நட்பு சிறுகதை – நிரஞ்சனன்

நட்பு சிறுகதை – நிரஞ்சனன்




அவன் பெயர் சிவா, திருமண வயது. மென்பொருள் பொறியியல் வேலை செய்கிறான்….. கலகலவென இருக்க மாட்டான், சட்டுன்னு யாரிடமும் பேசி விட மாட்டான், தேவை என்னவோ அதுக்கு மட்டும் தான்….. தன் FB உள்டப்பியுள் கூட அப்படித்தான், இவனிடம் பழகுபவர்களும் இவன் இப்படித்தான் என ஒரு எல்லையோடு இருந்து விடுவார்கள், இவன் அந்த எல்லைக்குள் தான் இருப்பான்.

இவனுக்கு ஒரு பெயரின் மீது ஈர்ப்பு, தன் முகப்புத்தக கணக்கில் அந்த பெயர் கொண்ட நபர்களை மட்டுமே அதிகம் சேர்த்து இருப்பான், வயதோ பாலினமோ பற்றிய, கவலை இல்லை. அதில் ஒரு கணக்கின் மீது ஈர்ப்பு, காலையில் முழிப்பது முதல் இரவில் இமை மூடவது வரை அனைத்தும் சொல்லி விடுவான், எதிர்பக்கமும் இவன் சொல்லுவதை கேட்டுக்கொண்டே இருப்பார்.

சில நேரம் சிரிப்பு, விவாதம் அறிவுரை என சென்றுக் கொண்டே இருக்கும். சிவா தன்னை பற்றிய விசயங்கள் அனைத்தும் கூறுவான் ஆன அவர்களை பற்றி எதுவும் கேட்க மாட்டான், அவர்களா சொன்னால் கேட்டுக் கொள்வான். இருப்பினும் அவரைப் பற்றி அவர் எதுவும் சொன்னது இல்லை, இவனும் கேட்பதில்லை.

பேசியது கிடையாது, எழுத்து மெசேஜ் மட்டுமே, ஆடியோ, இமேஜ் கூட கிடையாது…. இவன் அனுப்புவான் அவளிடம் இருந்து எதுவும் வராது….அது உசார் என்றும் கொள்ளலாம்….. ஆன சிவா எல்லை மீறவே மாட்டேன், அவர் திரும்ப திரும்ப உள்டப்பி வருவதில் இருந்து தெரிந்து கொண்டான், நம் எல்லையில் தான் நாம் இருக்கிறோம் என…..

அலுவலக பணி விசயமா வெளியூர் செல்ல அலுவலகம் நிர்பந்திக்க இவனும் கிளம்ப, எப்படி போகிறான் டிக்கெட் நம்பர் என எல்லாம் சொல்ல, எதிரில் இருப்பவரும் பார்த்து போ என கூற….. இவனும் கிளம்பி ரயில் நிலையம் வந்து தன் தொடர்வண்டி தேடி தன் இருக்கையில் அமர, ஏதோ ஒரு உள்ளுணர்வு, தன்னை தேடி யாரோ வாரங்க என்ற எண்ணம்…..

வண்டி விட்டு வெளியே வந்தான், அப்பெட்டியின் பயணிகள் பட்டியல் ஓட்டி இருந்தது, கவனித்தான்…. அதில் இவன் உள்டப்பியில் பேசும் பெயரும் இருந்தது சிறு மாற்றத்துடன்…… ஒரு வேளை அவரா இருக்குமோ என சந்தேகம் வர, தன் இருப்பை உள்டப்பி வழியா அந்த கணக்குக்கு அனுப்பினான்…..

பதில் இல்ல, பார்க்கவும் இல்ல….. வேர யாராவது இருக்கும், பல பேருக்கு ஒரு போல் பெயர் இருக்குதே, நம்ம கணக்குல கூட நெறய பேர் இருக்காங்க என தன்னை தேற்றிக் கொண்டு இருக்கையில் அமர்ந்து ஜன்னல் பார்த்தவன், பார்த்தபடியே இருந்தான்.

அருகில் யார் அமர்கிரார்கள் என்பதை கூட கவனிக்க வில்லை, வண்டி கிளம்பியது, தென்றலின் வருடல் என வேடிக்கை பார்த்தவனை ஒரு கை உலுக்கியது, யாரடா என திரும்பினாள்,… அதுவரையில் மொபைல் எடுப்பதை தவிர்த்து இருந்தான்…..

ஒரு பெண், அவ்ளோ கலர் கிடையாது ஆனால் முக லச்சணம்,….. என்ன என்றான்? பின் பக்கம் கை நீட்டினாள்…..

பின்னாடி டிக்கெட் பரிசோதகர், தன் டிக்கெட் தேடி காண்பித்தான், எங்க போற என்றார் , பதில் அவளிடம்….

கேன்டீன் ஆள் வந்தார், சாப்பாடு ஆர்டர் என்றான்? அவள் ஆர்டர் கொடுத்தாள் இவனுக்கும் சேர்த்து, விழித்துக் கொண்டு இருந்தான்…

எதுக்கு எனக்கு சேர்த்து நீங்க சொல்லுறீங்க கேட்க வந்தவன், நீங்க அவங்களா என யோசித்த போது அலைபேசி சிணுங்க, இதை பார்க்காமல் விட்டு விட்டோமே என அழைப்பை முடிந்ததும் உள்டப்பி, வரிசையா தகவல் என் தங்கை வருகிறாள் நீ போகும் ரெயிலில், உன் பெட்டி தான், உன் பெயர் சொல்லி இருக்கேன்….. பார்த்துக் கொள் என…..

அப்புறம் தான் அவனுக்கு புரிந்தது, நம்மோட நம் தோழியின் சகோதரி என…..

பின் பேச்சு ஆரம்பிக்க, அவள் பேச தொடங்கினால், எங்க ஊர் இது, நாங்க எல்லாம் யார்….நான் , எங்க ஊர்க்கு வீட்டுக்கு தான் போகிறேன்….. என் அக்கா தான் அவள், அவள் ஒரு விபத்து அப்புறம் தன் செவி/பேச்சு திறன் இழந்து விட்டாள், அதில் இருந்து மீழ நாங்க பார்க்காத மெடிசின் இல்ல….. ஆன இப்போ கொஞ்ச நாள அவளின் நடவடிக்கைகளில் மாற்றம் கண்டோம்….

என்னிடம் மட்டுமே கூறுவாள், தாய் தந்தைக்கு அவள் மாறியதே மகிழ்ச்சி…. நீங்க அவளை பார்த்தது இல்லலா, காண்பிக்க வா என்றாள்….. இவன் வேண்டாம் என மறுத்து விட்டான்…..

இவளுக்கு சிறு நெருடல், அக்காவின் நிலை தெரிந்தவுடன் கழட்டி விட பார்க்கிறான் போல, இவனை போய் அக்கா பெருமை அடிக்கிறாளே….. இந்த ஆண் ஜென்மங்கள் இப்படித் தான் என நொந்து கொண்டாள்…..

பிரயாணம் முடியும் முன், முந்தைய நிலையத்தில் இவன் இறங்கி விட்டான், ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சென்று விட்டான்…. போன போறான் என்று இவளும் இருந்து விட்டாள்….. அக்காவிடம் இருந்து ஒரு மெசேஜ் “come soon….an excitement waiting for you ….. ” அக்காவின் சந்தோசமான மெசேஜ் அச்சூழ்நிலையை மாற்றியது…. என்னவா இருக்கும் என கூட யோசிக்க வில்லை அவள்…..

வழக்கம் போல தன் வீடு போக, அங்கே வீட்டில்…. நடுவில் இவன், பக்கதில் அக்கா, அம்மா, அப்பா எதிரில் தம்பி என வீடு ஒரே சந்தோச மழை….. பல வருடம் கழித்து அனைவரின் முகத்தில் பார்த்த சந்தோசம்….

இவளுக்கு அப்போ தான் புரிந்தது, இவன் முன்னாடியே இறங்கியது தனக்கு முன் இங்கு வருவதற்கு என்று…….இவளின் பதில் ஆனந்தக் கண்ணீராக மட்டுமே இருந்தது….

நல்ல நட்பும் நல்ல எண்ணமும், நல்லவை தான் செய்யும், என்றென்றும்.

நிரஞ்சனன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *