குழந்தை கைக்கு
அகப்படாமல்
விளையாடுகின்றன ஈக்கள்!
*********
பௌர்ணமி நாளில்
கடற்கரை மணலில்
தவமிருக்கும் படகு
********
நிழலாக படகுகள்
கடலலை மேலே
நிலவின் ஒளியில்!
********
கதை சொல்கிறது
பழைய வீட்டு திண்ணை
அம்மா இல்லை!
********
கிணற்றடியில்
கதை பேசும்
சிட்டுக்குருவிகள்!
********
தூளியில் ஆடும்
பிள்ளைச் சத்தம்
அம்மாவின் சீலை!
*******
சக்கரமில்லா நடைவண்டி
பரணில் இருக்கிறது
பழைய வீட்டில்!
பரணில் இருக்கிறது
பழைய வீட்டில்!
********
சிட்டுக்குருவி கிரீச்சிட்டது
கூடில்லா கருகிய கிளையில்
வெந்து தணிந்தது காடு!
கூடில்லா கருகிய கிளையில்
வெந்து தணிந்தது காடு!
கவிதா பிருத்வி
தஞ்சை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


அருமை
கவிதையின் வரிகள், மனத்திரையில் உயிர் ஒவியமாக தெரிகிறது…
👌 அருமையான படைப்புகள்…
வாழ்த்துக்கள்…