ஹைக்கூ கவிதைகள் - பா.ஶ்ரீகுமார் | ஹைக்கூ கவிதைகள் | கவிதைகள் | https://bookday.in/

ஹைக்கூ கவிதைகள் – பா.ஶ்ரீகுமார்

 

ஹைக்கூ கவிதைகள் – பா.ஶ்ரீகுமார்

பறவையின் தடம் நீரில் பதியுமா?

 

வாழ்க்கைப் பாதை முழுவதும்
முட்செடிகள் அவர் விற்பதோ
பூத்துச் சிரிக்கும் பூஞ்செடிகள்

 

*
கால நதியின் ஓட்டம்
வெவ்வேறு திசைகளில் செல்கிறது
அவரவர் வாழ்க்கைப் பயணம்

*
ஆகாயத்தில் சுவடு பதிக்க இயலாத
பறவை நீரில் விட்டுச் செல்லுமா
தனது தடத்தை?

 

*
வீழ்ந்த ஒற்றை இறகின்
மீது மழை விட்டுச் செல்கிறது
தன் கண்ணீர் துளிகளை?

 

*

உடைந்த கடிகாரம்
இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது
எதற்கும் உடைபடாத காலம்

 

*

பிரிவின் கனத்தால்
அறுபடுகிறது அன்பின் மாயவலை
துளிர்விடுகிறது கண்ணீர்த் துளி

 

*

ஒரு சிறு துண்டு இரைக்கு
ஆசைப்பட்டு தூண்டிலில் சிக்கும்
மீன்கள்

 

*

எப்போதாவது வரும் ரயிலுக்காக
எப்பொழுதும் காத்திருக்கின்றன
மௌனமாய் தண்டவாளங்கள்

 

*

இரவு வானின்
நூலறுந்த பட்டம்
நிலா

 

*

துடுப்புமில்லை
படகோட்டியில்லை வானில்
மிதக்கிறது பிறை நிலா

 

*

வலையில் பிடிப்பட்ட மீனுக்குள்
இன்னும் அடித்துக் கொண்டிருக்கிறது
கடலின் அலை

 

*

காடு மலை கல் முள்
கடந்து வரும் நீரின்
காயம் யார் அறிவார்?

 

*

குளத்தின் பெரும் மௌனத்தை
அசைத்துவிடுகிறது
ஒரு சிறு கல்

 

எழுதியவர் 

 

ஹைக்கூ கவிதைகள் - பா.ஶ்ரீகுமார் | ஹைக்கூ கவிதைகள் |  கவிதைகள் | https://bookday.in/

பா.ஶ்ரீகுமார்

 

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *