Subscribe

Thamizhbooks ad

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 83 – சுகந்தி நாடார்



கணினி, ஆசிரியர் மாணவர்: முதலில் வருவது யார்?

கணினி சார் உலகம் கணினிஇணை உலகம் என்ற இரு பிரிவுகளுக்கு மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். எனவே இங்கு கணினி, ஒரு ஆசிரியர், மாணவர் இன்றையக் கல்விப் பொருண்மையில் எப்படித் தேறுவர் என்ற முதல் கட்ட ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது.

இந்த ஆராய்ச்சிக்கு இணையத்தில் இருந்து தமிழ்நாடு எட்டாம் வகுப்பு ஆங்கில வழி பொது அறிவுப் பாடப்புத்தகத்தை தரமிறக்கி ஆராய்ச்சி செய்யலாம்.

இப்பாடப்புத்தகத்தில் கொடுக்கப்பட்ட கற்றலின் விளைவுகள் பட்டியலை வைத்து பாடநூலை ஆராயலாம். இப்படி நம் ஆராய்ச்சிய்ன் கூறுகளை நாம் முழுமையாகப் பார்க்கலாம்.

Essentials for Internet Classroom 83 - Sukanti Nadar இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 83 – சுகந்தி நாடார்அடுத்து ஆசிரியர்களின் செயல்திறன் எவ்வாறு இருக்க வேண்டும், இன்றைய மாணவர்களுக்கான செயல் திறனில் எப்படிப்பட்ட மாற்றத்தை நாம் எதிரர் பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட மாற்றத்தை நம் பாடத்திட்டத்தால் கொண்டு வர இயலுமா என்று பார்க்க வேண்டும் அப்போது தான் மாணவர்களில் செயல் திறன் எவ்வாறு சூழவியல், மேம்பட்ட மானிட செயல்திறன் வாழ்க்கை சார்ந்த பொருளியல் ஆகிய மூன்றுக்கும் தேவையான வகையில் எவ்வாறு இருக்க வேண்டும்.

பகுத்தாய்வு

எட்டாம் வகுப்பு பொது அறிவியியல் ஆங்கில வழிப் பாடம் ஒன்றை இங்கே நாம் ஆய்விற்கு எடுத்துக் கொள்வோம். எடுத்துக் கொள்ளப்பட்ட பாடத்தை ஒரு கணினி எவ்வாறு கையாளுகின்றது என்று பார்க்கலாம்.

பாடநூலில் குறிக்கோள்களாக ஒவ்வோரு பொருளையும் பிரித்து வகைப்படுத்துவதோ, சிறிய சோதனை செய்வதும், ஒரு அறிவியல் கருத்தின் வரைமுறைகளை வரையறை செய்வதும் , பொருட்களில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களும் உயிரியைல் தாவர இயலின் வகைகளையும் , படங்கள் வரைவதும் குறிக்கப்பட்டுள்ளது.

பாடப்புத்தகத்தின் 4வது பாடம், மின்னோட்டம்மின்சாரம் காந்தவியல் என்று இருக்கிறத. பாடத்தில் பொருண்மை சம்பந்தமாக அனைத்து விஷயங்களும் எழுத்து வடிவிலும் படங்களாலும் விளக்கப்படுகிறது, முயற்சி செய்து பார், யோசித்துப் பார், உங்களுக்குத் தெரியுமா? என்று சில பகுதிகளில் நல்ல நல்ல விஷயங்கள் கொடுக்க்கப்பட்டு இருக்கிறது. பாடத்தின் இறுதியில் கோடிட்ட இடங்களை நிரப்புவதும், பட விளக்கங்களை வரையவும், சில கேள்விகளும், அறிவியிஅல் கண்காட்சிக்கான சோதனைகள் பற்றிய விவரங்களும் கேட்டு இருக்கின்றனர்.

இந்தப் பாடத்தில் வரும் விவரங்களை கணினி மாணவன், ஆசிரியர் என்று மூவர் கொண்ட ஒரு அட்டவணையை இங்கு இடுவோம். அந்த அட்டவணையில் ஒரு கணினி, ஆசிரியர், மாணவர் ஆகியோரின் சராசரி மதிப்பெண்கள் எவ்வாறு இருக்கும் என முதலில் பார்ப்போம

வினா விடை
%
படம் வரைதல்
%
கோடிட்ட இடம் நிரப்புதல்
%
சோதனைகள் செய்தல்
%
சோதனைகளை விவரித்தல்
%
அறிவியல் கருத்தின் வரைமுறை
%
வேதியியல் இயற்பியல் மாற்றங்கள்
%
உயிரியல் வகைகள்
%
கணினி 100 100 100 90-100 100 100 100 100
ஆசிரியர் 90-100 90-100 90-100 80-100 90-100 90-100 90-100 90-100
மாணவர் 35-100 35-100 35-100 35-100 15-100 35-100 35-100 35-100

இப்பட்ட்டியலில் கணியின் மதிப்பெண்கள் சோதனைகள் செய்வதில் மட்டுமே குறைய வாய்ப்பு உள்ளது. ஆசிரியருக்கும் மாணவர்களுக்குமான தவறுகள் கணினியோடு ஒப்பிடும் போது அதிகமாகவே உள்ளது. இது மனிதர்களுக்கு இயற்கையிலேயே இருக்கும் கவனக் குறைவில் ஏற்படும் தவறுகளையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆசிரியர்கள் மாணவர்கள் என்று இரு மனிதக் குழுவிற்கும் உள்ள மதிப்பெண் வித்தியாசத்திற்கு, ஆசிரியரின் வெளி அனுபவம்., பாடப் பொருண்மையில் ஆசிரியரின் அனுபவம், பொருண்மையில் அவருக்குள்ளத் தேர்ச்சி என்பவை முக்கியக் காரணிகளாக அமைகின்றன.

அடுத்து எட்டாம் வகுப்பு கணித வகுப்புப் பாடத்தை எடுத்துக் கொள்வோம்

இப்பாட நூலின் முக்கியக் குறிக்கோள் கணிதம் வாழ்க்கைய்ப்ப்டு ஒன்றிப் போனது என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான். அதற்காக செயல்பாடு, இவற்றை முயலுக உங்களுக்குத் தெரியுமா? பல்வகை திறநெறி வினாக்கள் இணைய செயல்பாடு, குறிப்ப்பு சிந்ஹிக்க என்று பாடப் பொருண்மை பிரிக்கப்பட்டுள்ளது. இக்கணித பாடப்புத்தகத்தில் தகவல் செயலாக்கம் என்ற ஐந்தா, பாடத்தை ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்வோம்.

இப்பாடப் பொருண்மையின் அடிப்படை மாணவர்களுக்கு எண்ணுதலில் கூட்டல் கொள்கை எண்ணுதலில் பெருக்கல் கொளகை என்று தர்க்க முறை விதிகளை மாணவர்களுக்குக் கொடுக்கின்ரது. அன்றாட சூழலில் கணித்த்தை எடுத்துக் காட்டுக்க்களோடு காட்டவும் செய்கின்றது. பயிற்சியிலும் இக்கணிதத் திறமை சார்ந்த விஷயங்களைப் பர்ட்சிக்கவும் செய்கின்றது. ஆனால் இதில் தேர்ச்சி விகித்மும் , அறிவியல் பாடத்தைப் போலவே கணினி முன்னிலையில் இருக்கும்.

வினாக்கள்
%
வரைபடம் வரைதல்
%
பல்வகை திறனறுப் பயீர்சி கனக்குகள்
%
கணினி 100 100 100
ஆசிரியர் 90-100 90-100 90-100
மாணவர் 35-100 35-100 35-100

எட்டாம் வகுப்பு தமிழ் பாடநூலில் அறிவியியல் தொழில்நுட்பம் என்றபாடத்தை ஆராய்வதற்காக எடுத்துக் கொண்டுள்ளேன்.

இப்பாடப் பொருண்மை , கவிதைப் பேழை,பல்துறைக்கல்வி. விரிவானம், இலக்கணம் மதிப்பீடு என்று பிரிக்கப்பட்டு பாட விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மதிப்பீட்டுப் பகுதியில் சரியான விடை தொடரில் வைத்து எழுது,குறுவினா. சிறு வினா, நெடு வினா, சிந்தனை வினா, சுருக்கி எழுது என்ற மதிப்பீட்டுக் கேள்விகள் உள்ளன.

சிறுவினா
%
குறுவினா
%
நெடுவினா?
%
சரியான விடை
%
தொடரில் வைத்து எழுது
%
சிந்தனை வினா
%
சுருக்கி எழுது
%
கணினி 100 100 100 100 100 95-98 90-100
ஆசிரியர் 100 100 100 100 100 100 100
மாணவர் 35-90 35-90 35-90 35-100 15-100 35- 80 35- 80

தமிழ் மொழிப்பாடம் என்று வரும் போது ஆசிரியரின் மதிப்பீடுகளே முன்னணியில் உள்ளது அதன் காரணம் அவருக்கு மொழியின் இலக்கண இலக்கிய அறிவும் சொல்லாடலும் கணினியை விட அதிகம். அதே நேரத்தில் கணினியும் மாணவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டத் தகவலை அப்படியேத் திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளைகள். அதனால் அவர்களால் சிந்தித்து எழுதுவதும் சுருக்கி எழுதுவதும் திறம் பட எழுத முடிகின்றது. அது மட்டுமின்றி ஆசிரியர்கள் பாடங்களைக் கற்பிக்கின்ற காரணத்தால் அவர்களால் எல்லா தகவல்கலையும் திருப்பி சொல்ல முடிகின்றது.

எட்டாம் வகுப்பு சமூக அறிவியியல் பகுதியில் புவியியலில் வானிலை, கால நிலை என்ற அலகின் கற்றல் குறிக்கோள்களாக வானிலை, காலநிலை ஆகிய இரண்டின் முக்கியத்துவம், இவ்விரண்டு கூறுகளின் தன்மைகள் இவற்றை அளவிடக்கூடிய கருவிகள், ஒரு குறிப்பிட்ட இடத்தின் காலநிலை வானிலை இரண்டையும் அள்வவிடுதல் என்று குரிக்கப்பட்டுள்ளது. இப்பாடப் பொருண்மையின் மதிப்பிடலாக சரியான விடை கோடிட்ட இடம் பொருத்துக, சரியா தகவறா, சுருக்கமாக விடையளி காரணம் கூறு விரிவான விடையெளி என்பற பகுதிகள் உள்ளன/ அறிவியியல் பாடத்தை[ போலவே இந்த புவியில் பாடத்தின் அளவீடுகளும் இருக்கின்றன.

சரியான விடை
%
கோடிட்ட
இடம்
%
பொருத்துக சரியா தவறா
%
சுருக்கமான விடையளி
%
காரணம் கூறு
%
விரிவான விடையளீ
%
கணினி 100 100 100 90-100 100 100 100
ஆசிரியர் 90-100 90-100 90-100 80-100 90-100 90-100 90-100
மாணவர் 35-100 35-100 35-100 15-100 35-100 35-100 35-100

நாம் இதுவரைப் பார்த்த பாடப் பொருண்மைகளில், கனக்குப் பாடத்தின் விவரங்கள் தவிர மற்ற எல்லாப் பாடங்களுமே ஒரு தகவல் பரிமாற்றமாகத் தான் இருக்கின்றது. மாணவர்களின் மதிப்பீட்டுக் கொள்கையும் இவ்விவரங்களை சோதிக்கும் விதமாக மட்டுமே இருக்கின்றது. அதனாலேயே கணினி மதிப்பீடுகளில் முன்னணுஇயில் இருக்கின்றது. 

அதாவது ஒரு கொடுத்த விவரத்தை அச்சுப்பிழையில்லாமல் ஒரு கணினியால் திரும்ப எடுத்துக் கொடுக்க முடியும். கொடுக்கப்படும் எந்த ஒரு தகவலையும், எந்த ஒரு பிழையும் இல்லாமல் பல்வேறு வகைகளில் வேகமாகவும் திறன்படவும் கொடுக்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்ட சாதனமே கணினி, அதுவும் ஒரு விஷயத்தை எவ்வாறு பல்வேறு வழிகளில் பிழை இல்லாமல் கொடுக்க முடியும் என்ற தர்க்கம் இக்கணினிகளுக்கு போதிக்க்ப்பட்டுள்ளது.

ஒரு ஆசிரிரியரை எடுத்துக் கொண்டால் அவ்ருடைய அனுபவ அறிவும், ஒரு தகவலை மீண்டும் மீண்டும் பலமுறை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதாலும் அவரால் அதிக மதிப்பெண் பெற முடினின்றது அதாவது கொடுக்கப்பட்டிருக்கும் தகவல் அவர் நினைவடுக்குகளிலிருந்து அடுத்த நிலைக்கு அனிச்சை செயலாக மாறிவிடுகின்றது.

ஆனால் மாணவர்களுக்கு?

முந்தைய தொடர்களை வாசிக்க:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 78(அது என்ன  மக்களைச்சார்ந்த முதலாளித்துவம்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 79(மாணவர்களின் வல்லமை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 80(தறி கெட்டு ஓடும் ரெயில்களும் சர்வ வல்லமையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 81 – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 82 – சுகந்தி நாடார்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Latest

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய...

திரைவிமர்சனம் : விடுதலை – ம.செல்லமுத்து

படம் : விடுதலை நான் பார்த்து ரசித்த படங்களில் மிக நீண்ட வருடங்களுக்குப்...

நூல் அறிமுகம் :கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும் (பல்வங்கர் பலூ) – வே.மீனாட்சி சுந்தரம்

கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும், ஏன் ”பேட்டிங்” ”பொவ்லிங்கை”விட உயர்வாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.? ஏன்...

நூல் அறிமுகம் : குறுங்.. – கேத்தரின்

  குறுங்...... நூலின் தலைப்பே துறுதுறு வென இருக்க, ஏற்கனவே விழியன் அவர்களின் "பென்சில்களின்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய முற்பட  காலமில்லை!   உருமாற்றப்பட்ட  சந்திப்புகளைக்கடந்தபடி  ஓடுகிறது நிகழ்காலம்!    அறிய முற்பட்டு பிரிவுக்கான பிடிபடாத காரணங்கள்  பலவாயின!  தொடர்கதைகளில் இணைகின்றன வேறு வேறு சிறுகதைகளும் கவிதைகளும்!  ......   

திரைவிமர்சனம் : விடுதலை – ம.செல்லமுத்து

படம் : விடுதலை நான் பார்த்து ரசித்த படங்களில் மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கண்களில் கண்ணீரை வர வைத்த கதையின் அமைப்பு நம்மையும் தூண்டுகிறது சில விடுதலை ஈடுபாடுகளில் அர்ப்பணித்துக் கொள்ள...

நூல் அறிமுகம் :கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும் (பல்வங்கர் பலூ) – வே.மீனாட்சி சுந்தரம்

கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும், ஏன் ”பேட்டிங்” ”பொவ்லிங்கை”விட உயர்வாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.? ஏன் பொவ்லிங் சூப்பர் ஸ்டார் பல்வங்கர் பலூவின்( 1876- 1955) திறமை மதிக்கப்படவில்லை? பதிவாகவில்லை?. ஏன் பலூவின் இடதுகை சுழற்சி முறை பந்தால் ரன்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here