மாலையின் பூக்கள்
சிதறிக் கிடக்கின்றன
கடைசி யாத்திரை.
இன்று வந்தவன்
நாளையும் வருவான்
சூரியன்.
முகம்மதுவும் மரிய சூசையும்
மனம் விட்டு பேசும் இடம்
சிவன் கோவில் தெப்பக்குளம்.
காதில் நுழைந்தது
இதயத்தில் அமர்ந்தது
சிம்மாசனக் கவிதை.
கிளிகள் பேசிக்கொண்டன
பார்த்துக்கொண்டிருந்தன
பழங்கள்.
மண்ணின் வாசம்
தெரியும்
மழை.
நடவு நட்ட பெண்ணின்
காலில் இருப்பது சேறு
அவள் போடுவாள் சோறு.
தன் பசி மறந்து
தெரு நாய்க்குச் சோறு போடுவான்
ஏழைச் சிறுவன்.
பூவும் பிஞ்சுமாக காயும் கனியுமாக
விருந்து படைக்கும்
மரங்கள்.
ஆடி அரவணைத்து
அனைத்தும் தரும்
இயற்கை.
வ.சு.வசந்தா
9840816840
சென்னை_92
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.