மூன்று மாதத்திற்கு
முன்பு நிகழ்ந்த
மரணம் ஒன்றை
விசாரிக்க
குடும்பத்துடன்
வீட்டிற்கு வந்தார்
உறவினர் ஒருவர்
தகப்பனின்
உயிரை
தன் கண்ணீர் கோடுகளால்
வரைந்து வரைந்து பார்க்கும்
என் மனைவியை
அழவைக்காமல்
எதையும் நினைவூட்டாமல்
பேசி சென்றவர்
நிகழ்காலத்தை
அதிநிதானத்தில்
கையாள்கிறார்
என்று மட்டும்
வரையறுத்தல் தகுமா?
துக்கச் சொற்களற்று
துக்கத்தைப் பகிர்தல்
என்பது
நிகழ்ப்பொழுதைப்பாதுகாத்தல்
எதையுமே கட்டத் தெரியாமல்
எதையுமே
அவிழ்க்கத் தெரியாமல்
தொளதொள சொற்களால்
காலத்தைக கடப்பர் அனேகர்
அதிகம் பேசாமலேயே
உங்களை
இருகக் கட்டியும்
ஏதோ ஒன்றை
அவிழ்த்துவிடவும் செய்ய
உங்கள்
இல்லத்திற்கு
யாராவது வந்திருக்கின்றனரா?
எங்கள்
வீட்டிற்கு வந்த உறவினர்
இந்நேரம்
ஒரு மிகப்பெரிய
சந்தோசமான
ஒன்றை
மிகச்சாதாரன தொனியில்
பகிர்ந்து கொண்டிருப்பார்
யாரிடமாவது
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

