கவிமோவின் ஹைக்கூ
1
அடர்ந்த காட்டிற்குள்
தன்னந்தனியாக வருகிறது
ஒத்தையடிப் பாதை.
2
மெல்ல உறங்குகிறது
தேகம் தின்ற களைப்பில்
மயானத் தீ.
3
கோவில் திருவிழா
வறட்சியால் வாடும்
மேடை நாடகம்.
4
காட்டு வழியே
அசைந்தாடி வருகிறது
கையில் தூக்குச்சட்டி.
5
உணவின்றி வாடுகிறது
பள்ளிக்கூட விடுமுறையில்
செம்பருத்தி.
6
வகுப்பறையில் வட்டமிட்டது
கோடை விடுமுறையில்
சிலந்திப்பூச்சி.
7
கிழக்கில் சூரியன்
வீட்டிற்குள் வருகிறது
மரத்தின் நிழல்.
8
நஞ்சையில் நடவு
வரப்பில் உறங்குகிறது
கைக்குழந்தை.
9
ஏர்க் கலப்பையோடு
வடம் பிடித்து இழுக்கின்றன
நிலத்தில் மாடுகள்.
10
தலைகீழாகத்
தெரிகிறது தண்ணீரில்
அக்கரை மரங்கள்.
எழுதியவர்
– கவிமோ
கம்பம்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அருமை வாழ்த்துகள்…..