எங்களுக்கும் காலம் வரும் கவிதை – வெ.நரேஷ்

எங்களுக்கும் காலம் வரும் கவிதை – வெ.நரேஷ்




எங்களுக்கும் காலம் வரும்
******************************
ஊரோரம் ஒதுக்குகையில
உஞ்சோறு வேவுதடா
ஒவ்வொரு ராத்திரியும்
எம்புள்ள வாடுதடா

எத்தன நாட்களுக்கு
ராப்பகலா முழிச்சிருக்க
எங்கெங்கே அலையுரேனே
எங்குடும்பம் விழுச்சிருக்க

ஊர் வெளியே காவகாக்கும் கருப்பசாமி கேக்கலையே
ஊர் நாடி வந்தோம் எங்கள வீட்டுக்குள்ள சேக்கலையே

சாலையோரம் போகும் போது
சாதி சாயம் பூசுறியே
சாமிகிட்ட போயிச்சொன்னா  

சாமிகூட  கேக்கலையே

பூர்வ குடி மக்க நாங்க
புறந்தள்ளிப்  போறோமையா
பூவுலகில் வாழ்வதற்கு
போறாத காலமையா

எங்களுக்கும் காலம் வரும்
காத்திருந்து பாருமையா

காலம் மாறும்போது

கவலையெல்லாம் தீருமையா

– வெ.நரேஷ்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 1 Comment

1 Comment

  1. Suresh Esakkipandi

    அருமை அருமை
    வரிகள் ஒவ்வொன்றும் எளியவரின் ஏக்கத்தை வெளிப்படுத்துது தோழர்…

    தொடர்ந்து எழுதுங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *