சா.சமீமா சிரின் கவிதைகள்
உருமாற்றம்
நாட்டின் வளர்ச்சிக்கு மாற்றம் தேவை
மாறிக்கொண்டு தான் இருக்கிறது
அறுவடை நிலங்கள் ஆலைகளாகவும்
ஆறுகள் அடுக்குமாடிகளாகவும்
ஆங்காங்கே காட்டு விலங்குகள்
அகதிகளாகவும்.
**********************************************
எந்திர ஓட்டம்
ஓட்டத்தால் வாழ்வினை கழிக்கும்
எந்திர மனிதர்கள் சற்றே நிற்கிறனர்
ஒவ்வொரு மகிழுந்தின்
கண்ணாடிகளையும் தட்டியபடி
ஓடத் தொடங்கினர்
பசி தீர்க்கும் வழியறியாத யாசகர்கள்
டிராபிக் சிக்னலில்.
**********************************************
வசந்த நிகழ்வு
ஆனந்தத்தோடு விறகு எரிக்கிறாள்
பசியின் மரணத்திற்கு
நீண்ட நாட்களுக்குப் பின்
சமைக்கும் ஏழைப் பெண்.
**********************************************
கருப்பு தினம்
அமாவாசை நாளில்
துக்கம் அனுசரித்தது
நிலவின் ஒளியை தொலைத்த
ஏழைவீட்டுக் கூரையின் ஓட்டைகள்.
**********************************************
வியாபார யுக்தி
“ஆண் இவன்” என ஏலமிட்டு
எப்படியோ விற்றுவிடுகிறாள்
தன் மகனை
வரதட்சணை சந்தையில் தாய்.
எழுதியவர் :
– சா.சமீமா சிரின்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
