மன உறுதி பெறுவதிலே
ஜெகமதையே ஜெயித்திடலாம்
சிவப்பே வழியாய் கொள்வோமய்யா..
தனி ஒருவன் தலைமையில
விடுதலையும் வருவதில்ல
இணைந்தே எதையும் வெல்வோமய்யா…
தோழர் யுகபாரதி அவர்களின் அற்புத பாடல் வரிகள் அந்த வரிகள் தான் படத்தின் ஒட்டு மொத்த கதையும் அடங்குகிறது
லாபம் திரைப்படத்தின் சில காட்சிகள் ராஜபாளையத்தில் கடந்த இரண்டு வருடங்கள் முன்பு துவங்கியது. அன்றுதான் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு படப்பிடிப்பில் தோழர் எஸ்பி ஜனநாதன் அவர்களை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. முதல் நாள் படப்பிடிப்பு உணவு இடைவேளையில் அறிவிக்கிறார். இன்று லெனின் அவர்களின் பிறந்தநாள் இன்று தான் நமது படத்தை தூங்குகிறேன் என்று அறிவித்தார். பின்னர் நான் அறிமுகம் ஆகினேன், அன்றைய தினம் எந்த எதிர்பார்ப்போடு இந்த படம் வருமென்று இருந்தேனோ அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் லாபம் திரைப்படம் இருந்தது.

ஒரு கிராமத்தின் சாதாரண ஏழை எளிய மக்களின் நிலங்களைப் பிடுங்கி தான் உற்பத்தி செய்யக் கூடிய பொருட்களை எளிதாக அனைத்துப் பகுதிகளிலும் சென்றடையும் வகையில் எட்டு வழிசாலை உட்பட தங்க நாற்கர சாலை பொருள்களை நீண்ட நாட்கள் சேமித்து வைக்கக்கூடிய கிடங்குகள் அவற்றின் மூலம் பொருளின் விலை ஏற்றத்தின் போது அதை விற்பனை செய்வதற்கான ஒட்டுமொத்தமாக லாப வெறியை மையமாக வைத்து இயங்கும் கூடிய அந்த கார்ப்பரேட் முதலாளி அவர்களுக்கு அடிமையாக உள்ளுரில் நான்கு சிறு அடிமை முதலாளிகள் இவர்களை எதிர்த்து பக்கிரி சாமியாக விஜய் சேதுபதி அவர்கள் கிராம மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களை ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் வில்லனை அழித்தொழித்து இதேபோன்று உழைக்கும் மக்களுக்கு எதிராக அடுத்த கிராமத்தின் நடக்கக்கூடிய பிரச்சனையை எதிர்த்து இறுதியில் கிளம்புகிறார் விஜய்சேதுபதி. இப்படியாக ஒட்டுமொத்த படத்தின் கதை அமைகிறது.
படத்தில் லாபம் குறித்து எளிமையாக புரிந்து கொள்ளக்கூடிய காட்சி அமைப்புகள், அதேபோன்று சங்கத்தின் மூலம் தங்களின் உரிமைகளை கேட்க ஒன்றிணைய வேண்டும் என்பது விவசாய நலன் காக்க மாபெரும் மக்கள் பணியை செய்த தோழர் சீனிவாச ராவ் அவர்களின் பெயரில் கூட்டு பண்ணை திட்டம் துவங்குவது.
லாபம் குறித்து சிறுமிக்கு விஜய் சேதுபதி அளிக்கும் விளக்கம், ஊருக்குப் புதிதாக வந்தவர் சங்கத்தில் வந்து சீனிவாச ராவ் பற்றிக் கேட்பது சேகுவேராவைப் போன்று விஜய் சேதுபதியின் பாத்திர வார்ப்பு புல்லட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பல நூறு பக்கங்கள் மேலும் படம் முடிந்ததும் கடைசியில் இயக்குனர் எஸ்பி ஜனநாதன் அவர்களின் லாபம் குறித்தான இரண்டு நிமிட வீடியோ அந்த இரண்டு நிமிட வீடியோவை ஒரு முழுநீள படமாக புரியும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக படம் மக்கள் ஜாதி மதங்களை கடந்து தொழிலாளி வர்க்கமாய் ஒன்றிணைய வேண்டும்.
என்றும் உழைக்கும் மக்களுக்கு எதிராக லாபம் மட்டுமே குறிக்கோளாக இயங்கும் கார்ப்பரேட் முதலாளிகள் இந்த சமூகத்தின் சாபம் என்று பறைசாற்றுகிறது.
ப. பிரசாந்த் எம்ஏ.பிஎட்
முன்னாள் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர்
விருதுநகர் மாவட்டம்
9543058686
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.