ச.பாரதி பிரகாஷ் கவிதைகள்
*********************************************************
1.
தலை துண்டாகி
கீழே விழுந்து கிடக்கும்
புத்தரின் தலை
தன் மீது
படுத்து இருக்கும்
புலி
தன்னை
கடித்து விடக் கூடாது
என
ஆசைப் படுகிறது.
*********************************************************
2.
புலி என்று தெரியாமல் புத்தனும்
புத்தன் என்று தெரியாமல்
புலியும்
கண்மூடிக் கிடக்கின்றன
ஆசையற்ற கனவில்.
*********************************************************
3.
புத்தகங்களுக்கு இடையே
தொலைந்து போன
புத்தரைக்
கண்டுபிடிக்க
எல்லோரும்
ஆசைப்படுகின்றனர்.
*********************************************************
4.
காலடியில் தலை
விழுந்த
புத்தன்
கழுத்தோடு தலை ஒட்டிக்கொள்ள ஆசைப்படுகிறார்.
*********************************************************
5.
சில
புன்னகை நினைவுகளை
இதயத்திற்கும்
அதன்
மிச்சத்தை
கண்ணீர் நிறைந்த
கண்களுக்கும்
கொடுத்துவிட்டு
கடந்து போகிறது
காலமும்
கவிதையும்…
*********************************************************
எழுதியவர் :
✍🏻 – ச. பாரதி பிரகாஷ்,
சின்னத்தடாகம்,
பெரியநாயக்கன்பாளையம்,
கோயம்புத்தூர்.
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
