Subscribe

Thamizhbooks ad

நூல் அறிமுகம்: என் பெயர் ‘ஙு’ – எஸ். ஹரிணி

நூலின் பெயர் : என் பெயர் ‘ஙு’ (எறும்புக் கோட்டைக்குள் இரும்புப் பெண்)
ஆசிரியர் : வே.சங்கர்
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்
பக்கங்கள் : ௪௮
விலை : ரூ.50/-

எப்போதும் சுறுசுறுப்பிற்கும், அயராத உழைப்பிற்கும், எதிர்கால சேமிப்பிற்கும் எறும்புகளையே உதாரணமாகச் சொன்னாலும், அவைகள் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட புத்தகமே “என் பெயர் ‘ஙு’.

குழந்தைகளின் வாசிப்புத் திறனையும், கற்பனைத் திறனையும் வளர்ப்பதற்கு இந்நூல் உதவியாக இருக்கும் என்று சொன்னால் அது மிகையல்ல.

“என் பெயர் ‘ஙு’ நூலின் தலைப்பைப் போலவே அவற்றில் உலாவரும் கதாப்பாத்திரங்களின் பெயர்களும் புதுமையாக உள்ளன. ஒற்றை எழுத்தில் பெயர்களும், அதுவும் பெருமளவில் புழக்கத்தில் இல்லாத ‘ங’, ‘ஙி’, ‘ஙு’ வரிசையில் இடப்பட்டுள்ள பெயர்களும் சிறப்பு.

சின்னச்சின்னதாக 14 அத்தியாயங்களைக் கொண்ட இப்புத்தகம் எறும்புகளின் மொத்த வாழ்க்கை முறையையும், உணவு தேடும் முறையையும், தன்னையும் தன் கூட்டத்தையும் பாதுகாக்க அவைகள் முன்னெடுக்கும் உத்திகளையும் மிக எளிதாகப் புரிந்துகொள்ளும் விதமாக எழுதப்பட்ட விதம் வியப்பில் ஆழ்த்துகின்றன.

நான் சிறுவயது முதலே, “எறும்புகளுக்கு நம்மைப் போலவே வீடு இருக்குமா? நம்மைப் போலவே சொந்த பந்தங்கள் இருக்குமா?” போன்ற கேள்விகள் என்னுள் எழுந்துகொண்டே இருக்கும்.

என் எல்லாக் கேள்விகளுக்கும் விடையாகவும், ஒரு சிலிர்ப்பூட்டும் கதையை வாசித்த உணர்வையும் இந்நூல் கொடுத்தது. குழந்தைகள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக எளிய வார்த்தைகளைக் கையாண்டவிதம் அருமை. இந்நூலை வாசிக்கும் எல்லாக் குழந்தைகள் இப்புத்தகம் நிச்சயம் பிடித்துப் போகும்.

முக்கியமாக ‘ஙு’ என்ற கதாபாத்திரம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. காரணம், ’ஙு’ தான் எறும்புகளின் புத்திசாலித்தனத்தைப் பற்றியும், பிரச்சனைகளை பொறுமையாக எதிர்கொள்ளும் முறை பற்றியும் மிக அருமையாகயும், நுணுக்கமாகவும் சொல்லிச்செல்கிறது.

எறும்பைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் வாசிக்க வேண்டிய புத்தகம் ”என் பெயர் \ஙு’” – எறும்புக்கோட்டைக்குள் இரும்புப் பெண்.

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/en-peyar-ngu/

புத்தகம் ஆர்டர் செய்ய: 04424332924

Latest

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சேங்கை நாவல் – பாரத் தமிழ்

      எப்பேர்ப்பட்ட வாழ்வியலையும் துணிச்சலாகப் பதிவு செய்வது இந்தக் காலத்து படைப்பாளிகளுக்கு சாத்தியமே....

கவிதை: ‘அழகு’ – கவிஞர் பாங்கைத் தமிழன்

      இது ஓர் அழகான உலகம்! இது யாரோ ஒருவரால் படைக்கப்பட்டதா? இது தானாகவே உருவானதா? உலகம் அழகானதே! அறிவியலைத் தாண்டி அஞ்ஞானமும் கோலோச்சுகிறது? இது ஒரு முடிவற்ற கதை! இப்போது உலகத்திற்கு வருவோம்; உலகம் ஓர் ஒப்பற்ற...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – குற்றியலுகரம் – பாபு கனிமகன்

      சிறுதிருடர்களின் சம்பாஷனைகளுடன் தொடங்கும் கதை பெருந்திருடர்களின் ஆக்கிரமிப்பை, அந்த ஆக்கிரமிப்பை நடத்த...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – முட்டிக்குறிச்சி – பாலச்சந்திரன்

        .புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் கிராமம் அகரப்பட்டியைச் சேர்ந்த தீ.திருப்பதி என்ற இயற்பெயர்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சேங்கை நாவல் – பாரத் தமிழ்

      எப்பேர்ப்பட்ட வாழ்வியலையும் துணிச்சலாகப் பதிவு செய்வது இந்தக் காலத்து படைப்பாளிகளுக்கு சாத்தியமே. ஆனால் நேர்மையாகப் பதிவு செய்வதுதான் எந்தக் காலத்திலும் சாத்தியமில்லாத ஒன்று. அந்த நேர்மையான பதிவுகள்தான் சேங்கை நாவலின் வெற்றியாக நான்...

கவிதை: ‘அழகு’ – கவிஞர் பாங்கைத் தமிழன்

      இது ஓர் அழகான உலகம்! இது யாரோ ஒருவரால் படைக்கப்பட்டதா? இது தானாகவே உருவானதா? உலகம் அழகானதே! அறிவியலைத் தாண்டி அஞ்ஞானமும் கோலோச்சுகிறது? இது ஒரு முடிவற்ற கதை! இப்போது உலகத்திற்கு வருவோம்; உலகம் ஓர் ஒப்பற்ற அழகு! எந்த ஒரு மனிதனும் இவ்வுலகத்தை அழகாக்கியதில்லை; மாறாக.... அசிங்கப்படுத்தியே வந்தான், வருகிறான்; வருவான்? அந்த அசிங்கப் படுத்தல் வேறொன்றும் இல்லை; சாதி செய்து.... சமயம் செய்து.... சாக்கடையாய் ஓட விட்டதுதான்! ******** ... கவிஞர் பாங்கைத் தமிழன்...  

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – குற்றியலுகரம் – பாபு கனிமகன்

      சிறுதிருடர்களின் சம்பாஷனைகளுடன் தொடங்கும் கதை பெருந்திருடர்களின் ஆக்கிரமிப்பை, அந்த ஆக்கிரமிப்பை நடத்த அவர்கள் நடத்தும் சாணக்கியத்தை வெளிப்படையாகப் பேசுகிறது. ஒரு சிறு தொழிலாளி முதலாளியாக ஆசைப்பட்டால் அவர் எதற்கெல்லாம் தயாராக இருக்க வேண்டும்;...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here