Ilakkiya Vyathi Poem by Samai. சாமையின் இலக்கிய வியாதி கவிதை

இலக்கிய வியாதி கவிதை – சாமை




நாட்டில் எது நடந்தாலும்
இலக்கியத்தில் ஒளிந்து கொள்ளும் நீ..
சமூக அநீதிகளை எதிர்கொள்ள
இலக்கியத்தையே ஆயுதமாக்கும் நாங்கள்

இலக்கியம் என்னும் ஓட்டுக்குள்ளிருந்து
ஊர்ந்து செல்லும் நத்தை நீ..
எழுத்தை கூர்மையாக்கி
எதிரிகளுடன் களமாடும் வீரர் நாங்கள்..

ஒன்றும் குறைந்து விடவில்லை,
அழகியல் என்று வலிந்து கட்டமைக்கப்படும்
உன் படைப்புக்கு ,
அழுக்கேறிய மனிதர்களின் குரலாக ஒலிக்கும்
எங்கள் வார்ப்பு

ஒளி வட்டம் எனும்
சிறு வலைக்குள் சிக்கிக்கொண்ட
சிலந்தியே.. நீ
இலக்கியவாதியென்கிறாய்
எங்களுக்கோ
இலக்கியவியாதி என்றே
கேட்டுத்தொலைகிறது..!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *