தஞ்சை நிலத்தில்
பயிரிட்டு வளர்த்தாலும்
பசி நீக்காது
பார்த்தீனியம் செடி
எந்தக் குளத்தில்
புனித நீராடினாலும்
வாசமாக துளிர்க்கப் போவதில்லை
உடலின் வியர்வை
பல இலட்ச ரூபாய்ப் பட்டுச்சேலையில்
பொதிந்து வைத்தாலும்
முகத்தைச் சுழிக்கத்தான் வைக்கும்
பிணத்தின் மணம்
பூக்களோடு பூக்களாக
பிணைந்து இருந்தாலும்
புன்னகைக்கப் போவதில்லை
பூ நாகம்
சந்தனக் கட்டைகளை
சிதையில் அடுக்கினாலும்
ஜமீன்தாரின் எச்சத்திலும்
சாம்பல் வாசமே வரும்
வார்த்தை ஜாலங்களுக்கு
வாய்ப்புகளை இழந்து விட்டு
” குய்யோ… முறையோ …”
எனக் கத்துவது ஏமாளித்தனம்
பகுத்தறிவு என்பதே
கற்ற கல்வியின் தனம்
ஒன்பது முறை தோற்கலாம்
ஒரு தடவையாவது
வெற்றியின் இலக்கை
அடையாத வாழ்க்கை
அர்த்தமில்லாதது…
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

