ஹைக்கூ கவிதை – பா.திவ்யா செந்தூரன்

ஹைக்கூ கவிதை – பா.திவ்யா செந்தூரன்

 

  • சகதியில் வீழ்ந்தும்

தூய்மை வெளிப்பட்டது

முளைவிட்ட விதை.

 

  • ஒற்றுமையாய் நின்று

சிதறியவற்றை ணைத்தது

துடைப்பம்.

 

  • இருக்கு ஆனா

இல்லை

மதம் கொண்டாடும் இறைவன்.

 

  • அடை இருள் சூழ்ந்து

நெஞ்சில் பால் வார்த்தது

பஞ்சத்தில் மழை.

 

  • தேவைக்கு வர வாழ்ந்தேன்

தேவைக்கு மேல் வர மடிந்தேன்

மழை வெள்ளம்.

 

  •  காத்திருக்காது  ஓடுவேன்

தடுத்தால் பலன் உண்டு

மழைநீர் சேகரிப்பு

 

  •  உடை அணிந்தும்

  உடல் கூசியது

  ஆணின்  பார்வை.

 

  • திறமை செழித்திருக்க

  ஊடுருவிப் பார்த்தாய்

  பெண்மையை.

 

  • ம்மா…. என்று கூவ

சோகம் கவ்வும்

மடி கனத்த பசு.

 

  • வண்ணம் தீட்டி

வீடு சென்றான்

மேற்கில் சூரியன்.

 

  • கை தீண்டும் வண்ணங்கள்

கூந்தல் உதைத்து மறுத்ததேன்

விதவை பூக்காரி

 

  • சுதந்திரம் கிடைத்தது

அடைக்கப்பட்ட கூண்டில்

மருமகள் பாடு

 

  • அவளுக்கென எழுதப்பட்ட

தனிச் சட்டம்

மாமியார் அரசியல்

 

  • தெளிக்கப்பட்ட பன்னீர்

சந்தோஷத்தில் மூதாட்டி

பேரனின் சிறுநீர்

 

  • சுப்ரபாதம் அனல் பறக்க

மனதில் திகில் கிளம்ப

பெற்றோர்ஆசிரியர் சந்திப்பில்.

 

  • ஒரே இரவில்

கொத்துக் கொத்தாய் மடிந்தது

ஈசல்

 

  •  நீ தொட்டதெல்லாம்

          பொன்னானது

           விடியும் வேளை.

 

  • திரும்பத் திரும்ப அடிக்க

பறந்து தப்பிக்கும்

பந்து.

 

 

பா.திவ்யா செந்தூரன்

விழுப்புரம்

 

 

 

 

 

 

Show 10 Comments

10 Comments

  1. சாந்தி சரவணன்

    சிறப்பான ஹைக்கூ கவிதைகள் தோழர். வாழ்த்துகள்

  2. தீபிகா செல்வமு௫கன்

    அ௫மை

  3. சி.பேரின்பராஜன்

    சிறப்பான முயற்சி…
    தரமான விளைவுகள்..
    தங்களது ஹைக்கூவல்கள்…

    அவசரப்படாமல் தெரிந்தெடுத்து… தேர்ந்தெடுத்து அனுப்பினால்… அட …யாரது…என் திரும்பி பார்க்க வைப்பீர்கள்…

    சிறப்பு..👍👍👍

    • பா.திவ்யா செந்தூரன்

      தங்களது கருத்துக்கு நன்றி தோழர்

  4. Ragini

    Nice d..keep it up..u hv gud talent d.👍❤️

  5. Senthuran

    அருமை. 👏👏👌👌👌

  6. R.Rajamani

    சிறப்பான கவிதைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *