தருமபுரி நகரில் பாரதி புத்தகாலயம் கிளை திறப்பு விழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
பாரதி புத்தகாலயம் சாா்பில், தருமபுரி பேருந்து நிலையம் அருகே ஆறுமுகம் தெருவில் எல்.எஸ்.என். வணிக வளாகத்தில் பாரதி புத்தகாலயம் கிளை அமைக்கப்பட்டது. இப்புதிய கிளைத் திறப்பு விழா பாரதி புத்தகாலய பொறுப்பாளா் மு.காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. திருவள்ளுவா் பொத்தக இல்லம் அறிவுடைநம்பி வரவேற்றாா். மாா்க்சிஸ்ட் இதழின் ஆசிரியா் என்.குணசேகரன் புதிய கிளையை திறந்து வைத்து பேசினாா்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் அ. குமார் முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள், கலைஞா்கள் சங்க மாநிலக்குழு உறுப்பினா் நாகை பாலு முதல் பிரதியை பெற்றுக் கொண்டாா். சமூக நல்லிணக்க மேடைப் பொறுப்பாளா் இரா.சிசுபாலன் நன்றி தெரிவித்தாா்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

