அ.சீனிவாசன் எழுதிய முரண் – குறுங்கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

அ.சீனிவாசன் எழுதிய முரண் – குறுங்கவிதைகள்

முரண் – குறுங்கவிதைகள்

***********************************************************************************

1. யார் ஜெயித்தது?

கவுரவர் போரில் இறந்தனர்.
பாண்டவர் போருக்குப் பின்னர் இறந்தனர்.
அட யார் தான் ஜெயித்தது, கிருஷ்ணா!?

***********************************************************************************

2. நடைபாதை

மதியம் சாப்பிட்டவன் செரிக்க
இரவு பசிக்க வேண்டுமென ஓடியவன்.
இருவரையும் இலகுவாகத் தாண்டிச் செல்ல
காலையிலிருந்தே பசியோடு சுருண்டு கிடந்தான் இன்னொருவன்.

***********************************************************************************

3. தாய்ப்பசி

பசிக்கிறதென அழுத குழந்தைக்குப்
பொம்மையைக் கொடுத்தவள்—
கொஞ்ச நேரத்தில் தானும்
அந்த விளையாட்டில் இணைந்தாள்.

***********************************************************************************

4. பசி–பணம்

பணத்தோடு பணம் சேரட்டும்,
பணக்காரன் பணக்காரனோடு சேரட்டும்,
ஏழை ஏழையோடு சேரட்டும்—
பசி ஏன் எப்போதும் பசியோடே சேரவேண்டும்?

***********************************************************************************

5. மியாவ்

பரிசோதிக்கும் போதே திடீரென இறந்தது குட்டிப் பூனை.
“Sudden cardiac arrest” என்றேன்.
தாய்ப்பூனையின் மியாவ் நன்றாகப் புரிந்தது.
ஆனால் மனிதனின் புலம்பல் சுத்தமாய் புரியவில்லை.

***********************************************************************************

எழுதியவர் : 

✍🏻 அ.சீனிவாசன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. Rajkumar

    Interesting sir, now only i saw your writings sir and i hope i will definitely connect with your books, all the best sir.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *