1. பிரான்சிஸ் யிசிட்ரோ எட்ஜ்வொர்த் (Francis Ysidro Edgeworth) பிப்ரவரி 8, 1845இல் பிறந்து பிப்ரவரி 13, 1926இல் மறைந்த ஐரிஷ் பொருளாதார – புள்ளியியல் அறிஞர் ஆவார். அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் பொருளாதாரத்தின் பேராசிரியராக பணியாற்றினார், பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவரத் துறைகளில் கணிதத்தைப் புதுமையாகப் பயன்படுத்தினார். அவரது முதல் படைப்பு New and Old Methods of Ethic 1877ஆம் ஆண்டு வெளியிட்டார், அவரின் மிகவும் புகழ்பெற்ற படைப்பான Mathematical Psychics 1881இல் வெளியிட்டார். பொதுப் பயன்பாட்டுச் சார்பு, சமநோக்கு வளைகோடு மற்றும் ஒப்பந்த வளைகோடு பற்றிய தனது புதிய கருத்துக்களை முன்வைத்தார். எட்ஜ்வொர்த் பன்னாட்டு வர்த்தகத்தின் தூய கோட்பாட்டு, வரிவிதிப்பு மற்றும் முற்றுரிமைக் கோட்பாடு போன்றவற்றை அறிமுகப்படுத்தினார். எட்ஜ்வொர்தின் புகழ்மிக்க “எட்ஜ்வொர்த் பெட்டி”, பயன்பாட்டுக் கோட்பாடு, சமநோக்கு வளைகோடு போன்ற கருத்துக்களை உருவாக்கினார். பொருளாதாரத்தில் முகவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது ஒரு பொருளாதாரத்தின் மையமானது போட்டி சமநிலைகளின் தொகுப்பாகச் சுருங்குகிறது என்று கூறும் “எட்ஜ்வொர்த் அனுமானத்திற்கும்” அவர் புகழ் பெற்றவராவார்.

எட்ஜ்வொர்த் பெட்டி என்பது இரண்டு பொருட்கள் மற்றும் இரண்டு தனிநபர்களை உள்ளடக்கிய ஒரு பரிமாற்றப் பொருளாதாரத்தை மாதிரியாகக் காட்டப் பயன்படும் ஒரு கருத்தியல் கருவியாகும். அடிப்படையில், இது இரண்டு தனிநபர்களுக்கு இடையே இரண்டு பொருட்களின் அனைத்து சாத்தியமான பகிர்வினைப் பற்றிக் குறிக்கும் ஒரு வரைபடமாகும். வளங்களை ஒதுக்குதல், அதன் மூலம் எவ்வாறு நன்மை அடைய முடியும் என்பதைப் புரிந்துகொள்வதற்கு எட்ஜ்வொர்த் பெட்டி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எட்ஜ்வொர்த் அனுமானம் ஒரு “பெரிய” பொருளாதாரத்தில், கோட்பாட்டளவில் விலைகளை நிர்ணயிக்கவும் தங்கள் வர்த்தகங்களை மறுபரிசீலனை செய்யவும் அவர்களுக்கு அதிகாரம் இருந்தாலும், மக்கள் விலை ஏற்பவர்கள் போல் செயல்படுகிறார்கள் என்று கூறுகிறது. எட்ஜ்வொர்த் ஒட்டுறவுக் கெழு (Correlation eoefficents) மதிப்பிடும் முறைகளை ஆய்வு செய்தார். அவரது பல முடிவுகளில் “எட்ஜ்வொர்த்தின் தேற்றம்” பல பரிமாண இயல்பான பகிர்வுத் தொடர்பு பற்றித் தெரிந்துகொள்ள வழிவகை செய்கிறது.
ஆதாரம்: www.britannica.com; www.handwiki.org/wiki/Edgeworth_conjecture ; www.hetwebsite.net; www.policonomics.com
********************************************************************************
2. ஜோசப் சும்பீட்டர் (Joseph Schumpeter) பிப்ரவரி 8, 1883இல் பிறந்து ஜனவரி 8, 1950இல் மறைந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் மற்றும் சமூகவியலாளர் ஆவார், அவர் முதலாளித்துவ வளர்ச்சி மற்றும் வணிக சுழற்சிகள் பற்றிய கோட்பாடுகளுக்குப் பெயர் பெற்றவராவார். முதலாளித்துவம் அதன் வெற்றிகளால் அழிக்கப்படும் என்றும், முதலாளித்துவத்தினால் உருவாகும் தனியார் சொத்து, சுதந்திரம், போன்றவற்றை தாக்குவதற்கான அறிவுசார் சமூகத்தை இது உருவாக்கும் என்று நம்பினார்.
தொழில்முனைவு பற்றிய தெளிவான கருத்தை முதலில் வகுத்தவர்களில் சும்பீட்டரும் ஒருவர். தொழில்முனைவோரின் கண்டுபிடிப்புகளிலிருந்து (புத்தாக்கம்) கண்டுபிடிப்புகளை அவர் வேறுபடுத்திக் காட்டினார். புத்தாக்கங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை மட்டுமல்லாமல், புதிய உற்பத்தி வழிமுறைகள், புதிய தயாரிப்புகள் மற்றும் புதிய அமைப்பு வடிவங்களை அறிமுகப்படுத்துவதன் மூலமும் தொழில்முனைவோர் புதுமை செய்கிறார்கள் என்று சும்பீட்டர் சுட்டிக்காட்டினார். இந்த அடிப்படையில், ஓரளவு முற்றுரிமையானது நிறைவுப் போட்டியை விட விரும்பத்தக்கது என்று சும்பீட்டர் வாதிட்டார். புத்தாக்கத்திலிருந்து வரும் போட்டியானது “அச்சுறுத்தலுக்கு முன்பு ஒழுங்குபடுத்தும்” “எப்போதும் இருக்கும் அச்சுறுத்தல்” என்று அவர் வாதிட்டார். நிறைவுப் போட்டிதான் பொருளாதார நலனை அதிகரிப்பதற்கான வழி என்று சும்பீட்டர் வாதிட்டார். நிறைவுப் போட்டியின் கீழ், ஒரு துறையில் உள்ள அனைத்து நிறுவனங்களும் ஒரே மாதிரியான பொருட்களை உற்பத்தி செய்கின்றன, அதை ஒரே விலைக்கு விற்கின்றன, அதே தொழில்நுட்பத்தை அணுகுகின்றன என்றார்.
ஜோசப் சும்பீட்டர் “படைப்பு அழிவு” (Creative Destruction) என்ற கருத்தை அறிமுகப்படுத்தினார். இந்த பொருளாதாரக் கருத்து சும்பீட்டரின் புயல் என்றும் அழைக்கப்படுகிறது. இது “பொருளாதார கட்டமைப்பை உள்ளிருந்து தொடர்ந்து புரட்சிகரமாக்கும், பழையதை இடைவிடாமல் அழித்து, புதியதை உருவாக்கும் தொழில்துறை மாற்றம் செயல்முறையை” விவரிக்கிறது. வணிகச் சுழற்சிகள் மற்றும் மேம்பாட்டுக் கோட்பாடுகளை மையமாகக் கொண்ட தனது ஆய்வுகள் தொழில்முனைவோர் சமநிலையைப் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய இயக்கி என்றும் சும்பீட்டர் வாதிட்டார்.
ஆதாரம்: www.britannica.com; www.econlib.org; www.corporatefinanceinstitute.com
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

