1. மூங்கில் காடே
புல்லாங்குழலாகியது
வண்டுகளின் ரீங்காரம்!
2. கொழுந்து விட்டெறிந்த
வயிற்றுத்தீயை அணைத்தது
கைப்பிடிச்சோறு!.
3. கொட்டிய மழையிலும்
அழியாத வண்ணங்கள்
வானவில்!.
4. பொதுத்தேர்வு முடிவுகள்
தூக்குமேடையாகின
மின்விசிறிகள்!.
5. விலை போகாத பூக்கள்
வாடியது
வயிறு!.
6. எவ்வளவு உடைத்தாலும்
உண்மையை மட்டுமே சொல்கிறது
கண்ணாடி!.
7. குளத்தில் தூண்டில் வீசியதும்
மாட்டியது
நெகிழி!.
8. விழிநீரின் சுமை தாங்காமல்
கனத்தது
இதயம்!.
9. ஒட்டாத பக்கங்களுக்கும்
ஒட்டிய வயிறும் காத்திருந்தன
உலைக்கு!.
10. நிலத்தை விற்றதும்
வாசலில்
கடன்காரன்!.
– ரா.சிவக்குமார்
சென்னை
9884824086
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

