ilayavan siva kavithaikal இளையவன் சிவா கவிதைகள்
ilayavan siva kavithaikal இளையவன் சிவா கவிதைகள்

இளையவன் சிவா கவிதைகள்

நான் பாடிக்கொண்டிருக்கிறேன்
நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்
இடையில் காற்றும் குருவியும் மரமும்
எட்டிப்பார்க்கின்றன
சேற்றில் கலந்த நீரை அருந்தியதாலும்
புழுதி படிந்த பாதைகளின் முட்களில்
தடுமாறி நடந்த கால்களின் களைப்பினாலும்
அதிகாரம் தீண்ட மறந்த காலனியின்
அடிவயிற்றில் ஓயாது எரியும்
புறக்கணிப்புப் பசியினாலும்
எனது குரல் கிணற்றில் விழுந்த
எலியின் சத்தமென கேட்கக்கூடும்
கேளும் செவிகளுக்குள்
நீடிக்கும் மௌனத்தை
மொழிபெயர்க்கக்கூடும்
காற்றும் குருவியும் மரமும். 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *