குளமும் இல்லை
தவளையும் இல்லை
தாவி அலைவுறும் மனது.
+++
நீ வந்ததும் எழுச்சி
மறைவதும் நெகிழ்ச்சி
சூரியனே …
+++
மொட்டைமாடியில் பறக்கும் கொடிகள்
சுரையும், பூசணியுமாக
குடிசையைக் காத்த நன்றி…!
+++
பூத்தது அழகு
உதிர்ந்து கிடப்பதும் அழகு !
மஞ்சள் கொன்றையே ..!
+++
மாறின இறக்கைகள்
இரு கைகளாக ..
மாறவில்லை பறக்கும் மனம் !
+++
வளைந்து நெளிந்து நின்று
உயிர் வாழும் ..
மரமும் ..!
+++
தாயிழந்தவருக்கு தாய் !
காலமறிந்து ஊட்டும்
கனிமரங்கள் !
+++
புழுங்கும் மீன்களுக்கு
விசிறிடும்..
பனையோலை நிழல் !
+++
வண்ணத்துப்பூச்சிகளும் பறவைகளும்
ஓவியங்களாக ..
கான்கிரீட் பூங்கா !
+++
கலைத்திடாதே காலைக்காற்றே ..
இலைகளில் ,பூக்களில்
விளைந்த முத்துக்களை ..!
+++
அவர்கள் சோர்ந்து இறங்குகிறார்கள் ..
இவர்கள் மகிழ்ந்து ஏறுகிறார்கள் ..
நகரும்படிகட்டுகள் நவிலும் வாழ்வியல் !
+++
இறந்தபாம்பாக நதி..!
ஊர்ந்திடும் பாம்புகளாக சாலைகள்
விமானத்துப் பார்வையில் !