்த இளைஞர் இந்த பிரம்மாண்டத்தை நமக்காக சாதித்துக் கொடுத்திருக்கிறார்
2006 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன்.. மறுபயன்பாட்டு ராக்கெட் திட்டத்தை ஆய்வு முறையில் இந்தியா தொடங்கியது . ஏறத்தாழ உலகம் முழுவதுமே அந்த ஆண்டில் தான் இத்தகைய திட்டங்களுக்கு இலக்குடன் கூடிய நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் தொடங்கப்பட்டன. இந்த விஷயத்தை சற்று அருகில் சென்று புரிந்துகொள்வது இந்த கட்டுரையை நீங்கள் முழுவதுமாக உள்வாங்கிக் கொள்ள உதவும்.
ஒரு ராக்கெட்டை அதாவது ஏவுகலத்தை விண்வெளிக்கு செலுத்துவதற்கு பல கோடி ரூபாய் செலவாகும் அப்படி செலுத்தப்படுகின்ற அந்த ஏவுகணைகள் தாங்கள் சுமந்து செல்கின்ற செயற்கைகோள்களை விண்ணில் நிறுத்திவிட்டு அப்படியே கீழே விழுந்து விடுகின்றன. இப்படி விழுகின்ற பல பாகங்களை உலகம் முழுவதும் சென்று தேடி எடுத்துக்கொண்டு வருவார்கள்… காரணம் மிக பெரிய செலவு
இப்படி வீணாக்கப்படுவதை விட ஒரு விண்கலம் வானை நோக்கி பறந்துவிட்டு தன் கடமையை முடித்துவிட்டு தன்னுடைய இடத்திற்கு பத்திரமாக எந்த விதமான சேதாரமும் இன்றி திரும்ப வந்து நிலைகொள்வதை விண்வெளி ஊர்தியியல் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக வேகமாக ஆய்வுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுகணை வாகனம் புவியின் மேற்பரப்பில் இருந்து விண்வெளிக்கு லோடுகளை எடுத்துச்செல்லும் போது மீட்டெடுக்க கூடிய மற்றும் திருப்பி அனுப்பக் கூடிய பாகங்களை இணைத்து ஏவுகணை வாகன பாகங்களை இதற்காக பிரத்தியேகமாக தயாரித்து வழங்குவதை இந்த ஆய்வு முன்னெடுக்கிறது.
சமீபத்தில் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் (Elon Musk, SpaceX) நிறுவனம் இப்படியான மீண்டும் பயன்படுத்தக் கூடிய ஏவுகணை வாகனங்களை உற்பத்தி செய்வதில் வெற்றி கண்டது என்பது உலகம் அறிந்த செய்தியாகும். மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுகணை வாகனங்கள் கூடுதல் ஏவிய நிக்ஸ் மற்றும் உந்து சக்தியை கொண்டிருக்கலாம். அவை அவற்றின் செலவழிக்ககூடிய ஆற்றலை விட அதிக ஆற்றலைக் கொண்டிருக்க வேண்டும். மீண்டும் பயன்படுத்தப்பட்ட பாகங்கள் வளிமண்டலத்தில் நுழைந்து அதன் வழியாக செல்ல வேண்டி இருக்கும். எனவே அவை பெரும்பாலும் வெப்பக்கவசங்கள் கட்ட துடுப்புகள் மற்றும் விமான கட்டுப்பாட்டு மேற்பரப்புகள் உடன் பொருத்தப்பட வேண்டும். ஏறக்குறைய விமானத்தை போலவே இயங்குகின்ற ராக்கெட்டை நாம் கற்பனை செய்ய வேண்டி இருக்கும்.
குறைந்தபட்சம் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து ஒற்றை நிலை சுற்றுப்பாதைக்கு மீண்டும் பயன்படுத்த தகுந்த ஏவுகணைகளை அறிவியல் புனைகதைகளில் நாம் காணலாம். 1960கள் மற்றும் 70களில் முதல் மறுபயன்பாட்டு ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டன. இவை ஸ்பேஸ் ஷட்டில் என்று அழைக்கப்பட்டன. இந்த திட்டங்கள் 2000 ஆண்டு முதல் தனியார் விண்வெளி பயண நிறுவனங்களின் பலவகையான முயற்சிகளுக்குப் பிறகு வெற்றியும் கண்டன… நாசாவின் மெக்டொனால்ட் டக்ளஸ் 1991இல் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மிக தீவிரமாக ஒரு விமான சோதனை போலவே நடத்தப்பட்டது. இந்த திட்டத்தில் எழுத்தாளர் ஜெர்ரி பூர்ஸ்லின் என்பவருடைய பல வகையான கற்பனைகள் சேர்க்கப்பட்டன. தேசிய விண்வெளி கவுன்சிலின் தலைவர் நாகுவேல் என்பவர் ஜெனரல் கிராம் மேக்ஸ் ஹண்டர் போன்றவர்களோடு இணைந்து இந்த திட்டத்திற்கு பெரிய அளவில் விளம்பரம் கொடுத்தனர்.. ஹண்டர் 1985இல் தி ஆப்பர்டியூனிட்டி என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார்.. இந்த கட்டுரையின் நகல் என்னிடம் உள்ளது. ஒரு முறை அனுப்பப்பட்ட ராக்கெட்டுகளை திரும்பத் திரும்ப எட்டு முறை பயன்படுத்த முடியும் என்று அந்த கட்டுரை முன் மொழிந்தது. இந்த கட்டுரையை அடிப்படையாக வைத்துதான் மெக்டொனால்ட் டக்ளஸ் திட்டம் வகுக்கப்பட்டது. இந்த திட்டம் செங்குத்தாக புறப்படும் ஒரு ராக்கெட் செங்குத்தாக வேதரை இறக்கம் ஆவதை கற்பனை செய்தது. அதற்கு சாத்தியமே இல்லை.
1990 முதல் 2000 ஆண்டு வரை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஏரியன் ஐந்து திட்ட திட ராக்கெட் பூஸ்டர்களை உலகில் எங்கே விழுந்தாலும் கண்டுபிடித்து மீட்டெடுத்து மீண்டும் பயன்படுத்துகின்ற சாதனையை தொடங்கியது. வணிக முயற்சிகள் ராக்கெட் லைன் கிறிஸ்லர் மற்றும் ரோட்டரி ராக்கெட் என்பனவாக உருவாகி இறுதியாக தற்பொழுது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஆயிரக்கணக்கான கோடி செலவு செய்து எலான் மஸ்கிற்கு திரும்ப திரும்ப பயன்படுத்தத்தக்க ராக்கெட்டுகள் விஷயத்தில் பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. இது ஒரு பெரிய பகடி ஆட்டம் ஆகும். சிறந்த NASA விஞ்ஞானிகளையும் உலக அளவிலான விஞ்ஞானிகளையும் எலான் மஸ்க் (Elon Musk) பெரும் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறார் என்று அவர் மீது அரசாங்கங்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றன.
இப்போது இந்தியாவின் இஸ்ரோ (ISRO) சாதனைக்கு திரும்புவோம். 2006 முதல் தொடர் முயற்சிகள் 300க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு. உலகத்திற்கு பல நாடுகளுக்கு பயணம் செய்து பயிற்சி பெறுகின்ற பெரிய பொருட்செலவை குறைப்பதற்காக நம் நாட்டிலேயே அவற்றை கற்றுக்கொள்ள இல்ல சூழ்நிலையை உருவாக்கினார்கள். RLV தரையிறங்கும் பரிசோதனையில் மூன்றாவது தொடர்ச்சியான வெற்றியை ஜூன் 23 அன்று அடைந்தோம்.
RLV- LEX 2 முதலிரண்டு சோதனைகள் சென்ற ஆண்டு நிகழ்த்தப்பட்டன. ஆனால் இந்த முறை நடந்திருப்பது மிக துல்லியமான சோதனையாகும். இந்திய விமானப்படையின் சினூக் ரக ஹெலிகாப்டரில் இருந்து 4.5 கிலோமீட்டர் உயரத்திலிருந்து புஷ்பக் ( Pushpak ) என்று பெயரிடப்பட்ட சிறகுகள் கொண்ட வாகனம் விடுவிக்கப்பட்டது.. 4.5 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள ரிலீஸ் புள்ளியில் இருந்து புஷ்பக் ( Pushpak ) குறுக்கு வரம்பு திருத்தும் சூழ்ச்சிகளையெல்லாம் தன்னாட்சி முறையில் கையாண்டு ஓடு பாதையை நெருங்கி ஓடு பாதை மையத்தில் மிகச் சரியாக தரை இறக்கப்பட்டது.. இந்த வாகனத்தில் குறைந்த லிப்டூ டிராக் என்கின்ற ஒரு ஏரோடிக் உள்கட்டமைப்பு செயல்படுத்தப்பட்டு இருந்தது. இது தரையிறங்கும் வேகம் மணிக்கு 320 கிலோமீட்டர் ஆகும் (இது வணிக விமானத்திற்கு 235 கிலோமீட்டர் மற்றும் பொதுவான போர் விமானத்திற்கு 250 கிலோமீட்டர் என்கிற இரண்டு வேகத்தையும் கடந்த அதிவேகம் ஆகும்..)
இந்தப் பணி விண்வெளியிலிருந்து திரும்பும் மனிதர்களை ஏற்றிச்செல்லும் வாகனத்திற்கான அணுகுமுறை மற்றும் தரையிறங்கும் இடை முகம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அதிவேக தரையிறங்கும் நிலைமைகளை உருவாக்கி சோதித்திருக்கிறது மறுபயன்பாட்டு ஏவுகணை வாகனத்தில் வளர்ச்சிக்கு தேவையான மிக முக்கியமான தொழில்நுட்பங்களை பெறுவதில் இஸ்ரோவின் நிபுணத்துவத்தை இந்த திட்டம் வெற்றி அடைந்தது என்பது உறுதிப்படுத்துகிறது.
ஓகே இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் இந்திய விமானப்படை வானூர்தி மேம்பாட்டு நிறுவனம் வான்வழி டெலிவரி ஆராய்ச்சி உட்பட பல நிறுவனங்கள் சேர்ந்து கூட்டு முயற்சியாக இந்த வெற்றியை கொண்டாடலாம். ஆனால் இந்த பின்னணியில் ஜெ.முத்துப்பாண்டியன் இன்னும் தமிழகத்தினுடைய இளைஞர் மிஷன் இயக்குநராக இருந்து செயல்பட்டிருக்கிறார். இந்த பணியின் இணை இயக்குநரான பி. கார்த்திக் அவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது நமக்கெல்லாம் பெருமை.
அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பிய, ஸ்பேஸ் ஏஜன்சி போன்றவை இதுவரை மறுபயன்பாட்டு ஏவுகல திட்டத்தில் வெற்றியடைந்தவை ஆகும். ஆனால் அவை ஒரு முறை இரு முறை மட்டுமே பரிசோதித்து முயற்சிகளை கைவிட்டன. எலான் மஸ்கின் உடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பெருவெற்றி கண்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக மறுபயன்பாட்டு ராக்கெட் தொழில்நுட்பத்தில் நம்முடைய நாடு முன்னேறியிருக்கிறது என்பது உலகிற்கு நாம் விடுக்கும் செய்தியாகும்.. 2006 முதல் 18 வருட கால நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளின் கனவை நிறைவேற்றியதற்காக திட்ட இயக்குனர் முத்துப்பாண்டியனையும் அவரது குழுவையும் பாராட்டுவோம்….
டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் எஸ்.எல் வீராக ராக்கெட்களை உள்நாட்டிலேயே தயாரித்து விண்வெளிக்கு அனுப்பிய அந்த சாதனைக்கு ஒப்பானது. தற்போது முத்துப்பாண்டியன் குழுவினர்கள் ஏற்படுத்தியிருக்கும் இந்த சாதனை.. விஷசாராயம் மரணங்கள், நீட் தேர்வு, நெட் தேர்வு ஊழல்கள், இவற்றையெல்லாம் மீறி ஒரு நம்பிக்கை வெற்றிக்கதையாக இளைஞர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய இந்த அறிவியல் வெற்றியை கண்டிப்பாக வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும். இந்த வெற்றியை அங்கீகரித்து தற்போது கூட்டணி அரசாக மாறி உள்ள மோடி அரசு இஸ்ரோ (ISRO) சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளின் சம்பள பாக்கியயை விடுவிக்க வேண்டும் என்று மனம் பதறுகிறது.
எழுதியவர்:
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தமிழ்நாட்டை சேர்ந்த ஜெ. முத்து பாண்டியன் எங்கள் SMT குடும்பத்தின் மூத்ததவர். உடன் பிறந்த சகோதரர் என்பதில் பெருமை கொள்கிறோம்