கடந்து போகிறவர்கள்
எல்லோரும்
இருளின் நிறத்தில்
நிழலாய் தென்படுகிறார்கள்
கருப்பில் தோய்ந்த முகங்களை
பார்க்கும் போதெல்லாம்
இரகசியமாக
எனக்குள் நானே
நகைத்துக் கொள்கிறேன்
என்னிடமிருந்த நகைப்புகள்
வலுவிழந்த பிறகுதான் புரிகிறது
இதுவரையிலும்
அடர்ந்த இருளுக்குள் நின்று
அன்னியரை பார்த்துக் கொண்டிருந்ததே
நான் தான் என்பது…
எனக்குள் நானே
வெட்கப் பட்டுக் கொள்கிறேன்
என்னுள் படர்ந்திருக்கும் இருள்
யாருக்கும் தெரியாதெனும்
நம்பிக்கையில்…
” தெரிந்தால் யாரும் நகைத்து விடுவார்களோ எனும்
மெல்லிய பதட்டத்தில்…”
2. “வெற்று வார்த்தைகள்”
ஐ. தர்மசிங்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.