Subscribe

Thamizhbooks ad

கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும்

 ஏன் ”பேட்டிங்” ”பொவ்லிங்கை”விட உயர்வாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.? ஏன் பொவ்லிங் சூப்பர் ஸ்டார் பல்வங்கர் பலூவின்( 1876- 1955) திறமை மதிக்கப்படவில்லை? பதிவாகவில்லை?. ஏன் பலூவின் இடதுகை சுழற்சி முறை பந்தால் ரன் எடுக்க இயலாமல் போன சூப்பர் பேட்ஸ்மென் ரஞ்சித்((1780–1839) நினைவு போற்றப்படுகிறது?.ஏன் கிரிக்கெட் ஒலிம்பிக்கில் இடம் பெறவில்லை?

கிரிக்கெட்டில் சாதித்த இந்திய சூப்பர் ஸ்டார் பல்வங்கர் பலூ.” என்ற 90 பக்க  இ.பா சிந்தன் எழுதிய புத்தகத்தில் இவைகளுக்கான விடைகள் உள்ளன.. இன்றைய இளம் பருவத்தினர் மன நிலைக்கேற்ப எழுதப்பட்ட சுவாரஸ்யமான அதே வேளையில் எதிலும் ஊடுருவி நிற்கும் அரசியலையும் ஒடுக்கப்பட்ட சாதியினரின் மன வலியையும் நுண்மான் நுழைபுலத்தோடு ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.

இதைப் படித்த பிறகுதான் ஏன் கிரிக்கெட் ஒலிம்பிக் விளையாட்டில் சேர்க்கப்படவில்லை என்ற விவரத்தை நான் அறிய நேர்ந்தது.

பந்தை வீசுவது மட்டையால் அடிப்பது என்ற விளையாட்டில் இங்கிலாந்து கிரிக்கெட், அமெரிக்காவின் பேஸ்பால்  பிரபலமான விளையாட்டுகளாகும் வெகு நாட்களாக இந்த இரண்டு விளையாட்டுகளும் ஒலிம்பிக் பட்டியலில் சேர்க்கப் படவில்லை. 1992 முதல் 2008 வரை பேஸ்பால் சேர்க்கப்பட்டு அதன் பிறகு கைவிடப்பட்டது, 2020 மீண்டும் பேஸ்பால் சேர்க்கப்பட்டது. ஆனால் கிரிக்கெட் சேர்க்கப்படவே இல்லை.

ஒலிம்பிக் பட்டியலில் சேர விளையாட்டு விதிகளில் என்ன மாற்றங்கள் தேவைப்படும் என்பது விவாதப் பொருளாக ஏன் ஆகவில்லை என்பதைப் புரியவும் இப்புத்தகம் உதவுகிறது!.

கிரிக்கெட் விளையாட்டு உருவான வரலாறு மட்டுமல்லஏகாதிபத்திய அரசியல் பேணிய இந்து சனாதன கலாச்சாரம்மத மோதல்களை ஊக்குவிக்கும் நடை முறை பற்றிய தகவல்கள் நம்மை வியப்படையச் செய்கின்றன சாதி மத பேதங்கள் தொடர கிரிக்கெட் ஜிம்கான கிளப்புகளை உருவாக்கிட மைதானங்களை அரசு ஒதுக்கியது .  ஆனால் எந்த ஜிம்கான கிளப்பிலும் தலித்து இளைஞர்கள் விளையாட முடியாதுமைதானத்தைச் சுத்தம் செய்யப் பந்துகளை எடுத்துக் கொடுக்க எடுபிடி வேலை செய்யச் சிறுவர்களை வேலைக்கமர்த்துவர் இவற்றை ஆதாரங்களுடன் இச் சிறு நூல் பதிவு செய்கிறது.

