ஹைக்கூ கவிதைகள்
#1
துணைக்கு அழைத்தால்
எதிரியாய் நிற்கிறது
மனசாட்சி.
#2
வெட்டப்பட்ட மரங்களுக்காக
கிடைத்தது தீர்ப்பு
மின்கட்டண உயர்வு.
#3
அரச மரத்தின்
எட்டாக் கனிகள்
பிள்ளைக்காக ஏங்கும் தொட்டில்கள்.
#4
இருப்பை உறுதி செய்ய
கடன் பெற்று மிளிர்கிறது
நட்சத்திரங்கள்!!
#5
இதமான தீண்டலில்
எல்லாம் மாயமானது
தூக்கம்.
இரா.ஜெயந்தி,
பாடி, சென்னை.


Excellent
நீங்கள்
Daughter
Mother
Wife
Professor
Acuhealer
Artist
Fashion Designer
Today Haiku
Tomorrow Not a question mark
!!!!!!!!!!!!!!!!
ஐந்து ஹைக்கூக்களில் மூன்று ஹைக்கூக்கள் மனித உணர்வுகளை நெருக்கமாக பேசுகிறது.
முதல் ஹைக்கூ என்னை மிகவும் கவர்ந்தது.
வாழ்த்துகள்..