ஜூலியன் லிங்கன் சைமன் (Julian Lincoln Simon) பிப்ரவரி 12, 1932இல் பிறந்து பிப்ரவரி 8, 1998இல் மறைந்த அமெரிக்க பொருளாதார அறிஞர் ஆவார். வணிக உலகில் அவருக்கு இருந்த அனுபவம், பொருளாதாரம் குறித்த அவரது யதார்த்தமான பார்வைக்கு பங்களிப்புச் செய்தது. சைமன் மக்கள்தொகை பிரச்சினைகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார், தன்னை ஒரு மக்கள்தொகை ஆய்வாளராக உருவாக்கிக்கொண்டார்.
அதிக மக்கள்தொகை வளர்ச்சி பற்றிய கவலைகளால் அவரது கவனம் இந்தத் துறைக்கு ஈர்க்கப்பட்டது. சைமனின் The Ultimate Resource (1981) என்ற புத்தகம் பெரும்பாலான பொருளாதார வல்லுநர்களால் வரவேற்கப்பட்டது, ஆனால் மக்கள்தொகை கட்டுப்பாட்டை ஆதரிப்பவர்களால் அவமதிக்கப்பட்டது. புத்தகத்தில், சைமன் இயற்கை வள பிரச்சனை மற்றும் மக்கள்தொகை பிரச்சனை ஆகியவற்றை பொருளாதார கோட்பாடுகளைப் பயன்படுத்தி மறுவடிவமைத்தார்.
சைமன் ஒரு தடையற்ற சந்தை பொருளாதார நிபுணர் மற்றும் வணிகப் பேராசிரியர் ஆவார், மனிதகுலத்தின் எதிர்காலம் குறித்த நம்பிக்கைக்கு பெயர் பெற்றவராக திகழ்ந்தார். மனிதனின் புத்திசாலித்தனம் சுற்றுச்சூழலை நீண்ட காலத்திற்கு உலகின் அதிகரித்து வரும் மக்கள்தொகையை எவ்வாறு ஆதரிக்க உதவும் என்பதை அவரது புரட்சிகரமான ஆராய்ச்சி நிறுவியது. மனிதர்கள் கிரகத்திற்கு ஒரு சொத்து என்று குறிப்பிட்டார்.
மனிதர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள், மக்கள் சிறந்த உணவு மற்றும் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள், வளங்கள் எப்போதும் அதிகமாகி வருகின்றன, சுற்றுச்சூழல் தரம் மேம்பட்டு வருகிறது என்று அவர் வாதிட்டார். மக்கள்தொகை பிரச்சினை “அதிகமான மக்கள்” அல்ல. சைமன், குழந்தைகள் பெற்றோருக்கு மிகவும் விலை உயர்ந்தவர்கள் என்பதே எப்போதும் பிரச்சனை, அதேசமயம் அவர்களிடமிருந்து வரும் பெரும்பாலான பொருள், நன்மைகள் அவர்கள் பெரியவர்களாக இருக்கும்போது வருகின்றன என்றார்.
இந்த நன்மைகளில் பல அவர்களின் பெற்றோரைத் தவிர மற்ற நபர்களுக்கு நீட்டிக்கப்படுகின்றன. The Ultimate Resourceஇல் வரும் இறுதி வாக்கியம், “இறுதி வளம் மக்கள் – திறமையான, உற்சாகமான மற்றும் நம்பிக்கையுள்ள மக்கள், அவர்கள் தங்கள் விருப்பத்தையும் கற்பனைகளையும் தங்கள் நலனுக்காகவும், தவிர்க்க முடியாமல், நம் அனைவரின் நலனுக்காகவும் செலுத்துவார்கள்” எனறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதாரம்: www.cei.org; www.independent.org
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
