Essential requirements for internet classroom 80th Series by Suganthi Nadar. Book Day. Trains and omnipotence இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 80 - தறி கெட்டு ஓடும் ரெயில்களும் சர்வ வல்லமையும்

தறி கெட்டு ஓடும் ரெயில்களும் சர்வ வல்லமையும்

நாம் முன்பு பார்த்த தறிகெட்டு ஓடும் மின் ரெயில் புதிர் கொண்டு வந்த Philippa Ruth Foot, Judith Jarvis Thomson இருவரும் தத்துவஞானிகள் மட்டுமே. மனித மனம் எவ்வாறு சிந்திக்கின்றது ? மனித சிந்தனையில், மனிதனின் ஒழுக்க நெறி (உசனம் ethics)பற்றிய ஆராய்ச்சியில் ஒரு பகுதியாகவே தறிகெட்டு ஓடும் மின் ரெயில் புதிர் கொண்டுவரப்பட்டது. இப்பிரச்சனையை ஒரு பொறியாளரிடம் கொடுத்து இருந்தால், அவர் அந்த இரயிலை எப்படி நிறுத்த முடியும் என்று சிந்தித்து இருப்பார் தானே? ஒரு சட்ட அறிஞரிடம் கொடுத்து இருந்தால் இப்படி ஒரு விபத்து நடக்காமல் இருக்க சட்டப்படி வழி செய்வார்தானே? ஒரு மருத்துவரோ விபத்து நேர்ந்தால் என்னென்ன சிகிச்சை செய்ய வேண்டும் என்று யோசிப்பார், இப்புதிரை ஒரு மொழியாளரிடம் கொடுத்தால் விபத்து பற்றிய காரண காரியங்களை ஆராய்ந்து அதை பிறரோடு பகிர்ந்திருப்பார். மற்றக் கலைஞர்களும் தங்கள் சிந்தனைக்கு ஏற்ப இப்பிரச்சனையை வெளிப்படுத்தி இருப்பார்கள். ஒரு பொருளாதார வல்லுனரிடம் கொடுத்தால் அவர் விபத்தின் பொருளாதாரச் சிக்கல்களை அலசி ஆராய்வார்.

இந்தப் புதிரை விடுவிக்க ஒவ்வோரு துறையினரும் ஒரு குழுவாக முயலும்போது, நல்விளைவுகளைப் பெருக்கவும், தீய விளைவுகளைக் குறைக்கவும் முடியும்தானே? நாம் இன்று அப்படித்தான் செய்து வருகின்றோம். ஆனால் குழுவில் செய்தாலும் புரிதல் குறைவு நேரம் கடத்தப்படுதல் போன்ற பிரச்சனைகளை நாம் சந்திக்கின்றோம், இந்த நேரக் கடத்துதல் பிரச்சனைதான் சர்வவல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டிய அவசியத்தை நமக்குக் கொடுக்கின்றது.

நாம் வாழும் பூமி கொஞ்சம் கொஞ்சமாக ஆனால் விரைவாக அழிந்து கொண்டு இருக்கின்றது. புவி அழிய முடியுமா என்ன? 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் dinosaurs (பெருத்த தொன்ம ஊருமினம்) வாழ்ந்து வந்ததாக தொல்லியியல் ஆராய்ச்சியில் கிடைத்த அவ்விலங்குகளின் எலும்புகள் சாட்சி கூறுகின்றன. ஆனால் தற்காலத்தில் அந்த விலங்கு இருப்பதற்கான அடையாளம் இல்லவே இல்லை.

அன்றையக் காலத்து உயிரின அழிவில் ஏறத்தாழ 75% அழிந்துவிட்ட காரணத்தால் இந்த பெருத்த தொன்ம ஊருமினம் மரபின்றி அழிந்து விட்டது(extinct) முழுமையாக அழிந்துவிட்டது என்றும் கூற முடியாது. பறவைகள் பெருத்த தொன்ம ஊருமினங்களின்( dinosaurs) வழித் தோன்றல் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இப்பேரழிவிற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் 1980களில் கண்டுபிடிக்கப்பட ஒரு உண்மை காலநிலை மாற்றம்தான். காலநிலை மாற்றத்தால் greenhouse effect உருவாகி மூச்சுவிடக் காற்று இல்லாமல் உயிரனங்கள் அழிந்து போயிருக்க வாய்ப்புகள் அதிகம்.

Essential requirements for internet classroom 80th Series by Suganthi Nadar. Book Day. Trains and omnipotence இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 80 - தறி கெட்டு ஓடும் ரெயில்களும் சர்வ வல்லமையும்

அப்படி அழிந்து போகக் காரணம் பூமியின் தட்பவெப்பநிலைதான். 2015ம் ஆண்டு Temperature of Earth என்ற தலைப்பில் எழுதப்பட்ட இணையக்கட்டுரையில் Jerry Coffey என்பவர் புவிக்கோளத்தின் சராசரி தட்பவெப்பநிலை 15 0c அல்லது 590 F என்கின்றார். பூமியின் தட்ப வெப்பநிலை அதிகரிக்கும் போது புவியில் உயிரினங்கள் வாழ இயலாமல் போய் விடும். பெருத்த தொன்ம ஊருமினங்களின்( dinosaurs) காலத்தில் மிகப்பெரிய பெரிய எரிமலைகள் வெடித்துக் கொண்டே இருந்ததால், அதிலிருந்து வெளிவரும் கரிமல வாயு புவியை சூழ்ந்துபுவியின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே இருந்திருக்கிறது. 

10 கிமி விட்டம் கொண்ட ஒரு புவியின் அதிர்ச்சியில் உருவான பெரிய பெரிய எரிமலைகளும், நிற்காது தொடர்ந்த காட்டுத்தீக்களும் சூழ்நிலையில் உள்ள கரியமில வாயு அதிகரிக்கக் காரணமானது விண்கோள் புவியைத் தாக்கியதால் எழுந்த கந்தகப்புகையும் கரியமில வாயுவும் புவியிலிருந்து 75% உயிரினங்கள் இறக்கக் காரணமாகிவிட்டன. இப்புகைகள் சூரியனையே பல்லாண்டுகள் மறைத்து உலகின் உறைபனிக்காலம் உருவாகியது. இந்த இரண்டு காரணங்களாலும் உயிரினங்கள் வாழ இயலாமல் மடிந்தே போயின. அப்படிப்பட்ட ஒரு தட்பவெப்ப சூழ்நிலையை நோக்கித்தான் நாம் இப்போது சென்று கொண்டு இருக்கின்றோம்.பெருத்த தொன்ம ஊருமினங்களின்( dinosaurs) அழிந்த காலத்தில் புவியின் தட்பவெப்பம் 50 C/410 Fஉயர்ந்து இருக்கலாம் என்று நம்பப் படுகின்றது. 1880 களிலிருந்து புவி ஒவ்வோரு பத்தாண்டுக்கும் 0.080C/0.140 F உயர்ந்து உள்ளது. ஆனால் கடந்த நாற்பது ஆண்டுகளில் 0.18° C/0.32° F தட்டப்வெட்பநிலையைப் பற்றிய தளமான https://www.climate.gov ல் ரெபெக்கா லின்ட்ஸி என்பவரும் லுயன் டால்மென் என்ற இருவர் கருத்துத் தெரிவித்து இருக்கின்றார்கள்.

அமெரிக்க நாசா இன்று தனது இணையதளத்தில் கூறுவதாவது, 10 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் காற்றில் கரியமில வாயுத் துகள்களின் அளவு ஏறக்குறைய 250p/million. 1950களில் காற்றில் கரியமில வாயுத் துகள்களின் அளவு 300p/million. ஆனால் தற்போது கரியமிலத் துகள்களின் அளவு 450 p/million, நாசா மேலும் அறிவுறுத்துவது பல்லாயிரம் ஆண்டுகளாக ஆகவே இருந்திருக்கிறது. 

நனது பாடத்திட்டங்களில் மாணவருக்கு மனிதாபிமான உணர்வு, அது சார்ந்த செயல்கள் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கும் முறையில் இருக்கின்றதா என்ற அளவீடு எவ்வளவு முக்கியம் என்று நமக்குப் புரிகின்றது. தொழில் புரட்சிக் காலத்திற்குப் பிறகு மிகப்பெரிய கண்டுபிடிப்பு கணினி. தொழில்புரட்சிக்காலத்தில் புத்தாக்க கருத்துக்களையும் புதிய கண்டுபிடிப்புக்களையும் கண்டுபிடித்துப் பயன்படுத்திய நாம், அதன் பின்விளைவுகளை யோசிக்காமல் விட்டதன் விளைவே பூமி அழிவை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டு இருக்கின்றது என்ற அச்சுறுத்தலுக்குக் காரணம். 

அப்படி இருக்க நம்முடைய பாடத்திட்டம்,  மனிதாபிமான உணர்வுகளையும் விழிப்புணர்வையும் கற்றுக் கொடுக்க வேண்டுமானால் கருணை அன்பு விட்டுக் கொடுத்தல் என்று நீதிக் கதைகளை மட்டும் சொல்லாமல், நம் புவியைக் காக்க வழி சொல்லும் விதமான விவரங்களைக் புவியை பாதுகாத்து வளப்படுத்தும் அறிவையும், விழிப்புணர்வையும் அதை செயலாற்றும் வழி முறைகளையும் கொண்டதாகப் பாடத்திட்டம் அமைய வேண்டும். இத்தகைய அறிவையும் விழிப்புணர்வையும் பெற்ற ஒருவர், செயலாற்றும் முன் அவற்றின் பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றால் அவர் ஒரு சர்வத்துறையிலும் வல்லமை பெற்றவராகத்தானே இருக்க வேண்டும் ?

முந்தைய தொடர்களை வாசிக்க:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 76(2030க்கான குறிக்கோள்களை நோக்கிய கல்வி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 77(டாவோஸ் செயல்திட்டமும் கல்வி 4.0ம்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 78(அது என்ன  மக்களைச்சார்ந்த முதலாளித்துவம்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 79(மாணவர்களின் வல்லமை) – சுகந்தி நாடார்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *