Do social media like Facebook interfere in political discussions? Article in tamil translated by Era Ramanan முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் அரசியல் விவாதங்களில் தலையிடுகின்றனவா தமிழில் இரா. இரமணன்

முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் அரசியல் விவாதங்களில் தலையிடுகின்றனவா? – தமிழில்: இரா. இரமணன்



தலையிடுவது மட்டுமல்ல அதிலும் சில அரசியல் சக்திகள் பக்கமாகவும் சில அரசியல் சக்திகளுக்கு எதிராகவும் செயல்படுகின்றன. எடுத்துக்காட்டாக கடந்த ஆண்டு மேற்கு ஆசியாவில் காசா போர் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த போது ‘அல்அக்சா’ (#Al Aqsa)) என்கிற ஹேஷ்டேகை இன்ஸ்டாகிராம் -அதன் உரிமையாளர் முகநூல் – தடை செய்தது. ‘அல்அக்சா’ என்பது ஜெருசலம் நகரிலுள்ள மசூதி. இஸ்லாமியர்களின் புனித தலம். அதை ‘அல் அக்சா தியாகிகள் படை‘ என்கிற தீவிரவாத அமைப்பு என தவறாக தங்களுடைய அல்கோரிதம் புரிந்து கொண்டதால் நீக்கியதாகக் கூறி மன்னிப்பு கேட்டது.
அரபு மொழி பேசுபவர்களுக்கு இது முகநூலின் மற்றுமொரு அரசியல் அடக்குமுறையே. இது போன்று பல முறை நடந்துள்ளது. முகநூலில் சர்வ சாதரணமாக புழங்கும் மொழிகளில் அரபியும் ஒன்று. இது போல் தவறு நடந்துவிட்டதாக முகநூல் அடிக்கடி வெளிப்படையான மன்னிப்பு கேட்டுள்ளது.

ஆனால் இது அவ்வளவு அப்பாவித்தனமான தவறு அல்ல என்கிறது முகநூலின் முன்னாள் ஊழியரும் எச்சரிக்கை மணி அடிப்பவராக மாறியுள்ளவருமான பிரான்சிஸ் ஹேகன் வெளியிட்டுள்ள ஆவணங்கள்.. இது அதன் கட்டமைப்பிலேயே உள்ள குறைபாடு என்கிறார். இது போன்ற தவறுகளின் ஆழத்தை பல ஆண்டுகளாகப் புரிந்திருந்தாலும் அதை சரி செய்வதற்கு முகநூல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது அரபி மொழியில் மட்டும் நடக்கவில்லை. அந்த நிறுவனம் இது போன்ற மோதல் நடக்கும் பல பகுதிகளில் அந்த மொழி மற்றும் கலாச்சாரங்களைப் புரிந்து கொள்ளும் நடுவர்களை போதுமான அளவு நியமிப்பதில்லை. அதன் செயலியும் செயற்கை நுண்ணறிவு கொண்டு பல்வேறு மொழிகளில் பதிவிடப்படும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை கண்டுபிடிக்கும் திறனை வளர்க்கவில்லை. இதனால் அங்கெல்லாம் வெறுப்பை விதைக்கும் பேச்சுகளும் தீவிரவாத பிரச்சாரங்களும் பெருகுகின்றன.

முகநூலின் இரட்டை வேடத்திற்கு இன்னொரு எடுத்துக்காட்டு ஆப்கானிஸ்தானிலும் மியான்மரிலும் இந்த ஓட்டைகள், மக்களை தூண்டிவிடும் பதிவுகள் ஏராளமாக பதிவிடுவதற்கு அனுமதிக்கும் அதே வேளையில் சிரியாவிலும் பாலஸ்தீனத்திலும் பொதுவான வார்த்தைகளைக் கூட ஒட்டு மொத்தமாக தடை செய்து சாதாரண பேச்சுகளையும் நசுக்குகிறது.

உலகின் எல்லோருடைய அரசியல் கருத்துகளையும் தான் ஒரு நாள் இடையீடு செய்வோம் என்ற நோக்கத்துடன் முகநூல் செயலி அமைக்கப்படவில்லை. ஆனால் இன்று அதனுடைய அரசியல் முக்கியத்துவத்திற்கும் அதன் வசம் உள்ள வள ஆதாரங்களுக்கும் ஏற்ப பதிவுகளை ஆய்வு செய்யும் நடுவர்களை நியமிக்க ஏன் அது போதிய நிதி ஒதுக்கவில்லை என்பது வியப்பளிப்பதாக உள்ளது என்கிறார் மத்திய கிழக்கு எண்ணியல் நிறுவன இயக்குனர் எலிசா கேம்பெல்.
மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்களை குறிவைக்கும் வெறுப்பு பதிவுகளை பரப்புவதை தான் தடுக்கவில்லை என தன் உள் ஆவணங்களில் முகநூல் ஒத்துக்கொண்டுள்ளது.

இந்தியாவிலும் ஒரு வலதுசாரி இந்துத்துவ தேசியவாத குழு முகநூலில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பயப் பிராந்தியை கிளப்பக் கூடிய பதிவுகளை வெளியிடுவதை தடை செய்யலாமா என்று அதன் ஊழியர்கள் விவாதித்ததாக இந்த ஆவணங்கள் காட்டுகின்றன.

26.10.2021 தேதியிட்ட இந்து ஆங்கில நாளிதழ் செய்தியிலிருந்து.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *