Enge Pogiraai Poetry by Poet Vasantha. Book Day And Bharathi Tv Are Branches of Bharathi Puthakalayam Publication.

எங்கே போகிறாய்? – வ. சு. வசந்தா



எங்கே போகிறாய்?

எங்கே போகிறாய்?
ஏனிந்த அவசரம்!
உண்டாயா , உறங்கினாயா;
கண்டாயா,
கேட்டாயா;
பார்த்தாயா,
பரவசம் கொண்டாயா;
நின்றாயா,
நடந்தாயா;
நெடுந்தூரம் சென்றாயா;
கொடுத்தாயா,
கொள்வினை செய்தாயா;
விதைத்தாயா,
அறுவடை செய்தாயா;
பகைத்தாயா,
பாவம் தீர்த்தாயா;
சிதைத்தாயா,
சிந்தித்தாயா;
மறைத்தாயா,
மனத்துயர் களைந்தாயா;
தேன் கலந்து கொடுத்தாயா;
எங்கே போகிறாய்?
ஏன் இந்த அவசரம்!

வ.சு. வசந்தா
விருகம்பாக்கம்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 4 Comments

4 Comments

  1. சாந்தி சரவணன்

    சிறப்பு மா. மனமார்ந்த வாழ்த்துகள்

  2. ஆ. கணேசன்

    இது அவசர காலத்தில் இருக்கின்ற மக்களைப் பார்த்து பொறுமையாக சிந்தித்து நிதானமாக எழுதிய வரிகள் சிந்திக்க வைக்கிறது சிறப்பு தோழர் வாழ்த்துகள்

  3. Rathika vijayababu

    வாழ்த்துகள் அம்மா

  4. கீதா சுந்தர்

    யாருக்கும் பதில் தெரியாத கேள்விகள்..
    அருமையான தத்துவ கவிதை மா
    வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *