எட்டிப்பார்க்கும் குழந்தை
எட்டுக்கட்டையை மிஞ்சுகிறது
தாலாட்டு.
கட்டிய புடவையில்
கையசைக்கும்
இளம் புல்லாங்குழல்
உயர்ந்த பனைமரங்கள்
இறக்கியும் தீரவில்லை
ஒற்றயடி பயணபோதை.
நீளமான நடைபாதை
உச்சி வெயிலில் உடன்வரும்
கூன் விழுந்த நிழல்.
புத்தன் பேரனின்
புதிய துண்டிலில் சிக்கியது
நிலா.
திரைக்குள் படர்ந்த இருள்
வேகமாக ஒளியூட்டுகிறது
மின்னிமினிப்பூச்சி.
ஆளில்லாத வாகனம்
அடைக்கப்பட்ட நெகிழியில்
ஐந்தறிவின் தாகம்.
தனிமையில் பறவை
பொழுது சாயும் நேரத்தில்
நிழலோடு உறவாடும் இருள்.
எடுத்தெறிந்த கல்லில்
எத்தனை காயங்கள்
குளத்தில் அலைகள்.
மௌனம்
மொத்தமாக சொல்லிவிடுகிறது
கண்கள்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.