Subscribe

Thamizhbooks ad

நூல் அறிமுகம்: டுஜக் டுஜக் -விஜய் ராஜ். அ

டுஜக் டுஜக்
ஒரு அப்பாவின் டைரி
ஆசிரியர்.தேனி சுந்தர்
பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் 112

தோழர் தேனி சுந்தர் அவர்களுக்கு பேரன்புடன் வாழ்த்துக்களும் நன்றிகளும்.
தோழருடைய புத்தகங்களில் நான் படித்த இரண்டாவது புத்தகம் இது. குழந்தைகளின் மழலை பேச்சை நாம் எந்த அளவிற்கு தவறவிடுகிறோம் (கண்டுகொள்வதில்லை) என்பதை ஆசிரியர் இந்த புத்தகத்தின் மூலம் நமக்கு நினைவுபடுத்துகிறார். ஆழமாக நம்மை சிந்திக்க வைத்துள்ளார்.

குழந்தைகளுடைய கேள்விகள் எவ்வளவு பொருள் மிக்கது எவ்வளவு நம்மை சிந்திக்க வைக்கிறது ஆய்வுக்குரியது என்பதை புத்தகத்தில் உள்ள பல உரையாடல்களில் இருந்து நம்மால் கற்றுக் கொள்ள முடியும் குழந்தைகளிடமிருந்து ஆயிரம் ஆயிரம் கேள்விகள்  முளைத்து கொண்டே இருக்கிறது. நாம் அதற்கு பதில் சொல்ல முடியாமல் இருக்கும் பொழுது ஏதாவது காரணத்தைக் கூறி அவர்களை உதாசீனப்படுத்திவிட்டு கடந்து விடுகிறோம். அது எவ்வளவு தவறானது என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.

என் மகனுக்கு தற்பொழுது 12 வயது அவன் பிறந்ததிலிருந்து இதுவரை என்னவெல்லாம் எங்களிடம் பேசி இருக்கிறார் என்பதை திரும்பவும் நினைவு கூற வைத்துள்ளார் ஆசிரியர். நன்றி தோழர் 🙏 வீட்டில் குழந்தைகளின் உரையாடல்களை படித்ததும் வகுப்பறைக்குள்ளும் கலகலப்பான திருவிழாக்கள் வேண்டும் என்ற நம் கனவு மறுபடி துளிர்க்கிறது என்கிறார்.கல்வியாளர் ஐயா ச.மாடசாமி.

குழந்தை டார்வின் கேட்கிறான் நாங்க தான் உங்க லெவலுக்கு வரணுமா கொஞ்சம் கூட இறங்க மாட்டீங்களா என்றான். பெரியவர்கள் எப்போதும் குழந்தைகள் லெவலுக்கு இறங்கி வருவதில்லை என்பது சாட்டையடி கேள்வி.
பறவைகெள்லாம் கிளையை நம்பி உட்காருவதில்லை சிறகை நம்பி உட்காருகிறது
மனிதர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் சொல் தோழருடையது.

புத்தகம் வேணுமா….புத்தகம்
புத்தகம் வேணுமா….. புத்தகம் வீட்டுக்குள்ளேயே ஒரு புத்தக சந்தை…. அற்புதம் என் செல்ல அப்பத்தா செத்துப் போயிருச்சு….
என் தங்கை அப்பத்தா செத்துப் போயிருச்சே….
தன் இறப்பிற்கு முன்பே பேத்தியுடைய ஒப்பாரி குரலை கேட்டு மகிழ்ந்த அப்பத்தா…. உறவுகளில் மேன்மை🙏 புத்தகத்துடைய தலைப்பிற்கு என்ன அர்த்தம் என்று சிந்திக்க… புத்தகத்தின் 78 ஆம் பக்கத்தில் அதற்கான விளக்கம் தருகிறார் ஆசிரியர்
குடும்பமாக வட்டமாக உட்கார்ந்து சாப்பிடுவதில் குழந்தைகளுக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருக்கிறது…

குழந்தைகள் தரும் தண்டனைகள் வித்தியாசமானது தான், உடனடி மன்னிப்பு… இலவச இணைப்பாக இருக்கமான அணைப்பு…. பெற்றோர்களின் புரிதல சமாதானப்புறவாக செயல்படும் குழந்தை பாப்பா….
வெரி குட் என்ற ஒற்றை சொல்லுக்காக ஏங்கும் குழந்தைகள்…
இப்படி பல பல…… சிந்தனைகளை தூண்டும் உரையாடல்களை சொல்லிக்கொண்டே இருக்கலாம்…. டார்வினும் பாப்பாவும் அவ்வளவு கேள்விகள் கேட்டு இருக்கிறார்கள்.

குழந்தைகளின் பேச்சுகளுக்கும் கேள்விகளுக்கும் ஈடு கொடுக்க முடியாமல் திணறும் பள்ளிக்கூடங்களுடைய ரியாலிட்டி தெரியப்போகிறது என்ற கேள்வியோடு முடிக்கிறார் ஆசிரியர்.

நன்றி

 

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/dujak-dujak-oru-appavin-diary/

Latest

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுத் தொடர் கட்டுரை – 4 – கவிஞர். எஸ்தர்ராணி

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு தொடர் கட்டுரை – 4 கூட்டாஞ்சோறு அரங்கு –...

நான் ரசித்த கவிஞர்கள் – 1 : ஷெல்லி – தங்கேஸ்

மொழிபெயர்ப்புக் கவிதைகள் ஷெல்லி - பகுதி 1 தமிழில் - தங்கேஸ் ஷெல்லி (1792-1882) ஆங்கிலக்...

இரா. மதிராஜ் கவிதைகள் 

1 இந்த பூக்கள் மட்டும் எப்படி ? நல்லது, கெட்டதுக்கு என இரு வாசனையை கொடுக்க முடிகிறது ? 2 அந்த வளர்பிறையைச் சுற்றி வரையப்...

நூல் அறிமுகம்: சுளுந்தீ – அ.ம. அங்கவை யாழிசை

நூல்: சுளுந்தீ நூலாசிரியர்: இரா.முத்துநாகு வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை. பதிப்பு: எட்டாம் பதிப்பு, செப்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுத் தொடர் கட்டுரை – 4 – கவிஞர். எஸ்தர்ராணி

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு தொடர் கட்டுரை – 4 கூட்டாஞ்சோறு அரங்கு – தமுஎகச, தென்சென்னை மாவட்டம். காளியும் கூளியும் காக்கவில்லை: இந்த பூமி சூரியனைச் சுற்றுகிறதா இல்லை சூரியன் பூமியைச் சுற்றி வருகின்றதா என்று கேட்டால்...

நான் ரசித்த கவிஞர்கள் – 1 : ஷெல்லி – தங்கேஸ்

மொழிபெயர்ப்புக் கவிதைகள் ஷெல்லி - பகுதி 1 தமிழில் - தங்கேஸ் ஷெல்லி (1792-1882) ஆங்கிலக் கவிஞர் ஒரு நூற்றாண்டு உதடுகளால் உச்சரிக்கப்பட்ட பெயர் புரட்சிக்கவிஞன் ஷெல்லியினுடையது. முப்பது ஆண்டுகளே உயிர்த்திருந்த அந்த கவிஞனின் படைப்புகள் மூவாயிரம் ஆண்டுகள் தாண்டியும்...

இரா. மதிராஜ் கவிதைகள் 

1 இந்த பூக்கள் மட்டும் எப்படி ? நல்லது, கெட்டதுக்கு என இரு வாசனையை கொடுக்க முடிகிறது ? 2 அந்த வளர்பிறையைச் சுற்றி வரையப் பட்டிருக்கும் மேகக் கூட்டங்கள் நிலாவுக்கான பின்புலத்தை ஏதோ ஒரு வகையில் அழுத்தமாகத் தான் காட்டுகிறது, 3 சுழன்றடிக்கும் அந்த எதிர்க் காற்றை எதிர்த்து தென்னை மரத்தின் கீற்றுகள் அனைத்தும் ஒற்றுமையாக தான் போராடுகிறது, என்னே இத்தனைப் பெரிய வானம் வெறும் வேடிக்கை மட்டும் தானேப்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here