பூர்வகுடிகளான செவ்விந்தியர்களின் கல்லறை மேல்தான் நவீன அமெரிக்கா எழுப்பப்பட்டது என்பது வரலாறு. 16-ம் நூற்றாண்டில் ஆப்பிரிக்கர்கள் அமெரிக்காவுக்கு அடிமைகளாகக் கொண்டு வரப்பட்டார்கள். இவர்கள்தான் அமெரிக்காவைக் கட்டி எழுப்பியவர்கள். ஆனால் அவர்கள் விலங்குகளைப் போலவே அமெரிக்கர்களால் நடத்தப்பட்டனர். அடிமைகள் பொருட்களைப் போல் ஏலம் விடப்பட்டார்கள். ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்பது அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் தாரக மந்திரம் என்றாலும், அமெரிக்க அரசமைப்பும்கூட அடிமை முறைக்கு ஆதரவே அளித்தது. 1865-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் அடிமை முறையை ஒழிக்கும் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார். தொடர்ந்து, அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்கருக்கான வாக்குரிமையைப் பற்றி அவர் பேசிவந்ததால் தன் உயிரையும் அவர் பறிகொடுத்தார். அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்க பின்னணி கொண்ட ஒபாமா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் காலம் வரை எவ்வளவோ மாற்றங்களை அமெரிக்கா கண்டுவிட்டாலும் இன்னும் அடிமைத்தனம் தொடர்கிறது.
இனவெறுப்பால் வார்த்தெடுக்கப்பட்ட காவல்துறை
‘அமெரிக்காவின் காவல் துறையினரின் வரலாறு என்பது அடிமைகளைக் கண்காணிக்கும் பணியில் இருந்தவர்களிலிருந்து தொடங்குகிறது. தென் மாநிலங்களில் ஆப்பிரிக்க அடிமைகள் தப்பிச் செல்லாமல் தடுக்க வெள்ளை இனவெறிக் குழுக்கள் செயல்பட்டன. வட மாநிலங்களிலும், அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த மனிதர்களைக் கண்காணிக்கும் பணியில் பல குழுக்கள் செயல்பட்டன. அந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்களில் பலர் அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்கர்கள்தான்’ என்று ஓர் ஆய்வாளர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆக, அமெரிக்காவில் கண்காணிப்பு, காவல் அமைப்பு என்பதன் அடிநாதமாக இன்னமும் இனவெறி இருக்கிறது என்பது அவரது வாதம். அதனால்தான், காவல் துறையினரிடமிருந்து இனவெறி உணர்வை அவ்வளவு எளிதில் அகற்ற முடியவில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஒருவர் கறுப்பாக இருந்தாலே போதும் அவரைக் குற்றவாளியாக்கி விட முடியும். இதுதான் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிகாரவர்க்க கட்டமைப்பின் வெள்ளை நிறவெறி உளவியல்.
இனவாதத்தால் கட்டமைக்கப்பட்ட அமெரிக்கா
ஆப்பிரிக்காவை சார்ந்த அமெரிக்கர்களான மார்ட்டின் லூதர் கிங் முதல் மால்கம் எக்ஸ் வரை எத்தனையோ தலைவர்கள் போராடிப் பல உரிமைகளைப் பெற்றுத் தந்தனர். ஆனாலும் அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்கர்கள் மீதான வெறுப்புணர்வு இன்னமும் முற்றிலும் மறைந்து விடவில்லை. வசிப்பிடங்கள், அலுவலகங்கள், பொது இடங்கள் என்று எல்லா இடங்களிலும் அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்கர்கள் மீது ஏதேனும் ஒருவகையில் பாரபட்சமாக நடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்க மக்கள் மீது நிகழ்த்தப்படும் இனவெறிக் குற்றங்கள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.
ஓக்லஹாமாவின் துல்சா கிரீன்வுட் மாவட்டத்தில் உள்ள 1921 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்கர்கள் படுகொலைச் செய்யப் பட்டனர். ஏறத்தாழ இதே ஜூன் மாதம் முதல் நாளில், 18 மணி நேரத்திற்கும் மேலாக நிகழ்ந்த அந்த இனப் படுகொலையின் போது, ஓக்லஹோமாவின் துல்சாவின் பெரும்பான்மையான கறுப்பு கிரீன்வுட் சுற்றுப்புறத்தில் வசிப்பவர்களின் வீடுகள் மற்றும் வணிகத் தலங்களை ஒரு வெள்ளையினக் கும்பல் தாக்கியது. அமெரிக்காவின் இனரீதியான வன்முறைச் சம்பவங்களில் மிக மோசமான சம்பவங்களில் ஒன்றாக அந்த நிகழ்வுக் கருதப்படுகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக் கணக்கானோரின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.
1960 களின் பிற்பகுதியில் அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்க சமூகத்திற்கு எதிராக காவல்துறையினர் ஒடுக்கிவந்தனர். இதற்கு எதிராக டெட்ராய்ட் போன்ற நகரங்களில் பெரும் கலவரங்களும் எழுச்சிகளும் காணப்பட்டன. அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்க மக்களை அரசு மற்றும் அதன் காவல்துறையினர் படுகொலைச் செய்தனர். அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீதான அரசின் வெறுப்பான நடவடிக்கைகளால் தங்கள் வாழ்க்கையை இழந்துவிட்டனர்.
1967 ஆம் ஆண்டில், மியாமி காவல்துறைத் தலைவராக இருந்த வால்டர் ஹெட்லி என்பவர் புளோரிடா நகரில் குற்றம் குறித்த விசாரணையின் போது ‘கொள்ளை தொடங்கும் போது, துப்பாக்கிச் சூடு துவங்குகிறது’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினார். அந்த நேரத்தில் அது சிவில் உரிமைத் தலைவர்களிடமிருந்தும், மக்களிடமிருந்தும் பலத்த எதிர்ப்பை உருவாக்கியது.
அமெரிக்க மக்கள்தொகையில் 40 மில்லியன் பேர் அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்கர்கள். 2018 ஆம் ஆண்டின் கணக்குப்படி மொத்த மக்கள் தொகையில் 12.7% அமெரிக்க ஆப்பிரிகர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் ஆப்பிரிக்க அமெரிக்கர்களில் 1549 பேர் சிறைவாசம் அனுபவிக்கின்றனர். ஆனால் ஒரு லட்சம் அமெரிக்கர்களில் 272 பேர் மட்டும் சிறைவாசம் புரிகின்றனர். இது அமெரிக்கர்களை விட ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் சுமார் 6 மடங்கு அதிகம்.
2018-ல் மொத்தம் 5,155 வெறுப்புக் குற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இவற்றில், 2,426 குற்றங்கள் அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்கர்களுக்கு எதிராக நடத்தப்பட்டவை.
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 900 முதல் 1,000 பேர் வரை, போலீஸ்காரர்களால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இப்படிப் போலீஸாரால் கொல்லப்படுபவர்களில், வெள்ளையினத்தவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால், அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்கர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதுபோன்ற வழக்குகளை எதிர்கொள்ளும் வெள்ளையினக் காவலர்களில் பெரும்பாலானோர் குற்றமற்றவர்களாக வழக்கிலிருந்து வெளிவந்துவிடுகிறார்கள். அதேசமயம், இதுபோன்ற வழக்குகளில் தொடர்புடைய அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்கக் காவலர்களுக்குத் தண்டனை கிடைத்துவிடுகிறது. அமெரிக்க வரலாறு நெடுகிலும் அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்க இனத்தின் மீது வெறுப்புணர்வும், இனப்படுகொலைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
துயரமும் போராட்டமும் நிறைந்த வாழ்க்கை
அமெரிக்க மக்கள்தொகையில் அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்க, வீடற்ற மக்கள் 40 சதவீதம் எண்ணிக்கையைக் கொண்ட அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்கர்கள். சுமார் 21 சதவீத அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்கர்கள் அதிகாரபூர்வமான வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர். இது வறுமைக் கோட்டிற்கும் கீழ் வாழும் வெள்ளையர்களை விட 2.5 மடங்கு அதிகமாகும். இதனால் இந்த சமூகங்கள் தொற்றுநோய்களால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை. அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்கர்களும் லத்தினோக்களும் தங்கள் வாழ்க்கையை பணயம் வைத்து, அத்தியாவசிய சேவைகளில், தொழிலாளர் உரிமைகளற்ற அல்லது சுகாதாரப் பாதுகாப்பு இல்லாத ஆபத்தான வேலைகளில் ஈடுபடுகின்றனர். தற்போது தொற்று நோயினால் உருவான பாதிப்பின் காரணமாக, இவர்களில் 40 மில்லியன் தொழிலாளர்கள் வேலையற்றவர்களாக மாறியுள்ளனர்.
அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்க மக்களை அடிமைப் படுத்துவதை தீவிரப்படுத்தவும், நிரந்தரமான அடக்குமுறை ஆட்சியை நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளனர். இதில் நெருக்கடியில் முதலாளித்துவத்தின் அடித்தளத்தில் வர்க்கப் போராட்டத்தின் கூறுகள் கனன்று கொண்டிருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலையில் இருக்கின்றன. பணிநீக்கங்கள், நிறுவன பணிநிறுத்தங்கள், ஊதியக் குறைப்புக்கள், அதிக ஆபத்தான் பணி நிலைமைகள் போன்றவற்றை நிரந்தரமாக்குவதற்கும், விரிவாக்குவதற்கும் அமெரிக்க அரசாங்கங்கள் தொற்றுநோயைப் பயன்படுத்துகின்றன. துயரம் என்பது பெரும்பாலும் அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்கர்கள், புலம்பெயர்ந்தோர் ஆகியோரது அன்றாட வாழ்க்கையாகும். அவர்களது வாழ்க்கையில் போராட்டங்கள்தாம் இன்றைய தவிர்க்க முடியாத யதார்த்தமாக இருக்கின்றது. இவையெல்லாம் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியல், பொருளாதாரத்தின் விளைவுகள்தான் என்பது இன்னும் வெளிப்படையாக வெளிப்படுகின்றது.
அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்கர்களின் அவல வாழ்க்கை
2012-ல் ட்ரெய்வான் மார்ட்டின் எனும் அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்க இளைஞரைச் சுட்டுக்கொன்ற ஜார்ஜ் ஸிம்மர்மேன் எனும் வெள்ளையின மனிதர், அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து ‘BlackLivesMatter’ எனும் ஹேஷ்டேக் அப்போது சமூகவலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. பின்னர் அது ஓர் இயக்கமாக உருவெடுத்தது. பின்னர் 2014-ல் ஃபெர்குஸன் நகரில், 18 வயதே ஆன மைக்கேல் பிரவுன் எனும் அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்க இளைஞர் ஒரு போலீஸ்காரரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, காவலர்களால் அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்க இனத்தவர்கள் கொல்லப்படும் சம்பவம் குறித்துப் பெரிய அளவில் விவாதங்கள் எழுந்தன. காவலர்கள் தங்கள் உடலில், கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. 2015-ம் ஆண்டுவாக்கிலேயே 95 சதவீதக் காவலர்கள், தங்கள் உடல்களில் கேமராவைப் பொருத்திக்கொண்டனர். எனினும், அதனால் பெரிய மாற்றம் வந்து விடவில்லை.
2017-ல், மின்னியாபோலிஸ் நகரில் ஆஸ்திரேலியப் பெண்மணியைச் சுட்டுக்கொன்றதாக முகமது நூர் எனும் அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்க போலீஸ்காரருக்கு 12 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், அது வேண்டுமென்றே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அல்ல; தற்காப்புக்காகச் சுட வேண்டிவந்தது என்று முகமது முன்வைத்த வாதங்கள் எடுபடவில்லை.
கொரானாவினால் இறந்தவர்களில் பெரும்பாலோர் அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்கர்கள்
ட்ரம்ப் நிர்வாகத்தில் அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்கர்கள் மீதான வெறுப்புணர்வு கொண்ட வெளிப்பாடுகள் எண்ணற்றவை. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் கருப்பு மற்றும் ஏழைகள். சிகாகோவில், மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்கர்கள். கொரோனா வைரளால் இறப்புகளில் 73 சதவீதம் அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்கர்கள். மில்வாக்கியில் உள்ள மக்கள்தொகையில் அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்கர்களின் எண்ணிக்கை 26 சதவீதமும், கொரானாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 81 சதவீதமும் ஆகும். மிச்சிகன் மாநிலத்தில், மக்கள் தொகையில் 14 சதவிகிதம் மட்டுமே அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்கர்கள் உள்ளனர். ஆனால் அவர்களின் இறப்பு 40 சதவிகிதம் ஆகும். ஜனநாயகக் கட்சியினரால் ஆளப்படும் நாடுகளிலும், அமெரிக்காவில் வாழும் இந்த ஆப்பிரிக்க மக்களின் வாழ்க்கையை கருத்தில் கொள்ளவில்லை என்பதை இந்தப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. கரோனா ஊரடங்கு காலக்கட்டத்திலும் அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்க இன மக்களின் இறப்பு விகிதம் பெரிய போராட்டங்களை கிளப்பியுள்ளது.
இனவெறி பிடித்த டிரம்ப்
அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பேச்சும், அவரது நடவடிக்கைகளும் வெளிப்படையாகவே கொடிய இனவெறித் தன்மைக் கொண்டவை. அவை அமெரிக்காவில் இனவெறியைத் தூண்டுவதாக பத்திரிகையாளர்கள், நண்பர்கள் மற்றும் முன்னாள் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
1973 ஆம் ஆண்டில், ஆப்பிரிக்க அமெரிக்க வாடகைதாரர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதை எதிர்த்து டிரம்ப் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுக்கப்பட்டன. அவர் இந்த வழக்கைச் சமாதானமாகத் தீர்த்துக் கொண்டார். ஆனால் அவர் தனது தவறுகளை ஒப்புக் கொள்ளவில்லை. பின்னர் ஒப்புதல் ஆணையை மீறும் வகையில் தொடர்ந்து இனப் பாகுபாடு காட்டுவதாகக் கூறி 1978 ஆம் ஆண்டில் மீண்டும் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் நீதிமன்றம் அந்த ஒப்பந்தம் 1982 இல் காலாவதியானது என்று கூறி வழக்கை முடித்தது.
ஜனாதிபதி பராக் ஒபாமா அமெரிக்காவில் பிறக்கவில்லை என்று டிரம்ப் கூறி வந்தார். டிரம்ப் தனது 2016 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை இனவெறித்தனமான ஒரு உரையுடன் தொடங்கினார். அதில் அவர் மெக்சிகன் குடியேறியவர்களைப் பற்றி ‘அவர்கள் போதைப் பொருட்களைக் கொண்டு வருகிறார்கள், அவர்கள் குற்றங்களை இழைக்கின்றார்கள், அவர்கள் கற்பழிப்பாளர்கள்’ என்று கூறினார். “மெக்சிகன் பாரம்பரியம்” கொண்ட ஒரு நீதிபதி தனக்கு எதிரான வழக்குகளைத் தீர்மானிப்பதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறினார். வெள்ளை அமெரிக்கர்களின் பெரும்பான்மையான கொலைகளுக்கு ஆப்பிரிக்க அமெரிக்கர்களே காரணம் என்று கூறி தவறான புள்ளிவிவரங்களை சமூக ஊடகங்களில் அவர் வெளிப்படையாக தெரிவித்தார். அவர் ஆப்பிரிக்க அமெரிக்கர்களையும் ஹிஸ்பானியர்களையும் வன்முறைக் குற்றங்களோடு பலமுறை இணைத்துப் பேசி பிரச்சாரம் செய்தார்.
டிரம்பின் இனவெறி கதை இன்னும் தொடர்கிறது. கு க்ளக்ஸ் கிளான் கொடிகளை ஏந்திய 2017 ஆம் ஆண்டில் சார்லோட்டஸ்வில்லில் அணிவகுத்துச் சென்ற அமெரிக்க வெள்ளை மேலாதிக்கவாதிகளை அவர் “மிகச் சிறந்த மனிதர்கள்” என்று அழைத்தார். ஆனால் ஹைட்டி மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை அருவருப்பான நாடுகள் என்று அழைத்தார்.
2018 ஆம் ஆண்டில், டிரம்ப் எல் சால்வடார், ஹைட்டி மற்றும் ஆபிரிக்க நாடுகளை அருவருப்பான இடங்கள் என்று பொருள்படும் வகையில் “ஷித்தோல்ஸ் நாடுகள்” என்று குறிப்பிட்டார். இது ஒரு இனவெறி கருத்து என்று பரவலாக கண்டிக்கப்பட்டது. அட்லாண்டிக் போன்ற செய்தி நிறுவனங்கள் இந்த கருத்தை ஒரு பொதுவான இனவெறி என்று விமர்சித்தன. பின்னர் அவர் தனது கருத்துக்களை இனவெறி என்று கூறுவதை மறுத்தார். டிரம்பின் சர்ச்சைக்குரிய அறிக்கைகள் உலகெங்கிலும் உள்ள பல பார்வையாளர்களால் மிகவும் கண்டிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்க சமூகங்களை குற்றவாளியாக்கும் இந்த சொல்லாட்சி அமெரிக்க முதலாளித்துவத்திற்கு பொதுவானது. இந்த அருவருப்பான உணர்வுதான், அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்க மக்களை அடிமைப்படுத்தி, அதன் சொந்த மண்ணில் மிக மோசமான சித்திரவதைகளுக்கு உட்படுத்துகிறது. ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள அவர்களை ஒடுக்குகிறது.
இந்தக் காட்டுமிராண்டித்தனத்தின் கருத்தியலின் இன்றைய அமெரிக்காவின் பிரதிநிதிதான் டொனால்ட் டிரம்ப். கொள்ளை தொடங்கும் போது, துப்பாக்கிச்சூடு நடக்கும் என்று கூறும் அளவுக்கு வெள்ளை இனவெறி டிரம்பின் தலையின் உச்சத்தில் ஏறி அமர்ந்துக் ஆட்டுகிறது. இதுதான் இன்று ஜார்ஜ் பிளாய்டின் கொலைக்கு இட்டுச் சென்றுள்ளது.
ஜார்ஜ் பிளாய்டு படுகொலை
மே 25 இரவு 8 மணி அளவில், மின்னியாபோலிஸ் நகரில் கள்ள நோட்டு தொடர்பான புகாரின் பேரில், ஜார்ஜ் ஃப்ளாய்டு கீழே தள்ளி, அவரது கழுத்தின் மீது தனது முழங்காலை அழுத்தியபடி நின்றிருக்கிறார் டெரெக் சாவின் என்ற காவலர். உடல்ரீதியாக முற்றிலும் முடக்கப்பட்டிருந்த ஃப்ளாய்டு, “என்னால் சுவாசிக்க முடியவில்லை. என் வயிறு எரிகிறது. கழுத்து வலிக்கிறது. எல்லாமே வலிக்கிறது. அம்மா” என்று கதறியிருக்கிறார். “என்னைக் கொன்றுவிடாதீர்கள்” என்று மன்றாடியிருக்கிறார். அருகில் இருந்தவர்களும் அவரை விடுவித்து காரில் ஏற்றுமாறு கேட்டிருக்கிறார்கள். ஆம்புலன்ஸ் வந்து ஃப்ளாய்டை ஏற்றிச்செல்லும் நிமிடம் வரை, அவர் கழுத்தில் மீது முழங்காலை வைத்து அழுத்திக்கொண்டே இருந்தார் காவலர் சாவின். மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட ஃப்ளாய்டு ஏற்கெனவே இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் அறிவித்துவிட்டனர். ஒரு அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்க மனிதரின் வாழ்க்கை வெள்ளையினக் காவலர்களின் நிறவெறியால் துண்டாடப் பட்டது.
நகரங்களில் வெடித்தப் போராட்டங்கள்
அமெரிக்காவில் கொரானா பெருந்தொற்றுக்கு ஆயிரக்காணக்கான மக்கள் பலியாகிக்கொண்டிருக்கும் நேரத்தில்தான், அந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
போராட்டம் அமைதியான முறையில் ஆரம்பித்தாலும் மக்களின் கோபம் சில இடங்களில் கலவரமாக வெடித்தது. கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. எல்லாவற்றையும் தாண்டியும் இந்த கரோனா காலத்திலும் ஒரு எளிய மனிதர் அநீதியாகக் கொல்லப்பட்டதற்காகப் பல்லாயிரம் மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுவருவது உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஜார்ஜ் ஃபிலாய்டுக்கு எதிரான ஏகாதிபத்திய அரசின் இந்த கொடூரமான படுகொலையின் விளைவாக அமெரிக்க நகரங்கள் சீற்றத்துடன் வெடித்தன. மினியாபோலிஸில் அதிகார வர்க்கத்தினரையும், அரசையும் எதிர்த்து பெரும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. காவல்துறையினருடன் கடுமையான மோதல்கள் நடக்கின்றன. கார்கள், காவல் நிலையங்கள், அரசாங்க கட்டிடங்கள் தீக்கிறை ஆக்கப்படுகின்றன. மினசோட்டாவின் மிகப்பெரிய நகரத்திற்கு அப்பால், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் மற்றும் பிற நகரங்களில் இந்தக் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்ஸ்’ என்ற முழக்கம் விண்ணைப் பிளக்கின்றனது.
மினியாபொலிஸ் நகரத்திலும், தொடர்ந்து அமெரிக்கா முழுவதிலும் உள்ள ஏனைய நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்தன. ஃப்ளாய்டின் இறுதி வாசகங்களான ‘என்னால் மூச்சு விட முடியவில்லை’ என்பது போராட்டக்காரர்களின் முழக்கமானது. இந்தப் போராட்டங்களை முன்னெடுத்துவருவதில் ‘கறுப்பினத்தவரின் வாழ்க்கை முக்கியம்’ (Black Lives Matter) இயக்கத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் போராட்டங்களில் ஏராளமான வெள்ளையின மக்களும் கலந்துகொண்டு, தங்கள் சகோதரத்துவத்தை உலகுக்கு எடுத்துக் காட்டினர்.
நியூயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஃபிலடெல்ஃபியா போன்ற இடங்களில் போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் பெப்பர் குண்டுகள் பயன்படுத்தி போராட்டக்காரர்களை கலைக்க முயன்றபோது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பல நகரங்களில் போலீஸ் வாகனங்கள் எரிக்கப்பட்டதுடன் கடைகளும் சூறையாடப்பட்டன. சில நாட்களுக்கு முன்னாள் வரை கொரோனா வைரஸால் காலியாக இருந்த சாலை தற்போது போராட்டத்தால் நிரம்பி வழிகின்றன. 75 க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
பாதுகாப்பு படையினர் 5000 பேர் இந்த கலவரத்தை கட்டுப்படுத்த 15 மகாணங்களிலும் வாஷிங்டன் டிசி யிலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு அருகில் போராட்டக்கார்கள் மீண்டும் குவிந்து, அங்கிருந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஜனாதிபதிகள் தேவாலயம் உள்ளிட்ட கட்டடங்களுக்கு தீவைத்தனர். கலவரத் தடுப்பு அதிகாரிகள் மீது கற்களை வீசினர். பதிலுக்கு காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர்.
கொரோனா வைரஸ் ஊரடங்கை மீறி போராட்டம்
போலீசின் கொடூர தாக்குதலுக்கு எதிரானப் போராட்டங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடந்து வருகின்றன. பத்திரிக்கை ஊடகத்தை எதிர்த்துப் போராடிவருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்க மக்களின் போராட்டம் முதலாளித்துவ போலீஸ் வாகனங்கள் சூறையாடப்பட்டு எரிக்கப் படுகின்றன. கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதுவரை செய்தி நிறுவனங்களின் தகவல்படி 4,400 போராட்டக்காரர்கள் கடைகளை சூறையாடுவது முதல் ஊரடங்கை மீறியது வரையிலான பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டபூர்வமான எல்லைகளுக்கு அப்பால் செல்கின்றது. நாடு முழுவதும் தொழிலாளர்களின் போராட்டங்கள் ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கின்றது.
கலிபோர்னியா கடலோரப் பகுதிகளில் இருக்கும் சான்பிரான்சிஸ்கோ, சான் ஜோன்ஸ், சாண்டா கிளாரா, ஓக்லேண்ட் போன்ற பகுதிகளில் ஊரடங்கை மீறி போராட்டங்கள் நடக்கின்றன.
கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் அமெரிக்காவில் 75 நகரங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. 40 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் இந்த உத்தரவை மீறுவது பதற்றமான சூழலை ஏற்படுத்துகிறது. கரோனாவால் நிலைகுலைந்து போயிருக்கும் அமெரிக்காவை ஜார்ஜ் ஃப்ளாய்டின் படுகொலை உலுக்கி யெடுத்திருக்கிறது. உலக நாடுகள் பலவும் இந்தப் படுகொலையைக் கண்டிக்கின்றன. சட்டரீதியாக அமெரிக்காவில் நிறப் பாகுபாடு ஒழிக்கப்பட்டாலும், நடைமுறையில் அது இன்னும் தொடர்ந்து கொண்டே இருப்பதைத்தான் ஜார்ஜ் ஃப்ளாய்டுகளின் மரணங்கள் சொல்கின்றன.
வெள்ளை மாளிகை முற்றுகை
அமெரிக்காவில் அதிகபட்ச பாதுகாப்பு நிறைந்த வெள்ளை மாளிகை பகுதியில் நுழைந்த போராட்டக்காரர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த வழிகாட்டிப் பலகை, பிளாஸ்டிக் தடுப்புகளை தீயிட்டு கொளுத்தினர். அங்கிருந்த மரங்களின் கிளைகளை வெட்டி எறிந்தனர். அங்கிருக்கும் பூங்காவின் வடக்குப்பகுதியில் உள்ள பராமரிப்பு அலுவலகங்கள் உள்ளிட்டவைகளை, போராட்டக்காரர்கள் தீக்கிரையாக்கியதாக அசோசியேடட் பிரஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
வரலாற்றில் முதன்முதலாக அமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளே நுழைந்து போராடி வருகின்றனர். துப்பாக்கிகள் வெடிக்கின்றன. டிரம்ப், தன்னுடைய குடும்பத்தினருடன் பதுங்கு குழியில் ஓடி ஒளிந்துக் கொண்டார். இது பயங்கரமான புரட்சியாய் வெடித்துள்ளது. திரும்பிய பக்கமெல்லாம் எரிமலை வெடித்து சிதறுவது போன்ற காட்சிகள் தென்படுகின்றன. இது அமெரிக்க வரலாற்றின் ஒரு மைல்கல் என்று கொண்டாடப்படுகிறது. போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் பல மணி நேரம் வெள்ளை மாளிகை மூடப்பட்டது. இந்நிலையில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு அதிபர் ட்ரம்ப் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகிலேயே புலனாய்வு அமைப்புக்கு எதிராகவும் அதிபர் ட்ரம்புக்கு எதிராகவும் கடும் கோஷங்கள் எழுந்தன. பாதுகாப்பு தடுப்புகளையும் அவர்கள் தள்ளிவிட்டு உள்ளே நுழைய முயன்றனர். அவர்களைத் தடுக்க முயன்றதால் வன்முறை மூண்டது. போலீசார் கண்ணீர் புகை மற்றும் மிளகு தூள் வீசி போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனாலும் முக்கிய கட்டிடங்களின் ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்டது. மேலும் கார்களை குப்புற கவிழ்த்து தீ வைத்து போராட்டக்காரர்கள் கொளுத்தினர். இதனால் வெள்ளை மாளிகையை சுற்றி தீப்பிழம்பாகவும் புகை மண்டலமாகவும் காட்சியளித்தது. 1968ல் மார்டின் லூதர் கிங் கொலைக்கு பிறகு அமெரிக்காவில் இப்போதுதான் இந்த அளவிற்கு இனக் கொந்தளிப்பும் அமைதியின்மையும் ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. .
வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயத்துக்கு அருகே அமைதியான முறையில் போராடிக் கொண்டிருந்த போராட்டக்காரர்களை அதிபர் உத்தரவின் போரால் கண்ணீர் புகைக் குண்டுகள், தீக்குண்டுகள் உள்ளிட்டவற்றை வீசி கலைக்கப்பட்டதாக அதிபர் டிரம்ப் கடுமையாக விமரிக்கப்படுகிறார். பின்பு செயிண்ட் ஜான் தேவாலயத்திற்கு சென்ற டிரம்ப் கையில் பைபிளை வைத்திருந்தபடி, ‘ நமது நாடு உலகின் சிறந்த நாடு. நான் அதை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளப் போகிறேன்” எனக் கூறினார்.
ஜனநாயக கட்சியின் அணுகுமுறைகள்
அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்திற்கு எதிராக சில போராட்டக்காரர்களின் வன்முறை செயல்களுக்கு முன்னாள் அதிபர் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார். இனவெறிக் கொள்கை ஜனநாயகக் கட்சிக்கு ஒன்று எதிரானது இல்லை. இது பெரும்பாலான அமெரிக்கர்களிடையே எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. ஆனால், ஜனநாயகக் கட்சி சமூகத்தில் உருவாகியுள்ள திடீர்ப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த முயல்கிறது. ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் சமூக ஊடகங்களில் பேசினார். மினியாபோலிஸ் மேயர் ஜேக்கப் ஃப்ரே சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளைக் கைது செய்து, விசாரணைக்கு அழைத்தமைக்கு நன்றி தெரிவித்தார்.
