Subscribe

Thamizhbooks ad

தனித்து ஒரேயொரு நிருபராக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அனுபவம் : ஏ.எம்.ஜிகீஸ் – தமிழில்: தா.சந்திரகுரு




சமீபத்தில் எனக்கு மத்திய தொழிற்சங்க அமைப்பு ஒன்றின் தேசியத் தலைமையுடனான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதற்கு எதிரான போராட்டம் ஒன்றை அந்தத் தொழிற்சங்கம் தொடங்கியிருந்தது. ஒருசில விஷயங்களில் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அது எடுத்திருந்த காரணத்தால் அரசியல் ரீதியாக முக்கியமான சில செய்திகளைப் பெறுவதற்கு அந்த பத்திரிகையாளர் சந்திப்பு எனக்கு உதவக்கூடும் என்று கருதினேன். அந்தத் தொழிற்சங்கத்தின் தேசியச் செயலாளர்களில் ஒருவர் அந்தக் கூட்டத்தில் உரையாற்றவிருந்தார்.

வளர்ந்து வரும் துறைகளில் தொழிற்சங்கங்களின் பங்கு

ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே நான் அந்த இடத்தை அடைந்து விட்டேன். நான் சென்ற சிறிது நேரத்திற்கு அங்கே எதுவுமே நடக்கவில்லை. தாமதத்திற்கு மன்னிப்பு கேட்பதற்காக அந்தத் தொழிற்சங்கத்தின் ஊழியர்கள் மாறி மாறி என்னிடம் வந்து கொண்டே இருந்தனர். அரைமணி நேரம் கழிந்த பிறகும் நான் மட்டுமே அங்கிருந்த ஒரே நிருபராக இருந்தேன். தொடர்ந்து பரபரப்பாக அழைப்புகளை மேற்கொண்டவாறு இருந்த கூட்டத்தின் அமைப்பாளர்கள் இறுதியில் யூடியூபர் ஒருவரை அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் செய்தனர். சங்கத்தின் தேசியச் செயலாளர் பாராளுமன்றத்தை நோக்கி பேரணி, அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் தர்ணா நடத்துவது என்று போராட்டத்திற்கான நிகழ்ச்சிகளை அறிவித்தார். அவரிடம் போராட்டம் பற்றி சில கேள்விகளை எழுப்பிய நான் அங்கே நிருபர்கள், புகைப்படக்காரர்களுக்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த பெங்காலி ஸ்வீட்ஸ் கடையின் ஐம்பது சிற்றுண்டி பாக்கெட்டுகள், இரண்டு பெரிய பிளாஸ்க்குகளிலிருந்த தேநீர், காபியை தொழிற்சங்கம் என்ன செய்யப் போகிறது என்பதை மட்டும் கேட்கவில்லை. அந்தக் கூட்டத்திற்குப் பிறகு பாராளுமன்றம் நோக்கி நடைபெற்ற
இருபத்தைந்தாயிரம் தொழிலாளர்கள் கலந்து கொண்ட பேரணியைச் செய்தியாக்கித் தந்தேன். அந்தப் பேரணியில் பாதுகாப்பு நிறுவனங்கள் உட்பட பொதுத்துறை நிறுவனங்களைச் சார்ந்த தொழிலாளர்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் கலந்து கொண்டிருந்தனர்.

இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது ஒன்றும் புதிதல்ல. நான் தொழிற்சங்கங்கள் குறித்த செய்திகளை நீண்ட காலமாகச் சேகரித்து வழங்கி வருகிறேன் என்ற போதிலும், பத்திரிகையாளர்கள் தொழிற்சங்கங்களின் அரசியல் சார்புகளைப் பற்றி கருத்தில் கொள்ளாமல் இதுபோன்ற தொழிற்சங்க நிகழ்வுகளில் கலந்து கொள்வது என்பது மிகமிகக் குறைவாகவே இருக்கிறது. இந்தியாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொள்கைகளுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்துகின்ற வேலைநிறுத்தத்தில் எத்தனை தொழிலாளர்கள் கலந்து கொண்டனர் என்பதை அறிந்து கொள்வதற்கு பிபிசி, தி கார்டியன் போன்ற மேற்கத்திய ஊடகங்களின் செய்திகளையே தான் சார்ந்திருக்க வேண்டியிருப்பதாக மூத்த தொழிற்சங்கத் தலைவர் எம்.கே.பாந்தே ஒரு முறை செய்தியாளர்களிடம் அதிகாரப்பூர்வமற்ற வகையில் பேசிக் கொண்டிருந்த போது கூறினார்.

தொழிற்சங்கங்களுக்கிடையில் ஒற்றுமை இல்லாமல் இருப்பதே தொழிலாளர்களின் நலனுக்கான
அச்சுறுத்தலாக உள்ளது

