இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 85 – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 85 – சுகந்தி நாடார்



கணினியும் மாணவனும்


நம்மைப் பற்றிய விவரங்கள் மட்டுமின்றி எதிர் காலத்தில் நம் தேசத்துக் குடிமகனும் தொழில்நுட்பத்தில் முன்னேறியவராக இருக்க வேண்டும் என்பதற்காக நம் தாய் மொழியில், நம் தனிப்பட்ட வியாபாரங்களுக்கான தொழில்நுட்பம் என்று நமக்கு வேண்டுமென்றால் நாம் கணினையை மாணவர்களாக யோசித்துத் தானே ஆக வேண்டும்?

நாம் கணினியை ஒரு மாணவராக யோசிக்கின்றோமோ இல்லையோ பல நாடுகள் அப்படி யோசிக்க ஆரம்பித்து விட்டன. ஆங்கில  மொழியிலும் சீன மொழியிலும்  செயற்கை அறிவு உச்சத்தில் இருப்பது  நாம் அனைவரும் அறிந்ததே. இன்றைஉ தரவு உலகத்தில் முன்ணனியில் இருக்க வேண்டுமானால் உலகின் அனைத்து மொழிகளிலும் கண்டிப்பாக செயற்கை அறிவுத் திறன்   கணினிக்குக் கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று உலக நிறுவனங்கள் நினைக்கின்றன.  உலக நாடுகளும் அதை வரவேற்கின்றன.

ஏப்ரல் மாதம் வந்த முக்கியமான ஒரு செய்தி லேசர் சக்தியால் ஆன ஒரு ஆயுதத்தை இஸ்ரேல் நாடு காணொலி வழியாக உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்க டாலர் 4க்கும் குறைவானசெலவில் இதை உருவாக்கியுள்ளது இதன் மூலம் தரை கடல் வானம் என்று அனைத்து விதமான எல்லைகளைப் பாதுகாக்க இயலும் என்ரு இஸ்ரேல் அரசு கூறிகிறது. அறிவியல் புனைவு கதைகளில் நாம் சிறுவராக படித்து ஆச்சிரிஅப்பட்ட ஆயுதங்கள் இன்று நிஜத்தில் இருக்கின்றது. அந்த அளவிற்கு வேகமாகக் தொழில்நுட்பம் மாறி வருகிறது. உலகையே மாற்றக் கூடிய வளர்ச்சியாக இது இருக்கின்றது. தொழில்நுட்பங்கள் ஒவ்வோரு தனிதேசத்திற்கும் ஏற்ப தனியாக உற்பத்தி செய்வதும், அவ்வாறு உற்பத்தி செய்வது விலை குறைவாக இருப்பதும், கணினித் தொழில்நுட்பத்தால் நம் புவியைக் காப்பாற்ற முடியும் என்ற காரணிக்கும் ஒரு எடுத்துக் காட்டாக இந்த செய்தியால் தெரிகிறது.

சரி பாடங்களின் சாராம்சத்திற்கு வருவோம்

எட்டாம் வகுப்பு சமூகவியல் பாடத்தில் முதலில் போலவே , பாடத்தின் சாராம்சத்தைப் பார்ப்போம். இப்பாடநூலின் பாடங்கள், அறிமுகம், தொகுப்புரை இவற்றிற்கு இடையில் இணையச்சுட்டிகளாகவுன் சுட்டிகளாகவும், பாடத்தைப் படிக்க மாணவர்களின் கவனத்தைக் கவரும் வகையில் உங்களுக்குத் தெரியுமா பகுதிகளையும், பாடத்தில் சொல்லப்படும் கருத்தை, மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் துல்லியமாகவும் வண்ணமயமாகவும் வரையப்பட்டப் படங்களும் குழு செயல் பாடுகளும் அணிவகுத்து நிற்கின்றன. ஒவ்வோரு [அகுதியிலும் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களும் பல ஆராய்ச்சிகளுக்குப் பின் கொடுக்கப்பட்டுள்ளது.

இனி சாரம்சத்தின் ஆராய்ச்சிக்கு வருவோம்

புவியியல் பாடத்தில் சாராம்சத்தை இங்கே பாடநூலில் உள்ள பகுதிகளை, கணினி என்னும் மாணவனுக்கு ஏற்ற வகையில் எவ்வாறு உள்ளது? ஒரு மாணவன் கணிய்யை ஆளும் திறன் எவ்வாறு உள்ளது என்ற இரு கேள்விகளின் அடிப்படையில் ஆராயலாம்.

கணினி என்னும் மாணவன்

கணினிக்கு நாம் கொடுக்க்கும் விவரங்கள்,பலவகைத் தரவுகளாக கணினி எடுத்துக் கொண்டு, அந்தத் தரவுகளை வைத்து ஒரு குறிப்பிட்ட செயலை செய்ய உதவுகின்றது. கணினி செய்யும் செயல் ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணுவதாக இருக்க வேண்டும். பூளோகப் பாடத்தில் வானிலைபற்றிய தரவுகளௌக் கொண்டு ஒரு எதிர்காலக் கணினியால் என்ன செய்ய இயலும்? 

இன்றையக் கணினிகள் வானிலையையும் காலநிலையையும்,, தங்களுக்குக் கொடுக்கப்படும் தரவுகளைக் கணக்கிட்டு காலநிலையை துல்லியமாக கணிக்க வானிலை ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகின்றது. தரவுகளின் தரத்தைக் கொண்டு சூழவியியல் பாதிப்புக்களையும் கணக்கிட்டு நமக்கு எச்சரிக்கை செய்கின்றது. 

நாளைய கணினியின் வேலை. கொடுக்கபட்டுள்ள தரவுகளால், வரப் போகும் ஆபத்துக்களை ஆராய்ந்து, ஆபத்திலிருந்து காப்பாற்ற மட்டுமல்லாமல், ஆபத்தைக் களை களைந்து சாதகமான ஒரு சூழ்நிலையை உருவாக்கும் வகையில் தரவுகளை மாற்றி அமைக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும். சாதகமான சூழ்நிலைக்கான தரவுகளை மேம்படுத்தி சாதகமான விளைவுகளை வளர்ச்சிப் பாதையில் அதிகப் படுத்த வேண்டும். இந்தப் பணியை கணினி சிறப்பாகச் செய்ய

சமூகவியல் பாடத்தின் விவரங்கள் தரவுகளாக மாறினால் உதவி செய்யுமா?

 

கற்றலின் நோக்கங்கள்அறிமுகமும் தொகுப்புரையும்செயல்பாடுகள்கருதுகோள்உங்களுக்குத் தெரியுமா?
சிறப்புபுரிதலுக்கான வகைப்படுத்துதல், வகைப்படுத்தியவற்றை ஆக்கப்பூர்வமாக பயன் படுத்துதல்உலகமயமாதல் பற்றிய சிந்தனைமாணவர்கள் கல்ந்துரையாடலில் ஈடுபடுதல், கற்றலில் தங்கள் பங்கை முழுமையாகச்வானிலை காலநிலைஆகியவற்ற்றின் அடிப்படை அறிவைப்புகுத்தலும்,அதன் வழி பொதுஅறிவையும் இணையப் பயன்பாட்டை வளர்த்தல்பொது அறிவை வளர்க்கும் விஷயங்கள்
செலுத்துதல்
தேவையான மேம்பாடுபொதுவான விளக்கத்தைத் தாண்டி, கால லை, வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் புள்ளிவிவரங்களை சேகரிக்கும் வழி காட்ட வேண்டும்வெப்பச் சலனத்தால், அறிமுகப் பகுதியில் ஏற்பட்ட மாற்றங்கள், பாதிப்புக்கள் பற்றிய தரவுகள் தரவுகளை சேகரிக்கும் வகைகள்______________காலநிலை வானிலை பற்றிய நுண்தகவல்கள், இயற்கையை பாதுகாப்பிற்கான தகவல் தேடல்கொடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களை வைத்து ஆபத்துக்களை கணிக்கவும், ஆபத்துக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழி முறைகளும்
இயற்கை சக்திகளை துல்லியமாக அளவெடுக்கும் முறை
பின்னூட்டம்செயல்பாடுகள் மாணவர்களின் கற்றல் ஈடுபாடுகளை வளர்த்தாலும் கணினியோடு இணைந்து செய்யும்பாடத்தின் கருதுகோள் அடிப்படையை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
நாளையக் கணினி இதைவிட இன்னும் அதிமானத் தகவல்களை
இன்றைய கணினிகள் பெரும்பாலும் மேல் கொடுத்துள்ள பணிகளை செவ்வனே செய்கின்றது. அதனால் பின் விளைவுகள்
செயல்பாடுகளை உருவாக்கலாம்
இது மாணவருக்கும், கணினியின் செயற்கை அறிவுத் திறன் வளர்ச்சிக்கும் மிகவும் அவசியம்
நமக்குத் தரலாம்இன்றைய கணினிகள் பெரும்பாலும் மேல் கொடுத்துள்ள பணிகளை செவ்வனே செய்கின்றது. அதனால் பின் விளைவுகளை கணக்கிடும் புள்ளி விவரம் நமக்குக் கிடைக்கு

நம்முடைய திறன்பேசிகளைப் பயன்படுத்தி, நாம் நமது வானிலை அறிக்கைகளை இப்போது பெற்றுக் கொண்டு இருகின்றோம் தான்? ஒரு வெப்பமானி செய்த வேலையை நம் கைபேசி செய்கிறது.

IBM நிறுவனம் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்டுள்ளத் தகவலில் கோரானா காலத்தில் வானிலையை அரிவிக்க வேண்டிய அறிவிப்பாளர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டியிருந்ததால், பல விதமானத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வந்ததாகவும் அதிலும் முக்கியமாக மெய்நீட்சி மெய்ம்மை(augmented reality) தொழில்நுட்பம் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டு உள்ளனர்.OTT (Over-The-Top) technology என்ற முழுக்க முழுக்க இணைய வழி சார்ந்த தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கின்றது. சமூக வலைதளங்கள், குறுஞ்செயலிகள் ஆகியவை மூலம் உடனடியாக வானிலை செய்திகள் தனி மனிதனை அடையும் வண்ணம் வேலை செய்கின்றன என்ற விவரத்தையும் கூறுகின்றது. 

செயற்கை அறிவுத் திறனை பயன்படுத்தும் விதமாக ஒவ்வோரு வினாடியும் வானிலை விவரங்கள் துல்லியமாக, சேகரிக்கப்படுவது மட்டுமல்லாமல் , வானிலை அறிவிப்பாளரின் குரலில் உருவாக்கப்பட்டு காணோலிகளாகவும் வெளியிடப்படுகின்றன என்று விளக்கியுள்ளது. இது மட்டுமல்ல 

Weather InSight என்ற செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பத்தை வியாபாரநிறுவனங்களுக்காக இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. இத் தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு வியாபாரநிறுவனம், தங்களுடைய வாடிக்கையாளர்களுக்குத் தேவையான காலநிலை வானிநிலை அறிக்கைகளைத் தாங்களே தனிப்பட்ட முறையில் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்க முடியும். தொலைக்காட்சி நிலையங்கள் தங்கள் பார்வையாளர்களிடமிருந்து வானிலை சம்ம்பந்தமான புகைப்படங்கள் காணொலிகள் விவரத்தை வாங்கி ஒரு ஊடாடும் அனுபவமாக வானிலை அறிக்கைகளை உருவாக்குகின்றது.

2020 களில் இப்படிப்பட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அன்றாட வாழ்க்கையில் வந்து விட்டது என்றால்? இன்னும் இருபது ஆண்டுகளில் தொழில் நுட்பம் எப்படி இருக்கும்? 

world meteorological organization( உலக வளிமண்டலவியல் நிறுவனம்) எதிர்கால வானிலை தொழில்நுட்பம் பற்றி அதனுடையத் தொழில்நுட்பத்தில் குறிப்பிடும் போது, தேசிய சர்வதேச அளவில் வானிலைத் தொழில்நுட்பம் சார்ந்த தரவுகளுக்கானத் தொழில்நுட்பமும், கொளவு தொழில்நுட்பம் மூலம் தரவு பகிர்தலும், செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் தயாரிக்கப்படும் அறிக்கைகளும் மிக முக்கியமான பங்கை அடுத்துவரும் ஆண்டுகளில் எதிர்பார்க்கலாம் என்றும் அதற்குத் தேவையான திறன்மிக்க வானிலை ஆராய்ச்சியாளர்களை உருவாக்குவது தலையாயப் பொறுப்பு என்றும் கூறுகின்றது.

கணினியை ஆளும் மாணவன்

கற்றலின் நோக்கங்கள்அறிமுகமும் தொகுப்புரையும்செயல்பாடுகள்கருதுகோள்உளுங்களுக்குத் தெரியுமா?
சிறப்பு
மேம்படுத்துதல்
பின்னூட்டம்

மேலே சொன்ன தகவல்கள் போன்ற செய்திகள் சமூகவியல் பாடத்தில் இல்லை என்பது தவிர, அப்படிப்பட்ட தகவல்களை எப்படிப் பெறுவது? அப்படிபெறப்படும் தகவல்களில் சரியானத் தகவல், தகவலின் உண்மைத் தன்மை பற்றி ஆராய்வது என்ற விவரங்களும் இல்லை. இது பாடத்தயாரிப்பாளர்களைக் குறை கூறுவதற்காக எடுத்துச் சொல்லப்படவில்லை. இன்றைய ஆசிரியர்களின் வேலை எவ்வளவு ஆழமானதாக இருக்க வேண்டும் என்பதையும் ஒவ்வோரு பாடத்திலும் கணினித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் விதமும், துறை சார்ந்த கணினி த் தொழில் நுட்பம் பற்றிய விழிப்புணர்வும் இருக்க வேண்டும் என்பதே!

என் தாயார் அண்மையில் கூறினார், இரண்டாம் படிக்கும் மாணவர் ஒருவர் எந்நேரமும் திறன்பேசியில் விளையாடுவதில் நாட்டம் கொண்டவர். ஆனால்கடந்த இரு ஆன்டுகளாக இணைய வழி பாடங்கள் நடத்தப்பட்டக் காரணத்தால் இப்போது திறன்பேசி என்றாலே அலறி அடித்து ஓடுவதாக! இதைக் கேட்கும் போதும் எழுதும் போதும் புன்னகைக்கிறேன் தான். ஆனால், கணினி வழி, திறன்பேசி வழி பாடம் நடத்துவதால் மட்டும், அந்தப் பாடம் கல்வி 4.0வின் பகுதியாக மாறிவிடுமா?

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *