இறக்குமதி (மொழிப்பெயர்ப்பு கவிதைகள்) – ஒரு வாசிப்பு பகிர்வு
ஈரோடு தமிழன்பன் அவர்களின் பெரும் உழைப்பிலான தொகுப்பு. உலகின் பல்வேறு மொழிகளில், பல்வேறு காலங்களில் வெளிவந்த சிறந்த கவிதைகளும் இந்திய மொழிகள் சிலவற்றின் கவிதைகளும் இத்தொகுப்பில் காணப்படுகிறது. எல்லா மொழி கவிதைகளையும் மூல மொழியிலிருந்து மொழிபெயர்ப்பது இயலாது என்பதால் ஆங்கில வழியில் இருந்தே மொழி பெயர்த்ததாக கூறுகிறார்.இத்தொகுப்பின் வழி பிற மொழிகளின் கவிதை தளம், கணம், குணம் என பலவற்றையும் அறியலாம் உணரலாம், நுகரலாம். கவிதை இயக்கத்தின் உலகளாவிய நிலையை தெரிந்து கொள்ளவும் தொகுப்பு நிச்சயம் உதவும்.
ஏறக்குறைய 15 வெளிநாட்டு மொழிகளில் இருந்தும் 10 இந்திய மொழிகளிலிருந்தும் கவிதைகளை மொழிபெயர்த்து ஒரு தொகுப்பாக போட்டிருக்கிறார் கவிதைகளின் வகைப்பாடு என எடுத்துக்கொண்டால் காதல் கவிதைகளை முக்கிய தேர்வாகக் கொண்டிருக்கிறார் என இப்புத்தகத்தை வாசிக்கும் போது தெரிகிறது.
ஒரு ஜப்பானிய கவிதை
என்னை விரும்புகிறாயோ இல்லையோ
எப்படியோ இருக்கட்டும் என் வீட்டு வாசலில் ஆரஞ்சு மரம் பூத்திருப்பதை பார்க்கக்கூட
வர மாட்டாயா?
ஒரு இஸ்பானிய கவிதை
நிலாவுக்கு கீழே
தங்கமும் நிழலுமாய் புலி தனது நகங்களை
குனிந்து பார்க்கிறது வைகைறையில் ஒரு மனிதனை
அவை கிழித்தெறிந்ததை அறியாமல்.
ஒரு சீன கவிதை
பூண்டு இதழ் மேல்
விழுந்த பனித்துளி எவ்வளவு விரைவாக உலர்ந்து விட்டது? அவ்வளவு விரைவாக உலர்ந்த பனித்துளி நாளை
மறுபடியும் விழும்
ஆனால்
எவரை புதைக்க
நாம் சுமந்து சென்றோமோ அவர் ஒருபோதும்
திரும்பப் போவதில்லை.
ஒரு சமஸ்கிருத கவிதை
தாமரையும் நிலாவும்
உன் முகத்தை
நகல் செய்ய
வழி தேடுகின்றன. ஏனெனில்
உன் முகம்
காதலின் வெற்றி ஆயுதம் அதனால் தான் அவற்றிடையே
அப்படி ஒரு போட்டி. அதனால்தான்
ஈரக்கதிர் நிலா
தாமரை மலர
தடை போடுகிறது
ஒரு ஹீப்ரு கவிதை
ஞானத்தை தேடுபவர்கள் வயிறு புடைக்க உண்பதில்லை
மது தரும் இன்பத்தை புறந்தள்ளுகின்றனர். சாப்பிட முடியும்
அதற்காக வாழ்வோம் என்பவர்கள் அல்லர். அவர்கள் வாழ முடியும் அதற்காக
கொஞ்சம் சாப்பிடலாம் என்பவர்கள்.
ஒரு ஆங்கில கவிதை
இரவு மிகவும் கருத்திருக்கிறது. வண்டிகள் நகர்ந்து கொண்டிருப்பதை பார்க்கிறோம்.
சிலவற்றை
அவற்றின் விளக்குகளால் சிலவற்றை
இருண்டு வரும் இருளால் சில வண்டிகள்
நகர்ந்து கொண்டிருக்கின்றன விளக்குகள் இல்லாமலே.
ஒரு பாரசீக கவிதை
வயலில்
இருக்கும் வரை
பயிர்கள் யாவும் ஒன்றாகவே தெரிகின்றன. களத்து மேட்டுக்கு
வந்த பிறகுதான் தெரிகிறது
எல்லாமே பாதி பயிர்
பாதி பதர்.
இந்திய மொழிகள் கவிதைகளாகட்டும் அயல்மொழி கவிதைகளாகட்டும் ஒரே மாதிரியான சிந்தனைப் போக்கை தான் கொண்டிருக்கின்றன என்பதை இந்த புத்தகம் வாசிக்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது. அருமையான நூல்.
நூலின் தகவல்கள் :
நூலின் பெயர்: இறக்குமதி (மொழிப்பெயர்ப்பு கவிதைகள்)
நூல் தொகுப்பு : ஈரோடு தமிழன்பன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
வெளியீடு : பிப்ரவரி 2023 (இரண்டாம் பதிப்பு)
விலை : ரூ.150/
பக்கங்கள்: 150
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
நூல் அறிமுகம் எழுதியவர் :
சகுவரதன்
குடியாத்தம்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.