ஒருவர் பின் ஒருவர்
சட்டையைப் பிடித்துக் கொண்டு
தொடர்வண்டி ஓட்டம்
மாலதி வீட்டு வாசலில்
அவளை இறக்கிவிடும்.
வரும்போது ஏற்றிக் கொள்ளும்.
பயணச் சீட்டுகள்
இல்லா இலவசப் பயணம்
வருபவரைப் பொருத்தே
பெட்டிகள் நீளும்.
முதலில் இருப்பவர்
கூக்கூ கத்தியவுடன்
பெட்டிகள் தயாராகிப்
பிடித்துக் கொள்ளும்
கடைசியில் இருப்பவன்
கையே பச்சைக்கொடி
அம்மாவோ அப்பாவோ
அடிக்க வரும்போது
பெட்டிகள் விபத்துக்குள்ளாகும்.
பிரிந்து ஓடிவிடும்.
சட்டைபோடவே
வழியில்லாத
சண்முகத்திற்கு மட்டும்
அங்கே இடமில்லை.
– வளவ துரையன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

