குஜராத் திரைக்குப் பின்னால் (Gujarat Thiraikku Pinaal)

ஆர்.பி.ஸ்ரீகுமார் எழுதிய “குஜராத் திரைக்குப் பின்னால்” நூல் அறிமுகம்

குஜராத் மாநில காவல்துறை, உளவுப் பிரிவில் கூடுதல் காவல்துறைத் தலைவராக இருந்த இந்நூலின் ஆசிரியர் ஆர்.பி. ஸ்ரீகுமார் I.P.S அவர்கள் குஜராத்தில் 2002ல் மதவெறிக் கும்பலால் இஸ்லாமிய சொந்தங்கள் நரவேட்டை ஆடப்பட்ட போது களத்தில் நின்று குஜராத் காவல்துறை, அரசு ஆகிய ஆளும் வர்க்க அதிகாரத்தை எதிர்த்து நின்று பல உயர்மட்ட குற்றவாளிகளின் முகத்திரையை கிழித்தெறிந்தார். அதனால் அவர் பட்ட கஷ்டங்கள் நிறைய. எதையும் பொருட்படுத்தாது பாதிக்கப்பட்ட மக்களுக்காக நின்ற மாபெரும் மக்கள் சிந்தனையாளர். அவர் எழுதிய நூல் தான் இது. உள்ளே ஏராளமான மனக்குமுறல்கள் கொட்டிக் கிடக்கு. இன்றைய நாளில் நல்லதொரு தீர்ப்பு பாதிக்கப்பட்ட குஜராத் மக்களுக்கு ஆதரவாக கிடைத்திருப்பதால் மீண்டும் வாசிக்க இந்நூலையும் கையிலெடுத்துள்ளேன். தீஸ்தா செதல்வாட் அவர்களின் நூல் போன்றே இந்நூலையும் மிகச்சிறப்பாக மொழிப் பெயர்த்திருப்பார்கள் தோழர்கள் ச.வீரமணி மற்றும் தஞ்சை ரமேஷ் ஆகியோர். தோழர்களுக்கு மனமார்ந்த நன்றி!

குஜராத் மதவெறிக் கும்பலை நாட்டு மக்களுக்கு  அம்பலப்படுத்திய ஆசிரியர் அவர்கள் எழுதிய முன்னுரையில் ஒரு பத்தி மட்டும் அப்படியே இங்கே பதிவிடுகிறேன்.

“குஜராத் படுகொலைகள் என்பவை ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்க
வேண்டிய அரச நீதிக்கும் (கொள்கைகளுக்கும்), மகாத்மா காந்தி கனவுகண்ட
ராம ராஜ்யத்திற்கும் விரோதமானவைகளாகும். வேதங்கள், உபநிஷத்துகள்,
மகாபாரதம் மற்றும் வடமொழி இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ள
அரச நீதியின் அடிப்படை மாண்புகள் குறித்து விளக்கிட ஒரு முயற்சி
மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, அடிக்கடி, தன்னை ஒரு இந்து
தேசியவாதி என்று அறிவித்துக்கொள்வார். இதன் பொருள் என்னவென்றால்,
முதலிர் அவர் ஓர் இந்து, அடுத்து அவர் ஒரு தேசியவாதி என்பதாகும்.
ஆனால் 2002இல் குஜராத்தில் நடைபெற்ற சம்பவங்களும், 1992இல் (1528இல்
கட்டப்பட்ட) பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவமும் பகவத் கீதையில் ஞான
கர்ம சந்யாச யோகம் என்னும் தலைப்பிட்டுள்ள 4ஆவது அத்தியாயத்தில்
உள்ள 11ஆவது ஸ்லோகத்திற்கு எதிரான வெட்ககரமான செயல்பாடுகளாகும்.
அதில் கூறப்பட்டிருக்கும் ஸ்லோகம் பின்வருமாறு: “யாவர் என்னை
எங்ஙனம் வேண்டுகிறார்களோ, அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன்.
பார்த்தா, மனிதர் யாங்கணும் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.” மிகவும்
கொடூரமான குஜராத் கலவரங்கள் குறித்தோ, பாபர் மசூதி இடிப்பு குறித்தோ
எவரேனும் கேள்விகள் கேட்டால் ஓர் உண்மையான இந்து பக்தன் நிச்சயமாகத்
தலைகுனிவான்”

இந்நூலை இக்காலத்தில் அனைவரும் வாசிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!

நூலின் தகவல்கள்: 

நூல்: குஜராத் திரைக்குப் பின்னால்
ஆசிரியர்: ஆர்.பி.ஸ்ரீகுமார், ச.வீரமணி
விலை: ₹.190
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்

அறிமுகம் எழுதியவர்: 

இரா. சண்முகசாமி 
புதுச்சேரி.




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *