Subscribe

Thamizhbooks ad

கவிதை: “எலும்பில்லாத கறி” – மஞ்சுளாதேவி

 

 

 

 

எலும்பில்லாத கறி

சிவராத்திரி முடிந்து
இரண்டு வாரம் தாண்டி
மறுபூசை நடக்கும்.
முழு ஆடும் பங்காளிகளுக்கு மட்டும்
வெளிஅழைப்பு கூடாதென்பதில்
அப்பத்தா கடுமை காட்டுவாள் எப்போதும்.
பரம திருப்தி அப்பு
கட்டுக்குலையாம இருக்கணும்
என்று சாமியாடி
திருநீறு கொடுத்துப் பானகம் குடித்ததும்
இலை போடுவார்கள்
குழந்தைகளுக்கென்று தனிவரிசை
ராத்திரி ஒரு மணிக்கு
சாப்பிடுகிறார்களா சாமியாடுகிறார்களா
என்று தெரியாது.
பரிமாற வரும் அக்காள்
தங்கை குழந்தைகளுக்கு எச்சுக் கறியை
வைக்காதது போல வைத்துச் செல்வாள்.
தங்கச்சி பரிமாற வரும்போது
அக்காள் குழந்தைகளுக்கு
எலும்பில்லாத கறி அதிகமாய்
வைப்பாள்.
வீட்ல திங்க வழி இல்லாததுக
இதுக மூணும்
என்று சொல்லி
கடும் சைவக்காரி பெற்ற மூவருக்கும்
ஆளாளுக்கு கறித்துண்டுகளைப் போட்டுக்
கொண்டேயிருப்பார்கள்.
தனியேபொறுக்கி வைத்த ஈரல் துண்டுகள்
எல்லாக்குழந்தையின் இலையிலும் இருக்கிறதா என்று
கண்ணைச் சுருக்கிப் பார்த்துக் கொண்டிருக்கும்
அப்பத்தா பக்கத்திலிருந்து
எல்லாவற்றையும்
பார்த்துக் கொண்டிருக்கும் கருப்பராயன்
அப்பத்தாவைப் பார்த்து நடுங்கிக் கொண்டிருப்பார்.

— மஞ்சுளாதேவி

Latest

ஆயிரம் புத்தகங்கள் , ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – தொவரக்காடு – பாஸ்கர்கோபால்

      மனித வாழ்வியல் முறையில் மிகச் சரியாக இயற்கையோடு ஒன்றி சந்தோசத்திற்கு இமி...

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – நெருங்கி வரும் இடியோசை – அமீபா

      "தலைவலியும் வயிற்று வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்" என்றொரு சொல்...

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ஒளியின் சுருக்கமான வரலாறு – பேரா. P. கலீல் அஹமது –

      ஒளியின் சுருக்கமான வரலாறு – ஆயிஷா இரா. நடராசன் நாம் வானவில்லைக்...

ஆயிரம் புத்தகங்கள் ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – வேர்களின் உயிர் – முகில் நிலா தமிழ்

      கோவை ஆனந்தன் அவர்கள் எழுதிய "வேர்களின் உயிர்" கவிதை நூல் வாசிப்பு...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

ஆயிரம் புத்தகங்கள் , ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – தொவரக்காடு – பாஸ்கர்கோபால்

      மனித வாழ்வியல் முறையில் மிகச் சரியாக இயற்கையோடு ஒன்றி சந்தோசத்திற்கு இமி அளவும் குறைவில்லாமல், ஒவ்வொரு நொடிப்பொழுதும் அழகாகவும், சந்தோஷமாகவும் வாழும் ஒரே இடம் கிராமம் மட்டுமே.நாம் பலபேர் கிராமத்தில் பிறந்து, வேலை...

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – நெருங்கி வரும் இடியோசை – அமீபா

      "தலைவலியும் வயிற்று வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்" என்றொரு சொல் வழக்கு உண்டு. பசியின், பஞ்சத்தின் வலிகள் கூட மனித சமூகத்திற்கு அவ்வளவு சுலபத்தில் புரிந்து விடுவதில்லை. அதை தெளிவாக மனதிற்குள்...

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ஒளியின் சுருக்கமான வரலாறு – பேரா. P. கலீல் அஹமது –

      ஒளியின் சுருக்கமான வரலாறு – ஆயிஷா இரா. நடராசன் நாம் வானவில்லைக் காணும் போது மட்டும் ஏன் மற்றவர்களை அழைத்துக் காண்பிக்கிறோம் என்ற கேள்விக்கணையோடு தொடங்கி, வானவில்லுக்காக 62 நாடுகள் பயணித்து பல்வேறு...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here