இன்றைய கிரிக்கெட்டின் வர்த்தக மதிப்பு  அரசியல் வாதிகளின் ஆதிக்கம்.  இவற்றைப் புரியவும் இந்த புத்தகம் சிறந்த கையேடாகும், இந்த புத்தகத்தில் பலூவின் அரசியல் கண்ணோட்டம் பற்றி எதுவுமில்லை.  காங்கிரசின் பகடையாக ஆகி 1937ல் அம்பேத்கருக்கு எதிராகப்  போட்டிப் போட்டு தோற்றது மட்டுமல்ல ஒடுக்கபட்டமக்களின் ஒப்பற்ற தலைவனை எதிராக நின்றவர் என்ற அவப் பெயரைச் சம்பாதித்துவிட்டார். தீண்டாமைக்குப் பலியான ஒருவர் மேல்தட்டு வர்க்கத்தின் அரசியலுக்காக பகடையானது ஒரு சோகமே. இன்று சுரண்டும் வர்க்கங்களின் அரசியலை நம்பும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் பிரிவிக்கும் இவரது அரசியல் வாழ்க்கை ஒரு பாடமாகும்.

 இளம் பருவத்தினர் மட்டுமல்ல ஜனநாயகத்தை விரும்புவோருக்கு அவசியமான புத்தகம்.

 

Latest

நூல் அறிமுகம்: தோட்டியின் மகன் – சுரேஷ் இசக்கிபாண்டி‌‌

"யார் வர்க்க எதிரி, ஏன் ஒன்றுசேர வேண்டும்"   ஆலப்புழா நகராட்சியில் தோட்டியாக (துப்புரவு...

தொடர்: 24 : பிணைக்கைதி மீட்பும்,பாலஸ்தீன ஆதரவும்- அ.பாக்கியம்

பிணைக்கைதி மீட்பும் பாலஸ்தீன ஆதரவும் அமெரிக்காவில் வியட்நாம் போர் எதிர்ப்பாளராக, சிவில் உரிமை போராளியாகவும், ஆப்பிரிக்க நாட்டில் கருப்பின தேசியவாதியாகவும் பார்க்கப்பட்ட முகமது அலி அரபு நாடுகளில் முஸ்லிம் அடையாளங்களால் வரவேற்கப்பட்டார். ஆனால், மேற்கண்ட மூன்றையும் கடந்த பொது தன்மையுடனும் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் முகமது அலி என்பதை மறுக்க இயலாது. அரபு நாடுகளை  எண்ணெய் வளத்திற்காக...

நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்

"டா வின்சி கோட் " ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து) வெளியீடு :சான்போர்ட் ஜெ...

நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்

தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

நூல் அறிமுகம்: தோட்டியின் மகன் – சுரேஷ் இசக்கிபாண்டி‌‌

"யார் வர்க்க எதிரி, ஏன் ஒன்றுசேர வேண்டும்"   ஆலப்புழா நகராட்சியில் தோட்டியாக (துப்புரவு பணியாளராக) வேலை செய்து, அங்கு பரவிய தொற்று நோயால் உயிரை இழந்து தான் செய்த பணியை தன் மகன் சுடலைமுத்துவிற்கு...

தொடர்: 24 : பிணைக்கைதி மீட்பும்,பாலஸ்தீன ஆதரவும்- அ.பாக்கியம்

பிணைக்கைதி மீட்பும் பாலஸ்தீன ஆதரவும் அமெரிக்காவில் வியட்நாம் போர் எதிர்ப்பாளராக, சிவில் உரிமை போராளியாகவும், ஆப்பிரிக்க நாட்டில் கருப்பின தேசியவாதியாகவும் பார்க்கப்பட்ட முகமது அலி அரபு நாடுகளில் முஸ்லிம் அடையாளங்களால் வரவேற்கப்பட்டார். ஆனால், மேற்கண்ட மூன்றையும் கடந்த பொது தன்மையுடனும் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் முகமது அலி என்பதை மறுக்க இயலாது. அரபு நாடுகளை  எண்ணெய் வளத்திற்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்ரேல் என்ற கருவியைக் கொண்டு கூறுபோட்டு வேட்டையாடியது. அமெரிக்காவின் இந்த வேட்டையாடலில் அரபு நாடுகள் பலியாகிக் கொண்டிருந்தன....

நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்

"டா வின்சி கோட் " ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து) வெளியீடு :சான்போர்ட் ஜெ கிரீன் பர்கர் அசோசியேட்ஸ் ஐஎன்சி ,யுஎஸ்ஏ  தமிழில் :எதிர் வெளியீடு முதல் பதிப்பு 2016 -நான்காம் பதிப்பு 2021 600 பக்கங்கள்- ரூபாய் 699 தமிழாக்கம்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here