‘போதுமான ஆதாரங்கள் இல்லை’ என்று நம்பமுடியாததாகக் கூறி, டெரெக் சௌவின் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மூன்று போலீஸ்காரர்களை கைது செய்ய ஜனநாயக அரசாங்கம் பல நாட்களாக மறுத்துவிட்டது. பல நாட்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பெருகிவரும் மக்கள் அழுத்தங்களுக்குப் பிறகுதான், மினசோட்டாவில் உள்ள ஜனநாயகக் கட்சி இறுதியாக சௌவினைக் கைது செய்ய முடிவு செய்தது. ஆனால் அவரது கூட்டாளிகளை விடுவித்தது.
அடக்குமுறை எந்திரத்தால் நிகழ்த்தப்படும் இனவெறிக் குற்றங்களைப் பாதுகாக்கும் அரசியல் ஆட்சியின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவே முற்படுகிறது. ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கம்’ தோன்றிய திலிருந்து, அதை நடுநிலையாக்க முயற்சிக்கிறது. சமீபத்திய ஆண்டுகளில் ஜனநாயகக் கட்சியினர் இதைத்தான் செய்து வந்துள்ளனர். ஜனநாயக கட்சியினரின் அணுகுமுறையும் நடவடிக்கையும் அதிபர் டிரம்பின் இனவெறி கொள்கைக்கும் ஆட்சிக்குக்கும் மாற்றாக இல்லை என்பது தெளிவாகப் புலப்படுகிறது.
டிரம்ப் உள்நாட்டுப் போரைத் துண்டுகிறார்
கலவரம், கொள்ளை, தாக்குதல்கள் மற்றும் சொத்துக்களை அழிப்பதை நிறுத்தவும், சட்டத்தை மதிக்கும் அமெரிக்கர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் ராணுவம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் பயன்படுத்தத் தயார் என டிரம்ப் கூறினார்.
மேலும் அமெரிக்காவில் இப்போது நடப்பது அமைதியான போராட்டம் அல்ல. இவை உள்நாட்டுப் பயங்கரவாத செயல். அப்பாவி மக்களின் வாழ்க்கையை அழிப்பதும், அப்பாவி மக்கள் ரத்தம் சிந்தப்படுவதும் மனிதக்குலத்திற்கு எதிரான ஒரு குற்றமாகும், கடவுளுக்கு எதிரான குற்றமாகும் என்று அவர் கூறினார். பல மாநில மற்றும் உள்ளூர் அரசுகள் தங்களது குடிமக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டன எனவும் டிரம்ப் குற்றஞ் சாட்டியுள்ளார்.
செல்வச் செழிப்புடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும், அமெரிக்க மேல்தட்டு வர்க்கம் அரசதிகாரத்திற்காக வெள்ளை இனவாதத்தை உயர்த்திபிடிப்பதும், அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்கரின வெறுப்பையும் உமிழ்வதுமாக இருந்து வருகின்றனர்.
அமெரிக்கா ஏற்கனவே கடுமையான அரசியல் பொருளாதார நெருக்கடிகளில் மூழ்கியுள்ளது. தற்போது கொரானாவினால் ஏற்பட்டிருக்கும் எளிதில் சீர்செய்ய முடியாத அளவிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. இவை போதாதென்று, அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது பங்குக்கு ‘நாட்டை அமைதிபடுத்தும் முயற்சி’யில் தீயில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டிருக்கிறார். டிரம்பின் இந்த இனவாத நடவடிக்கைகள் நிச்சயமாக ஒரு உள்நாட்டுப் போருக்கு இட்டுச் செல்லும் என்று தெளிவாகத் தெரிகிறது. இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முடிவுக்கு இட்டு செல்லட்டும்.
References:
Trump Takes Us to the Brink, Will weaponized racism destroy America?, Paul Krugman
Justice for George Floyd: An International Statement of Solidarity
The History behind ‘When the Looting Starts, the Shooting Starts’