Indian Love Poem By Navakavi. நவகவியின் இந்தியக் காதல்! கவிதை

இந்தியக் காதல்! கவிதை – நவகவி




கத்திமேல நடக்குதப்பா இந்தியக் காதல்- அது
பாலைவன வாழ்வில்சின்னஞ் சிறிய தூறல்!
சத்து அற்ற சவலைப் பிள்ளை!
நித்த நித்தம் அதற்குத் தொல்லை!
(கத்தி)
சாதி எனும் சுவர் மீது
காதல் எனும் பூனைஅது
எந்தப்பக்கம் தாண்டினாலும் சாக்கடை!
ஏதுங்க பாலடை?
ரொம்ப ரொம்ப எம்பி எம்பி
குதித்தால்தான் அதற்கு தம்பி
கிடைக்குது சிலநேரம் தேனடை!
தகருது மனத்தடை!
இந்தியக் காதல் ஒரு பேப்பர் ஜிகினா!
தங்க ஜிகினா இல்லை தகர ஜிகினா!
கோத்திர மூத்திரத்தில் சமைத்திடும் குருமா!
மூக்குல மோந்துபார்த்தா வாசனை வருமா!
சாதி-கூண்டுக்குள்ள
காதல்- மாட்டிக்கொள்ள
கூண்டினையே வானம்இன்னு நெனைக்கிறான்!
ஒட்டடையே நட்சத்திரமா மயங்குகிறான்!
கூமுட்டைய அடைகாத்தா
குஞ்சு பொரிக்குமா? நம்புறான்!
(கத்தி)
காலரா பேதி நோயும்
காலாவதி ஆகிப் போகும்!
ஜாதிபேதி மட்டும் இங்கே பெருக்குது!
சமத்துவம் சறுக்குது!
கழுத்துல மூணு முடிச்சு
கல்யாண தாலி முடிச்சு
தாலி முடிச்சு சாதிமுடிச்சா இறுக்குது!
சாதிபோட்ட சுருக்கிது!
ஒண்ணுரெண்டு சாதி மீறி கலியாணம்.
ஒழிவது எப்போஇந்த அவமானம்?
இந்தியக் காதல்மனம் சாதிமனம்.
கக்கூசில் கூட இருக்கு ஜாதிமலம்!
அட -பொய்யி நெல்ல
குத்தி- பொங்க வச்சி
சாஸ்திர சம்பிரதாய விருந்தடா!
சப்புக்கொட்டி சாப்பிடுறான் பாருடா!
ஊறுகாயா கூட அங்கே
உண்மைக் காதல் இல்லடா!
(கத்தி)

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *