Enge Sendrai Kavithai By Saravibi RosiChandra எங்கே சென்றாய் ? கவிதை - சரவிபி ரோசிசந்திரா



எங்கே சென்றாய் நீ
எங்கே சென்றாய்
எங்கே சென்றாய் நீ
எங்கே சென்றாய்

என்னை நீ தொலைத்து எங்கே சென்றாய்
என்னை நீ அழைத்து எங்கே சென்றாய்

தினந்தோறும் பணந்தேடி
எங்கே சென்றாய்
திசைதோறும் புகழ்தேடி எங்கே சென்றாய்
உடலுக்குள் உயிர் காணாமல்
எங்கே சென்றாய்
உடலை தினம் பேணாமல்
எங்கே சென்றாய்

எங்கே சென்றாய் நீ
எங்கே சென்றாய்
எங்கே சென்றாய் நீ
எங்கே சென்றாய்

எதிலும் நான் தெரிகின்றேன்
எங்கே சென்றாய்
எல்லாம் நான் அறிகின்றேன்
எங்கே சென்றாய்

பேதமின்றி அள்ளித் தந்தேன்
எங்கே சென்றாய்
பேரிடரிலும் துணை வந்தேன்
எங்கே சென்றாய்
மும்மலம் நீ அறியாமல்
எங்கே சென்றாய்
முற்பிறவி நீ தெரியாமல்
எங்கே சென்றாய்

எங்கே சென்றாய் நீ
எங்கே சென்றாய்
எங்கே சென்றாய் நீ
எங்கே சென்றாய்

உயிர்தோறும் என்னைக் காணாமல் நீ எங்கே சென்றாய்
உள்ளத்தில் என்னை எண்ணாமல் நீ எங்கே சென்றாய்

சிற்றின்பத்தை ரசித்த நீ
எங்கே சென்றாய்
சிந்தையை வெறுத்த நீ
எங்கே சென்றாய்
நான் அக்கத்தில்
இருக்கின்றேன் நீ
எங்கே சென்றாய்
நான் பக்கத்தில்
பார்க்கின்றேன் நீ
எங்கே சென்றாய்

எங்கே சென்றாய் நீ
எங்கே சென்றாய்
எங்கே சென்றாய் நீ
எங்கே சென்றாய்

நிம்மதியாய் தினம் வருகின்றேன்
எங்கே சென்றாய்
நிம்(ம)தியை மறந்து நீ
எங்கே சென்றாய்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



One thought on “எங்கே சென்றாய் ? கவிதை – சரவிபி ரோசிசந்திரா”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *