ச.சத்தியபானுவின் ஹைக்கூ கவிதைகள்
*******************************************
வழியெங்கும் கால்தடம்
தேடி அலைகிறது தாயைப் பிரிந்த
குருவியொன்று
*******************************************
காற்றின் வேகத்தை
கூட்டிக் கொண்டே சென்றது
ஒற்றை பனைக்காற்றாடி
*******************************************
சொல்லத் தவறிய வரிகள்
கிழிந்த புத்தகத்தின் பின்னால்
ஒட்டிக் கொண்டு தான் இருக்கின்றன….
*******************************************
இருள் சூழ்ந்த வானில்
வட்டமிடுகிறது
அன்று வந்த நிலவொன்று….
எழுதியவர் :
✍️ – ச.சத்தியபானு
சென்னை
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
