எண்ணம் ஈடேறும் சிறுகதை – நிரஞ்சனன்

எண்ணம் ஈடேறும் சிறுகதை – நிரஞ்சனன்




அம்மா, பானிபூரி வேணும்?

பலூன் விற்றால் தான் காசு ….. அப்புறம் பார்ப்போம்….

மக்கள் கூட்டம், அவரவர் தேவைக்கு இருப்புக்கு ஏற்ப கடைகளில் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். ஜனங்கள் அதிகம் இருக்கும் வீதியில் 12 வயது கூட இல்லாத பொண்ணு, அவங்க அம்மா க்கு பலூன் காற்று அடித்து உதவிக் கொண்டு இருக்கிறாள். அன்றைய விற்பனையில் அவர்களின் வாழ்க்கை…..

பலூன் விற்பனைக்கு கொடுத்து சென்றவன் ஒரு பலூன்னுக்கு இவளோ கொடுத்து விடனும்….. எங்கேயும் ஓட முடியாது, எங்க ஆளுக சுற்றி சுற்றி தான் இருக்காங்க….மிரட்ட…

முதலிலே காசு வாங்கிக் கொண்டு கொடுத்து இருக்கலாம், ஆனால் எப்படி விற்பனை செய்கிறார்கள் அதை பொறுத்து இறுதியில் வசூல் வேட்டை….. கேட்கவே கொஞ்சம் பரிதாபம் தான்…. அதிக விலைக்கு விற்றால் கூட அவர்களுக்கு கிடைப்பது அந்த சொற்ப பணமே……

நம் கதாநாயகி கொஞ்சம் சுட்டி & துணிச்சல், வியாபாரி கூப்பிட்டு, இவளோ பலூன் கொடுத்து இருக்கீங்க, விலை என்ன? சேர்ந்தவுடன் வாங்கிக்கோ, அதை விடுத்து அவ்ளோ சம்பாதித்த கொடுன்னு சொல்லக் கூடாது என சொல்லி விடுவாள்…..

இப்போ விற்பனை தொடங்க ஆரம்பம்…… பலூன் விற்பனையில் அவர்களுக்கு கிடைப்பது என்னவோ சொற்ப காசு தான், ஆனால் அவள் செய்யும் விற்பனை யுக்தியில் அதிக பலூன் விற்பாள், அது அவளின் திறமை…… சிலர், எல்லாரும் வந்து வாங்க வேண்டும் என நின்ன இடத்தில் நின்று கொள்வார்கள்….. அதற்க்கு போட்டி, இங்க அதிக கூட்டம் வரும் நான் தான் என ஒரு கும்பல், அந்த கும்பலுக்கு சப்ப கட்டு கட்ட 2 பேர்…..

நம்ம நாயகிக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை, அவளைப் பொறுத்த வரை அதிக விற்பனை அதிக லாபம் அவ்ளோ தான்…. 1 பலூன் ரூ.20 என்றால், வாங்கினால் அவளின் திறமை….. நிற்பவர்கள் 20 கீழ வர மாட்டார்கள், நம் நாயகி அப்படி அல்ல, அதிகம் வாங்குவோரிடம் அதற்க்கு தக்கன விலை நிர்ணயம், ஆனால் நஷ்ட பட மாட்டாள்…..

ஒரே ஓட்டம் தான், தேங்கிய நீரா இல்லாமல் ஆறு போல நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும், அப்போது தான் கடல் என்னும் மக சமுத்திரம் அடைய முடியும் என்ற நம்பிக்கை. 15 பலூன்கள் எடுத்துக் கொண்டு ஓடுவாள், இவளோ குழந்தை மற்றவர்கள் கையில் இருக்கும் குழந்தைகள் தேடிக் கண்டு ஓடுவாள்….. கலர் கலரா கூட கேட்ட கலர் என அவளின் விற்பனை யுக்தி தனி ஃபார்முலா….

நம் நாயகிக்கு பானிபூரி கண்டதும் உண்ண ஆசை, ஆனால் அவளிடம் இருக்கும் பைசா பூரிக்கு பற்றாது, இன்னும் விற்பனை செய்ய வேண்டும், ஆனால் கூட்டம் பார்த்தா, பூரி கிடைக்காது போல, என்ன செய்யலாம் என யோசித்தாள்…..

எவ்ளோ ? என்றவளிடம், 8 பத்து ரூபாய் என்றான்.. … கையில் இருக்கும் காசை எண்ணினாள், போதுமானதாக இல்லை…..

பலூன் விற்க போன பூரி இறாது, இவன் கடன் க்கு தர மாட்டான்…, எண்ணம் சரியா இருந்தால் ஈடேறும் என்பது பிரபஞ்ச விதி அல்லவே…..

ஒரு பெண் கை குழந்தையுடன் வந்தாள், இவள் நினைத்தாள் பலூன் வாங்க என, வந்தவள் பூரி நோக்கி போக, சற்று ஏமாற்றம்…… ஆனால் குழந்தை கீழ விட்டு பூரி சாப்பிட முடியாது, அவளும் திருக்க திருக்க முழிக்க….. நான் வேனா தட்டு பிடிக்கிறேன், நீ சாப்பிடு க்கா என்றது அந்த பிஞ்சு மனசு…..

ஒரு தாய இருந்து கொண்டு, ஒரு குட்டி பிடிக்க எடுத்து சாப்பிட மனசு வருமா…. நான் ஒன்னு நீ ஒன்னு தட்டு நீ பிடி என்றதும் அவளின் கால்களை தரையில் காணோம்….. அதாவது எண்ணங்கள் பறக்க தொடங்கி விட்டது……

உடனே பலூன் ஒரு கையில், தட்டு ஒரு கையில்…… அவளே ஊட்ட….வேணும் அளவிற்கு இருவரும் உண்டு விட்டு….. அவளின் திருப்தி அவளின் முகத்தில் தெரிந்தது…. கிளம்பும் போது, குட்டி பாப்புக்கு இந்த பலூன்…. எவ்ளோ மா?

அட போ க்கா……

நகர்ந்து சென்று கூட்டத்தில் மறைந்தாள், அடுத்த விற்பனைக்கு…….

அன்றைய அவளின் கனவு நிறைவேறியது……

– நிரஞ்சனன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *