ஹைக்கூ கவிதைகள் பேரா. முனைவர் எ. பாவலன் haiku kavithaikal by pavalan

ஹைக்கூ கவிதைகள் – பேரா. முனைவர் எ. பாவலன்


நாய் குறைக்கிறது
கூட்டம் சேர்வது
அதற்கு பிடிக்கவில்லை

——
இப்பொழுதெல்லாம் சாதி பார்ப்பதில்லை
உண்மைதான்
சாதி சாதியைப் பார்க்கிறது.

——-
உடை மாற்றும் நிலவு
கூச்சப்படும் வேளையில்
அம்மாவாசை இரவு

——-
ஒரு மாயக்காரன் கையில்
சிக்கிக் கொண்ட பொம்மை
இந்தியா

——-
மோடி மஸ்தான் வேலை
பலிக்காது
நிச்சயம் மானுடம் வெல்லும்.

—-
சூரியனையே விழுங்குவதாக இருந்தாலும்
கொஞ்சம் அவகாசம் தேவை
இரவுக்கு…

——
அவர்கள் பொக்ரானை நம்புகிறார்கள்
நாங்கள்
வாக்குச்சீட்டுக்குக் காத்திருக்கிறோம்

——
வழக்கு நடைபெறவில்லை
தீர்ப்பும் வழங்கவில்லை
சிறைக் கம்பிக்குள் பறவைகள்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 


Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *