Haiku therippukal poem by Jananesan ஜனநேசனின் ஹைக்கூ தெறிப்புகள் கவிதை

ஹைக்கூ தெறிப்புகள் கவிதை – ஜனநேசன்



குளமும் இல்லை
தவளையும் இல்லை
தாவி அலைவுறும் மனது.
நீ வந்ததும் எழுச்சி
மறைவதும் நெகிழ்ச்சி
சூரியனே …
மொட்டைமாடியில் பறக்கும் கொடிகள்
சுரையும், பூசணியுமாக
குடிசையைக் காத்த நன்றி…!
பூத்தது அழகு
உதிர்ந்து கிடப்பதும் அழகு !
மஞ்சள் கொன்றையே …!
மாறின இறக்கைகள்
இரு கைகளாக ….
மாறவில்லை பறக்கும் மனம் !
வளைந்து நெளிந்து நின்று
உயிர் வாழும் …..
மரமும் ….!
தாயிழந்தவருக்கு தாய் !
காலமறிந்து ஊட்டும்
கனிமரங்கள் !
புழுங்கும் மீன்களுக்கு
விசிறிடும்…..
பனையோலை நிழல் !
வண்ணத்துப்பூச்சிகளும் பறவைகளும்
ஓவியங்களாக ….
காங்கிரீட் பூங்கா !
கலைத்திடாதே காலைக்காற்றே …
இலைகளில் ,பூக்களில்
விளைந்த முத்துக்களை ….!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *