எப்போது முடியும் இந்த நாடகம்? கவிதை – ச.லிங்கராசு

எப்போது முடியும் இந்த நாடகம்? கவிதை – ச.லிங்கராசு




மீண்டும் ஒரு கபட நாடகத்தை
அரங்கேற்றத் துடிக்கும் அவலம்
இங்கே ஆரம்பித்து விட்டது
பேதத்தை மறந்ததைப் போல் காட்டி
வேதத்தை முன்நிறுத்தச்செய்யும்
வேலைகள் இங்கே மிக வேகமாக

நரிகளே தோற்றுப் போகும்
நயவஞ்சக தந்திரங்கள்
இந்த நலிந்தோரிடம் எடுபடுவதுதான் கொடுமை
நெருப்பைத் தீண்டும் குழந்தைகளாய் நிறைந்து
வருகிறார்கள் இந்த அப்பாவிகள்

எல்லா இனத்திலும் ஊடுருவி
ஏணியில் ஏற்றிப் பின்னர்
சநாதனத்தின் வெறி கொண்டு
சாய்த்து விடுவதில் மன்னர்கள்
இந்த சாபகேடுகள்

சிறு கூட்டத்தின் சாமர்த்தியம்
இன்று பெருங்கூட்டமாய்த் திரண்டு
மதமென்னும் ஒற்றைச் சொல்லில் மாற்று மதம் வெறுக்கிறது.

என்று இந்த ஏமாற்றம் அறிவார்
இந்த எளியோர்கள்?
அன்றுதானே இங்கு ஆனந்தம்
எங்கெங்கும்!

தேச விடுதலைக்குத் தோள்
கொடுக்காதவர்கள்
தேச துரோகம் பற்றி ஒப்பாரி
வைக்கிறார்கள்
சுதேசியம் கூட ஒரு காலத்தில்
பேசிப் பார்த்தவர்கள்
இன்று சர்வதேச கார்ப்பரேட்டுகளுக்கு
ஏஜென்டுகள் ஆனார்கள்!

– ச.லிங்கராசு

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *