1)
ஒடித்த பறவை இறகு
இதமாய் இறங்குகிறது
காதுகளில்
2)
இரட்டை விரல்களின் நடுவே
சிம்மாசனம் போட்டது
சிகரெட்
3)
உலுக்கிய கைகளில்
முத்தமிட்டு அமர்ந்தன
சரக்கொன்றை மலர்கள்
4)
அழுத்தியதும் வெடித்தது
ஏழைகளின் பட்டாசு
எருக்கம்மொட்டு
5)
வரிகள் இருந்தும்
கவிதை இல்லை
உதடுகள்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.