நகரத்திற்குள் பொதுவாக ஊர்ந்து செல்லும் பேருந்து நகரத்தைக் கடந்ததும் வேகமாக செல்லத் தொடங்கும்.
எங்கெங்கே என்னென்ன இருக்கிறது என்று மெதுவாக பார்த்துக் கொண்டிருந்த நாம் பேருந்து வேகமாக செல்லத் தொடங்க முழுமையான பயணியாகி விடுவோம்.
அதுபோல, தொடக்கத்தில் மெதுவாக ஒவ்வொன்றையும் அறிமுகப்படுத்தும் இந்நூல் சிறிது கடந்ததும் அசுர வேகத்தில் தன் வேகத்தில் பயணிக்கிறது .
புத்தகத்தை படிக்கும் போது நம்மை முழுமையாக பயணி ஆக்கி விடுகிறது.
குறிப்பாக 12 ஆம் நூற்றாண்டிற்கே சென்று வந்தது போல் ஒரு உணர்வு.
ஒரே ஒரு நபரின் பின்னணியைப் படிக்க ஆவலாகி ஒரு நூற்றாண்டின் கதையையே படித்துவிட்ட திருப்தி ஏற்பட்டு விடுகிறது.
கலாச்சாரம் இங்கே சரிந்தது, இங்கே பரிமாறப்பட்டது, இங்கே காணாமல் போனது என்று எல்லாமே இந்த புத்தகத்தில் அடங்கி விடுகிறது.
புத்தகத்தை படித்து முடித்ததும் அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் என்ன நடந்திருக்கும் என்று நம்மை சரியாக யூகிக்க வைத்து விடுகிறது.
வரலாற்றில் பல மனிதர்களைப் பார்த்திருப்போம்.
ஒரு மனிதன் பல வரலாறுகளுக்கு சொந்தக்காரனாகி இருக்கின்றான் செங்கிஸ் கான்.
புத்தகத்தை முடிக்கும் போது, கனத்த இதயத்துடன் வெளிவருவது மட்டும் உறுதி.
நூல்: செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும்.
ஆசிரியர்: ஜேக் வெதர்ஃபோர்ட் (ஆசிரியர்), சா.தேவதாஸ் (தமிழில்)
பதிப்பகம்: எதிர் வெளியீடு
விலை: 499/-

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