நாட்டிலுள்ள பன்னிரண்டு மத்திய தொழிற்சங்க அமைப்புகளில் ஆறு கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இந்த தொழிற்சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகளில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைய மாநில அரசுகள் அவ்வப்போது சரிபார்த்து வருகின்றன. மத்திய அரசின் சார்பில் இந்த சரிபார்ப்பு செயல்முறை சில காலமாக நடைபெறவே இல்லை. மிஸ்டு கால்கள் மூலமாக கட்சியில் உறுப்பினர்களை அனுமதிக்கின்ற அரசியல் கட்சிகள் போலல்லாமல், இந்த சங்கங்கள் ஒவ்வொன்றிலும் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை முறையாக தணிக்கை செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் தொழிற்சங்கங்கள் தங்கள் அறிக்கையை தொழிற்சங்கப் பதிவாளரிடம் தாக்கல் செய்து வருகின்றன. வரவு-செலவு கணக்குடன் உறுப்பினர் ரசீது தாக்கலும் கட்டாயம் என்பதாக இருக்கிறது. கோடிக்கணக்கான தொழிலாளர்கள் இந்த தொழிற்சங்கங்களுடன் தொடர்பு கொண்டிருக்கின்ற போதிலும், தொழிலாளர்களுக்கும் அவர்களுடைய பிரச்சனைகளுக்கும் கிடைக்கின்ற பாதுகாப்பானது மிகக் குறைந்த அளவிலேயே இருந்து வருகிறது. அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தொழிலாளர்கள், விவசாயிகள், வேலையற்ற இளைஞர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை எழுப்பி வருகின்ற. தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் பாராளுமன்றத்தில் எதிரொலிக்கின்றன. தொழிற்சங்கங்களின் நிலைப்பாடு சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சார்பில் நடத்தப்படுகின்ற கூட்டங்களில் மதிப்பீடு செய்யப்பட்டு பாராட்டப்படுகிறது. சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கூட்டத்தில் இந்தியத் தொழிலாளர்களின் பிரதிநிதிகளின் பேச்சை உலக அரசாங்கங்கள், முதலாளிகள், தொழிற்சங்கங்கள் கவனித்துக் கேட்டறிந்து கொள்வதை நான் கண்டேன். ஆனால் இந்திய தொழிற்சங்கங்களின்
செயல்பாடுகள், கோரிக்கைகள் போன்றவற்றை இந்திய ஊடகங்களோ பெரும்பாலும் கவனிப்பதே இல்லை.

தொழிற்சங்கங்களின் முன் உள்ள சவால்கள் தொழிற்சங்க இயக்கத்தில் சுமார் ஐம்பது ஆண்டுகளாகப் பணியாற்றிய மூத்த தொழிற்சங்கத் தலைவர் அமர்ஜித் கவுர் ‘தொழிலாளர்களின் பிரச்சனைகள் குறித்து தங்களிடமிருக்க வேண்டிய சார்பு எதுவுமற்ற அடிப்படைக் கொள்கையை பல ஊடக நிறுவனங்களும் மறந்து போய் விட்டன’

என்கிறார். அவர் மேலும் ‘தொழிற்சங்கங்களை, தொழிலாளர்களைப் புறக்கணிக்கின்ற இத்தகைய போக்கு புதிய தாராளவாதம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு உத்வேகம் பெற்றுள்ளது. தொழிற்சங்கங்கள் வளர்ச்சிக்கு எதிராக இருப்பதாக ஊடகங்கள் தொடர்ந்து சித்தரித்து வருகின்றன. முதலாளிகள் மற்றும் அரசு சார்புடையவையாகவே பெரும்பாலான ஊடக நிறுவனங்கள் இருக்கின்றன. அத்தகைய ஊடகங்களால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை எளிதாகப் புறக்கணித்து விட முடிகிறது’ என்றும் கூறுகிறார். ‘நாம் பிபிசி, ஏஎஃப்பி மற்றும் பிற ஊடகங்கள்
தருகின்ற செய்திகளுக்கே நன்றி சொல்ல வேண்டியுள்ளது. பிரிட்டனில் செவிலியர்கள், பிரான்சில் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தங்களைப் பற்றி நமக்கு அந்த நிறுவனங்கள் தருகின்ற செய்திகளின் மூலமாகவே தெரிய வந்துள்ளது. ஆனால் ஜார்க்கண்டில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கிறது?’ என்ற கேள்வியை அவர் எழுப்புகிறார். பொதுவாக விவசாய சங்கங்களிடமும் ஊடகங்கள் இதுபோன்ற நிலையையே கடைப்பிடிக்கின்றன. ஆனாலும் ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக இடைவிடாமல், அனைவரும் கவனிக்குமாறு விவசாயிகள் உத்வேகத்துடன் நடத்திய
போராட்டங்களால் ஊடகங்களில் மிகப் பரவலாக இடத்தைப் பிடித்துக் கொள்ள முடிந்தது. ஒருவேளை விவசாயிகள் சங்கங்களைப் போல தொழிற்சங்கங்களும் பரவலான எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்று ஊடகங்கள் காத்திருக்கின்றனவோ என்னவோ!

https://www.thehindu.com/opinion/op-ed/the-experience-of-being-the-only-reporter-at-a-press-conference/article66516214.ece

நன்றி: தி ஹிந்து
தமிழில்: தா.சந்திரகுரு

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Latest

நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்

"டா வின்சி கோட் " ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து) வெளியீடு :சான்போர்ட் ஜெ...

நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்

தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான்...

நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்

இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு...

நூல் அறிமுகம்: கொடிவழி – இரா.செந்தில் குமார்

சமீபத்தில் வெளியான காமுத்துரை தோழரின் புதிய நாவலான கொடிவழி நாவல் வாசித்தேன்....

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்

"டா வின்சி கோட் " ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து) வெளியீடு :சான்போர்ட் ஜெ கிரீன் பர்கர் அசோசியேட்ஸ் ஐஎன்சி ,யுஎஸ்ஏ  தமிழில் :எதிர் வெளியீடு முதல் பதிப்பு 2016 -நான்காம் பதிப்பு 2021 600 பக்கங்கள்- ரூபாய் 699 தமிழாக்கம்...

நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்

தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான் கதையில் வரும் குருவம்மா என்கிற எருமை தான் கதாநாயகி என்றாலும் அதில் மிக முக்கியமான செய்தியான கவனக்குறைவு பற்றி சூசகமாக...

நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்

இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு . சற்று பொறுமையாய் நேரம் மெனக்கெட்டு வாசிக்க ; இதயம் உள்ள ஒவ்வொருவரையும் வேண்டுகிறேன். தூங்கவிடாமல் துரத்தும் குழந்தைகளின் மரண ஓலம்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here