தடித்த ஹெட்போன்களை
தாங்கும் செவிகளுக்கு
இசையும் பாரமாகுமோ?
தன்னையே சுற்றிக்கொண்டும்
துளியும் காற்றின்றி
தவித்தது மின் விசிறி!
கால்கள் இருந்தும்
கடக்காது இருக்கிறது
ஆற்றின் பாலம்!
நித்தம் கிழிக்கப்பட்டும்
நிரந்தர புன்னகையில்
நிலையாய் நாட்காட்டி!
ஊரே உறங்கும் நேரத்திலும்
ஓயாது உழைக்கின்றன
கடிகார முட்கள்!
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.